உள்ளடக்கத்துக்குச் செல்

பாட்டுடைத் தலைவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாட்டு நூலில் போற்றப்படும் தலைவனைப் பாட்டுடைத்தலைவன் எனக் குறிப்பிடுவது வழக்கம்.

தமிழ்ப்புலவர்கள் பாடிய பாடல்கள் ஏதாவது ஒரு தலைவனையோ, பொருளையோ மையமாகக் கொண்டு பாடப்பட்டிருக்கும்.

கி.பி. முதலாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சங்ககாலப் புலவர்கள் தாம் பாடிய பாடல்களிலும், பாட்டுகளிலும் அரசர்களையும், வள்ளல்களையும் பாட்டுடைத் தலைவராகக் கொண்டனர்.

  • மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத்தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் அரசன்.
  • சிறுபாணாற்றுப்படை நூலின் பாட்டுடைத்தலைவன் ஓய்மானாட்டு நல்லியக்கோடன்.

அதற்குப் பின்னர் சமயம் தலைதூக்கி நின்ற காலத்தில் இறைவனை மட்டுமே பாட்டுடைத் தலைவராகக் கொண்டனர்.

பத்தாம் நூற்றாண்டில் தலைதூக்கிய பிற்காலச் சோழர் காலத்துக்குப் பின்னர் இறைவன், அரசன் ஆகிய இருவருமே பாட்டுடைத் தலைவராக மாறினர்.

  • கம்பராமாயணம் நூலின் பாட்டுடைத்தலைவன் இராமன்
  • மூவருலா நூலின் பாட்டுடைத்தலைவர்கள் விக்கிரம சோழன், அவனது மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன், பேரன் இரண்டாம் இராஜராஜ சோழன் ஆகிய மூவர்.

காலநிலைகளில்

[தொகு]

பாட்டுடைத் தலைவர்களாக விளங்கியவர்கள் எப்போது யாராக விளங்கினர் என்று மு. அருணாசலம் பட்டியல் ஒன்றைத் தருகிறார். [1]

காலம் பாட்டுடைத் தலைவர் சிறப்பு
சங்க காலம் தலவன் அல்லது வள்ளல் தெய்வத்தைச் சிறப்பித்தல் இல்லை
பாசுர காலம் தெய்வம் மட்டுமே மனிதரைச் சிறப்பித்தல் இல்லை
சோழர் காலமும் அடுத்த காலமும் சோழ அரசர் தெய்வத்தைச் சிப்பித்தலும் உண்டு
பிற்காலம் தெய்வமும் தலைவரும் தாழ்ந்தவரைச் சிறப்பித்தலும் உண்டு

மேற்கோள்

[தொகு]
  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12 ஆம் நூற்றாண்டு, பாகம் 1, தி பார்க்கர் தமிழியல் ஆய்வு நிறுவனம் (சென்னை 14) வெளியீடு, 1971, பக்கம் 12
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டுடைத்_தலைவன்&oldid=4333228" இலிருந்து மீள்விக்கப்பட்டது