பவளக்கொடி (1934 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவளக்கொடி
இயக்கம்கே. சுப்பிரமணியம்
தயாரிப்புமீனாக்சி சினிடோன்
நடிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
எஸ். எஸ். மணி பாகவதர்
எஸ். டி. சுப்புலட்சுமி
கே. கே. பார்வதிபாய்
வெளியீடு1934

பவளக்கொடி 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ். எஸ். மணி பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதுவே எம். கே. தியாகராஜ பாகவதரின் முதல் படமாகும். இப்படத்தில் 55 பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இத்திரைப்படம் 100 வாரங்கள் ஓடியது. .[1]

பாடல்கள்[தொகு]

பவளக்கொடி பாடல்கள் சில
பாடல் பாடியவர்(கள்) இராகம்/தாளம் பாத்திரம் குறிப்பு
தாளேன் மனஸ்தாபம் தயவே இல்லையா எம். கே. தியாகராஜ பாகவதர் காம்போதி/ஆதி அர்ச்சுனன் காந்தி லண்டன் சேர்ந்தார் மெட்டு
சத்தியமே நெறியாய்க் கொண்ட எம். கே. தியாகராஜ பாகவதர் விருத்தம் - அர்ச்சுனன் சுபத்திரையிடம் விடை கேட்டல்
சண்டாள மூர்க்கன் தருதலை மடையன் எஸ். டி. சுப்புலட்சுமி விருத்தம் அல்லி -
உன்னதமுடைய அண்ணா உரைத்தது வாஸ்தவந்தான் எஸ். டி. சுப்புலட்சுமி விருத்தம் - -

மேற்கோள்கள்[தொகு]

  1. சாரு நிவேதிதா, தீராக்காதலி, சென்னை உயிர்மை பதிப்பகம், முதற்பதிப்பு திசம்பர் 2008

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவளக்கொடி_(1934_திரைப்படம்)&oldid=3713809" இலிருந்து மீள்விக்கப்பட்டது