பல்பீர் சிங் சீசெவால்
பல்பீர் சிங் சீசெவால் | |
---|---|
![]() | |
பிறப்பு | 2 பெப்ரவரி 1962 சீசெவால், ஜலந்தர் மாவட்டம், பஞ்சாப் பகுதி |
தேசியம் | இந்தியன் |
பணி | நதி பாதுகாப்பாளர் |
அறியப்படுவது | சமூகப் பாதுகாப்பாளர் |
பல்பீர் சிங் சீசெவால் ( Balbir Singh Seechewal ) (பிறப்பு: 1962 பிப்ரவரி 2) இவர் ஓர் நிர்மலா சீக்கியராவார். இவர் இந்தியாவின் பஞ்சாபில் நதி மாசு எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கினார். குர்பானியின் சுற்றுச்சூழல் சாரத்துடன் தனது பயிரிடப்பட்ட சுய உதவி தத்துவத்தை இணைப்பதன் மூலம், 110 மைல் நீளமுள்ள காளி பெயின் நதியினை இவர் உயிர்த்தெழுப்பினார். [1] இவர் 2017 இல் இந்திய குடிமை விருதான பத்மஸ்ரீ விருதினைப் பெற்றுள்ளார். [2] இவர் "சுற்றுச்சூழல் பாபா" என்றும் அழைக்கப்படுகிறார். [3] [4]
2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இவர், இந்தியாவின் பஞ்சாபின் மால்வா பகுதி வழியாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட லூதியானா வழியாகவும் சென்ற ஒரு பருவகால நீரோடையான புத்த நுல்லாவைக் காப்பாற்றுவதற்காக போராட்டங்களை கையில் எடுத்துக் கொண்டார். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க பஞ்சாப் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பணிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நீர்வளத்தை வெளியேற்றுவதற்கான சிக்கலை தீர்க்க சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத்தை சீக்வால் தொடங்கினார்.
பஞ்சாபின் பிஸ்த் தோவாப் பகுதியில் 160 கி.மீ நீளமுள்ள பியாசு நதியின் துணை நதியான காளி பெயின் நதியை இவர் மீட்டெடுத்தார். 2007 ஆம் ஆண்டில் காளி பெயின் நீர் சுத்தம் செய்யும் திட்டத்தைத் தொடங்கியபோது, அது ஒரு சவாலான பணியாக இருந்தது என்று சீசெவால் கூறுகிறார். ஆனால், அதன் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்தவுடன், அவர்கள் உலர்ந்த வடிகாலாக மாறியிருந்த மற்றும் அதன் வரலாற்று மற்றும் மத முக்கியத்துவத்தை நீண்ட காலமாக மறந்துவிட்ட ஒரு குப்பைக் குப்பையாகக் குறைக்கப்பட்டிருந்த அந்த இடத்தை சுத்தம் செய்வதில் அவர்களும் இணைந்தனர்.
வாழ்க்கை[தொகு]
இந்தியாவின் பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மாவட்டத்தில் சீசெவால் என்ற இடத்தில் ஒரு சீக்கிய, விவசாய குடும்பத்தில் சனன் சிங் மற்றும் சனன் கவுர் ஆகியோருக்குப் பிறந்தார். [5] இவர் நகோடரில் உள்ள தயானந்த் ஆங்கிலோ-வேதக் கல்லூரியில் படித்தார். 1981 ஆம் ஆண்டில் கல்லூரியை விட்டு வெளியேறிய பின்னர் குங்குமப்பூ வண்ண உடையணிந்து துறவியானர். இரு முறை சீசெவால் ஊராட்சியின் தலைவராக இருந்தார்.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்[தொகு]

2017 மார்ச் 30 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (வலது) அவர்களிடமிருந்து பத்மஸ்ரீ விருதைப் பெற்ற பல்பீர் சிங் சீசெவால் (இடது). [6]
- டைம் பத்திரிகையின் சுற்றுச்சூழல் கதாநாயகன் என்ற தலைப்பு பெற்றுள்ளார்.
குறிப்புகள்[தொகு]
- ↑ Singh, Madhur (24 September 2008). "Balbir Singh Seechewal – Heroes of the Environment 2008 – TIME". Content.time.com. http://content.time.com/time/specials/packages/article/0,28804,1841778_1841781_1841808,00.html.
- ↑ "Punjab's green crusader: Punjab's green crusader Balbir Singh Seechewal gets Padma Shri | Chandigarh News". 26 January 2017. http://timesofindia.indiatimes.com/city/chandigarh/punjabs-green-crusader-balbir-singh-seechewal-gets-padma-shri/articleshow/56789152.cms.
- ↑ Poulomi Das (11 April 2016). "Meet Sant Balbir Singh Seechewal, the baba who single-handedly cleaned a 160-km long river in Punjab | Business Insider India". Businessinsider.in. http://www.businessinsider.in/Meet-Sant-Balbir-Singh-Seechewal-the-baba-who-single-handedly-cleaned-a-160-km-long-river-in-Punjab/articleshow/51775771.cms.
- ↑ "Seechewal model for clean Ganga". Tribuneindia.com. 31 January 2016. http://www.tribuneindia.com/news/nation/seechewal-model-for-clean-ganga/190021.html.
- ↑ "Environmentalist Baba Seechewal gets Padma Shri". 26 January 2017. http://indianexpress.com/article/india/environmentalist-baba-seechewal-gets-padma-shri-4492006/.
- ↑ "'Eco Baba' Seechewal wins Padma Shri | india-news | videos". 28 January 2017. http://www.hindustantimes.com/videos/india-news/eco-baba-seechewal-wins-padma-shri/video-AuTWeytDTPj2yLr0hjEPEN.html.