பலராமன் (யானை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலராமன்
இனம்ஆசிய யானை
பால்ஆண்
பிறப்புசுமார் 1958 (அகவை 65–66)
நாடுஇந்தியா
Occupationதங்க அம்பாரியை சுமந்து செல்லுதல்
செயற்பட்ட ஆண்டுகள்1999–2011
அறியப்படுவதற்கான
 காரணம்
மைசூரு தசரா
Predecessorதுரோணர்
Successorஅர்ச்சுனன்
உரிமையாளர்மாவுத்தன் திம்மா
நிறை4535 கி.கி
உயரம்2.7 m (8 அடி 10 அங்)
Named afterபலராமன்

பலராமன் (Balarama) (பிறப்பு 1958கள்) என்பது உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா ஊர்வலத்தின் முன்னணியில் செல்லும் யானையாகும். 1999 - 2011க்குமிடையில் தசரா கொண்டாட்டங்களின் 10வது நாளில் பதின்மூன்று முறை 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டிசுவரி தெய்வத்தின் சிலையை சுமந்து சென்ற போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

வரலாறு[தொகு]

பலராமன் 1987இல் கர்நாடகாவின் குடகு பகுதியில் உள்ள சோமவாரபேட்டை அருகே உள்ள கட்டெபுரா வனப்பகுதியில் பிடிபட்டது.[1] இது1994 ஆம் ஆண்டு முதல் தசரா ஊர்வலத்தில் தங்க அம்பாரியை எடுத்துச் சென்றது.

தசராக் கொண்டாட்டங்களின் கடைசி நாளில் இது தங்க அம்பாரியில் தெய்வத்தின் சிலையை சுமந்து கொண்டு துரோணர் என்ற யானைக்குப் பின் வந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kumar, R. Krishna (15 August 2014). "Know your Dasara elephants". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/know-your-dasara-elephants/article6320447.ece. பார்த்த நாள்: 22 October 2015. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலராமன்_(யானை)&oldid=3224370" இலிருந்து மீள்விக்கப்பட்டது