பயனர் பேச்சு:Ravidreams/தொகுப்பு 10

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நன்றி[தொகு]

--நந்தகுமார் (பேச்சு) 08:34, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி
நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரை செய்ததற்கு மிக்க நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 14:29, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நிருவாகப் பயனராகப் பரிந்துரைத்தமைக்கு தங்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 18:32, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உதவி[தொகு]

கவனிக்க:

கருத்து நீக்கம்[தொகு]

கைப்பாவைக் கருத்துக்களுடன் தேனீயின் கருத்துக்களையும் நீக்கியிருப்பதாகத் தெரிகிறது. -- மயூரநாதன் (பேச்சு) 09:30, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மயூரநாதன், நான் அடிக்க முயன்ற கருத்து இதோ. அந்தக் கருத்தை எழுதியவர் 786haja என்பதற்கான ஆதாரம் இதோ. எனது பேச்சுப் பக்கத்தில் நீங்கள் கருத்திடும் முன்னே, அதையும் கூட நுட்பக் குழப்பத்தால் நானே மீள்வித்து விட்டேன். தேனி சுப்பிரமணியின் கருத்தை நீக்க முயன்றேன் என்று நீங்கள் கருதுவது தவறு. //அண்மைக் காலங்களில், குறிப்பாகக் கடந்த ஒரு மாத காலத்தில், தமிழ் விக்கியில் கருத்திடுபவர்கள் தாம் எழுதுபவற்றை மீண்டும் வாசித்துப் பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. பல கருத்துக்களை வாசிக்கும் போது அப்படியான எண்னம் தான் தோன்றுகிறது. சில வேளைகளில் அந்தந்த நேரங்களில் உள்ள மனநிலைக்கு ஏற்றபடி கருத்துக்கள் வெளிவந்திருக்கலாம். இப்பொழுது வாசித்துப் பார்த்தால் சிலவேளை அவர்களே இதை நானா எழுதினேன் என்று வெட்கப்படவும் கூடும். எனவே, அவதூறுகளும், தனி மனிதத் தாக்குதல்களும் தன்னை மட்டும் அன்றி மற்றவர்களையும் பாதிக்கும் என்று எண்ணக்கூடிய ஒவ்வொருவரும் தயவு செய்து நீங்கள் இந்த ஒரு மாத காலத்தில் எழுதியவற்றை மீண்டும் படித்துப் பார்த்து அங்கே தனிமனிதத் தாக்குதல், அவதூறுகள் என்பன இருந்தால் நடுக்கோடிட்டு அழித்து வருத்தம் தெரிவியுங்கள். அது விக்கிச் சமூகத்தில் ஒரு நல்ல, பண்பான முன்மாதிரியாக அமையும். அத்துடன் ஒவ்வொருவரும் தங்களுடைய நிலைப்பாடுகளை மீள்பரிசோதனை செய்யவும், அதற்கேற்றபடி தங்களை மாற்றிக்கொள்ளவும் உதவியாக அமையும். ஒவ்வொருவரினதும் மனச்சாட்சிதான் அவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் முதல் நீதிபதி. இந்த நீதிபதியின் தீர்ப்பினால் உங்களுக்கு எந்த மனத்தாங்கலும் ஏற்படாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்// என்று நீங்களே இட்ட அறிவுரையைப் பின்பற்றி எனது பேச்சுப் பக்கத்தில் உரிய மாற்றத்தைச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். கொஞ்சமாவது நல்லெண்ண நன்னம்பிக்கை கொள்ளலாம் தானே :) நன்றி. --இரவி (பேச்சு) 10:31, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இரவி, இதைத்தான் "மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்று சொல்வது. 10 ஆண்டு நிறைவுக் கருத்துப் பக்கத்தில் ஏதாவது புதிதாக வந்திருக்கிறதா என்று பார்க்கத்தான் போனேன். 786haja வின் கருத்தை நீக்குவது பற்றிய கலந்துரையாடல் எனக்குத் தெரியும் அதை நீக்குவது குறித்தும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், தேனீயின் கருத்து நீக்கப்பட்டிருப்பதைக் கண்டபோது தேனீயே அதை நீக்கியதாகத் தான் எண்ணினேன். ஆனால் வரலாற்றுப் பக்கத்தில் பார்த்தபோது உங்களுடைய தொகுப்பின்போதுதான் அது நீக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அது வேண்டுமென்று செய்யப்பட்டது என்று நான் நினைக்கவில்லை. ஆனால், அதை யாரும் பார்த்தால் தவறாக எண்ணக்கூடும் என்று மட்டுமே எண்ணினேன். அது ஒரு sensitive ஆன பகுதி. பலரை முகம் சுழிக்க வைக்கக்கூடியது. நானே சரிப்பண்ணியிருக்கலாம். ஆனால், நீங்கள் செய்ததாகவும், அதற்கு எதிராக நான் மீள்வித்ததாகவும் தோற்றம் வரும். நீங்களே உடனடியாகச் சரிசெய்தால். தவறுதலாக நடந்தது என்று எல்லோரும் புரிந்து கொள்வார்கள் என்பதற்காகவே உங்கள் பேச்சுப் பக்கத்தில் அதைத் தெரிவித்தேன். நான் எழுதியதைச் சரியாக வாசித்துப் பாருங்கள். "ஏன் நீக்கினீர்கள் என்று நான் கேட்கவில்லை", அல்லது "நீக்கியிருக்கக் கூடாது" என்றும் சொல்லவில்லை "கைப்பாவைக் கருத்துக்களுடன் தேனீயின் கருத்துக்களையும் நீக்கியிருப்பதாகத் தெரிகிறது" என்று ஒரு தகவலாகத்தான் தந்திருக்கிறேன். நீங்கள் கவனிக்காமல் இருந்திருந்தால். சரிசெய்யட்டும் என்பதற்காகவே அவ்வாறு தகவல் தந்தேன். அது உங்களைக் குற்றங் கூறுவதற்காக எழுதியது என்று நீங்கள் நினைத்திருந்தால் வருந்துகிறேன். நான் பின்பற்ற விரும்பாத அறிவுரையை மற்றவர்களுக்கு நான் கூறுவதில்லை. ---மயூரநாதன் (பேச்சு) 11:18, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
மயூரநாதன், நீங்கள் இட்ட செய்தியை உரிய நேரத்தில் கவனித்து மறுமொழி இடமுடியாமல் போயிருந்தால், தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் நிலவும் சூழ்நிலையில், அது மிகவும் தவறான புரிதலைத் தந்திருக்கும். எனவே, ஒரு தகவலை இடும் முன் அது சரிதானா என்று ஒன்றுக்கு இரண்டு முறை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. தாங்கள் இட்ட தவறான தகவலைத் திருத்தியமைக்கு நன்றி. --இரவி (பேச்சு) 15:37, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

உங்களுக்கு நேர்ந்த அவதூறுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம்[தொகு]

ரவி, அண்மையில் ஒரு தடை செய்யப்பட்ட போலிக் கணக்கில் இருந்து தங்களைப் பற்றிய அவதூறுச் செய்தி வந்திருந்தது. இது தொடர்பாக, தமிழ் விக்கிப்பீடியாவில் நெடுநாள் பங்களிக்கும் பயனர் என்ற முறையில், தமிழ் விக்கிப்பீடியர் சார்பாக நான் உங்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை நான் முதலிலேயே செய்திருக்க வேண்டும். ஆனால் பல அதிகாரிகளும் நிர்வாகிகளும் இருக்கும் போது அவர்களை முந்திக்கொண்டு நான் மன்னிப்பு கோரினால் "யார் யாரெல்லாமோ தமிழ் விக்கி சார்பாக மன்னிப்பு கோருகிறார்கள்" என்று சிலர் புலம்ப நேரிடுமோ என்று சிறிது காலம் பொறுமையாக இருந்தேன்.

மற்றவர்கள் அனைவரும் அவதூறு செய்தவர்களுக்கு ஆதரவாக கள்ள மவுனம் சாதிப்பதால் நான், தமிழ் விக்கிப்பீடியாவில் நெடுநாள் பங்களிக்கும் பயனர் என்ற முறையில், தமிழ் விக்கிப்பீடியர் சார்பாக நான் உங்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பிட்ட அவதூறுச் செய்தியை விக்கி வரலாற்றில் இருந்து நிலையாக நீக்குவதற்கான நடவடிக்கை எடுப்போம். மீண்டும் இவ்வாறான அவதூறுகள் வராமல் இருப்பதற்கான காப்பு நடவடிக்கைகளை எடுக்க முனைவோம். நன்றி.-- புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 10:49, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உங்களுடைய வேண்டுகோளுக்கு எனது ஆதரவு உண்டு. குறித்த அவதூறுச் செய்தியை மட்டும் அல்லாது இதுபோன்ற எல்லா அவதூறுச் செய்திகளையும் தனிமனிதத் தாக்குதல்களையும் நீக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதற்காக நான் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளேன். அதை இங்கே இதற்கு மேலேயுள்ள இழையில் இரவியும் வெட்டி ஒட்டியுள்ளார். இந்த ஆலோசனை மூலம் ஒருவருக்கும் மனத்தாங்கல் இல்லாமல் அவதூறுச் செய்திகளையும், தனிமனிதத் தாக்குதல்களையும் நீக்கிவிடலாம். இந்த வேண்டுகோளுக்குப் பயன் கிடைக்காவிட்டால், விக்கியில் கலந்துரையாடி இவ்வாறான செய்திகளைத் தேடி நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது எனது கருத்து. ---மயூரநாதன் (பேச்சு) 11:37, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தானியங்கி அணுக்கம் வேண்டல்[தொகு]

(இச்செய்தி அதிகாரி அணுக்கம் உடையவர்களுக்கு) எனது கணக்கின் பெயர் NeechalBOT. நான் விக்கித் திட்டங்களுக்குப் புதிது. தற்போதைக்கு எனக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ள பணிகளை என் பயனர் பக்கத்தில் காணலாம். எனக்குத் தானியங்கி அணுக்கம் வேண்டி நீச்சல்காரன் இங்கு இட்டுள்ள கோரிக்கை தொடர்பாக உங்கள் கருத்தையிட உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். --NeechalBOT (பேச்சு) 07:19, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:56, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கூடல் நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துகள்[தொகு]

இரவி இங்கே சில கருத்துகளை இட்டுள்ளேன். உங்களைக் குறிப்பிட்டும் சில கூறியுள்ளேன். பார்க்க வேண்டுகின்றேன். நன்றி --செல்வா (பேச்சு) 04:15, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நடவடிக்கை தேவை[தொகு]

(கீழ்க்காணும் குறிப்பைப் பயனர் இராசன் (Rajan s) பக்கத்தில் இட்டுள்ளேன்)

இராசன் நீங்கள் //எனக்கு ஏற்கெனவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அசிங்கமான மின்னஞ்சல்கள் வந்துள்ளன. பாலியல் அசிங்கமாக (ஆண் ஆணுடன் உடலுறவு கொள்ளும்) படங்கள் தாங்கிய மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இதைச் செய்தது யார்? தேனி சுப்பிரமணியின் மின்னஞ்சல் முகவரியில் இருந்தும் வந்துள்ளன.// என்று எழுதியுள்ளீர்கள். இவை கடுமையான குற்றச்சாட்டுகள். கொலை மிரட்டல் அனுப்பியது யாராக இருந்தாலும் அவர்கள் மீது விக்கிப்பீடியா தக்க நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். விக்கிப்பீடியாவையும் தாண்டி காவல் துறையினரிடம் முறையீட்டை வைக்கவேண்டும். நீங்கள் முன் வைத்திருப்பது மிகவும் கவலைதரும் குற்றச்சாட்டு. தக்க ஆதாரங்களை விக்கிப்பீடியாவின் அதிகாரிளின் ஒருவரிடம் (மயூரநாதன், சுந்தர், இரவி, நற்கீரன்) சமர்ப்பியுங்கள். --செல்வா (பேச்சு) 18:55, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விளக்கம் தேவை[தொகு]

இரவி,

இராசனின் கணக்கை நீங்கள் இயக்கவில்லை என நான் உறுதியாக நம்புகிறேன். நீங்களோ வேறு பயனரோ நேரடியாக இயக்குவதற்கான சான்று எதுவும் தென்படவில்லை என்பது கைப்பாவை அறிதல் விண்ணப்பத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. ஆனால், உங்களது பின்வரும் நிலைத்தகவல் (இராசன் கைப்பாவை என்பதற்கான சான்றில்லை என முடிவு வந்தபோது நீங்கள் பதிந்தது) என்னை மிகவும் உறுத்துகிறது. ஒருவேளை அந்தக் கணக்கை இயக்குபவர் உங்களுக்குத் தெரிந்தவராக இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. அதனால் உங்களிடமே நேரடியாக விளக்கம் கேட்கிறேன்.

  • https://www.facebook.com/ravidreams/posts/10152333541963569
  • இவை தவிர ஒரு சாக்கிலட்டு விளம்பரத்தைப் பற்றியும் பதிவிட்டிருந்தீர்கள், இப்போது என்னால் அணுக முடியவில்லை.

இராசனுக்கு தேனி சுப்பிரமணி அரசுக்கு எழுதிய மடல் விவகாரமும் (இங்கு நீங்கள் குறிப்பிடும் முன்னர்) தெரிந்திருக்கிறது. அதுவும் நீங்கள் மடலனுப்பிய ஒரு நாளைக்குள் அவர் அதை விக்கியில் குறிப்பிடுகிறார். ஆக, உங்களுக்குத் தெரிந்தவராகவோ உங்கள் முந்தைய மடலில் இணைத்திருந்த 22 விக்கிப்பீடியர்களில் ஒருவராகவோ இருக்கும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் உங்களுக்கு அவர் யாரெனத் தெரிந்தால் கூறிவிடுவது தேவையில்லாமல் இந்த 22 பேரைத் தவறாக எண்ணுவதைத் தவிர்க்க உதவும். இராசனைத் தெரிந்திருந்தால் அவரையேகூட ஒப்புக் கொள்ளுமாறு நீங்கள் கோரலாம்.

உங்களுக்குத் தெரியாது எனில் வருந்துகிறேன். -- சுந்தர் \பேச்சு 14:24, 14 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

சுந்தர், உங்கள் நேரடியான அணுகுமுறையை வியந்து மெச்சுகிறேன்! விக்கிக்கு வெளியே சில நிலைத்தகவல்களைப் பார்த்தபோது எனக்கும் சற்று நெருடியது. (புள்ளி இராசா பற்றிய மறைமுகத் தகவல்கள்; நல்லெண்ண நம்பிக்கை பற்றிய கிண்டல், முதலியன). இவை ஏதோ ஒரு ஏமாற்றத்தின் காரணமாகக் கூட இருந்திருக்கலாம் என்று எடுத்துக் கொண்டேன். ஆனாலும் அந்த நெருடல் இருக்கத் தான் செய்தது. உங்களின் கேள்விக்கு இரவி விளக்கம் அளித்தால் இந்தக் குழப்பத்திற்கும் நெருடலுக்கும் ஒரு தீர்வு கிட்டும் என்று எண்ணுவதால் நானும் உங்கள் கோரிக்கையில் சேர்ந்து கொள்கிறேன். இது துளியும் தொடர்பற்ற ஒன்றானால், குழப்பத்தின் காரணமாக எழுந்த கேள்வியேயன்றி வேறு ஒன்றுமில்லை என்று தெளிவுபடுத்திவிடுகிறேன். (பி,கு. மேலே குறிப்பிட்ட நிலைத்தகவல்கள் இரவி தவிர வேறு சில பயனர்களும் கலந்து கொண்டவை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்). --இரா. செல்வராசு (பேச்சு) 02:21, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

சுந்தர், உங்களது ஐயப்பாடு தொடர்பில் எனக்கும் சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. இரவியோ வேறு யாரோ கைப்பாவை கணக்கை (இராசனுடையது) இயக்கியிருந்தால், கைப்பாவை அறிதல் விண்ணப்பத்தின் மூலம் தெரிந்திருக்கும். அவ்வாறு இருக்க, வேறு யாரோ இயக்கலாம் என சந்தேகிப்பது முரணாகவுள்ளது. There is no evident issues with the user account abusing alternate accounts என்ற billinghurst இன் வாக்கியத்திற்கு என்ன அர்த்தம்? ஆகவே, கைப்பாவை அறிதல் முறை பிழை என்கிறீர்களா? கைப்பாவை இல்லையென்ற பின்பு, 22 பேரைத் தவறாக எண்ணுவது நெருடலாக உள்ளது. அந்த 22 பேரில் நானும் ஒருவன். :( மேலும் இராசன் சுப்பிரமணி தொடர்பில் கைப்பாவை அறிதல் விண்ணப்பம் செய்தவர். ஆகவே, தானும் இப்பொறியில் மாட்டிக் கொள்ளுவேன் என தெரிந்திருக்கும் அல்லவா? எனவே, ஐயங்களைத் தவிர்த்து விடயத்துடன் செயற்படுவது, விக்கிப்பீடியர்களுடனான உறவுக்கு பங்கம் ஏற்படாது பாதுகாக்கும் என நம்புகிறேன். (உங்கள் நிலையில் நான் கேட்பதாயிருந்தால், "கையாள்” (Meatpuppets) தொடர்பு பற்றியே கேட்டிருப்பேன்.) நான் முன் வைத்துள்ள நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதலில் சுப்பிரமணி, இராசன் முன்வைத்த மின்னஞ்சல் மிரட்டகளை கருத்திற் கொள்ளவில்லை. அவை சாட்சியற்றவை. --Anton·٠•●♥Talk♥●•٠· 04:04, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

//கைப்பாவை அறிதல் விண்ணப்பத்தின் மூலம் தெரிந்திருக்கும்//
அன்டன் கூகிளில் தேடிப்பாருங்கள். "கைப்பாவை அறிதலை" எப்படி ஏமாற்றலாம், பிடிபடாமல் எப்படிக் கைப்பாவைகளை இயக்கலாம் என்பதற்கு எல்லாம் ஏராளமான வழிமுறைகள் கொடுத்திருக்கிறார்கள். என்னைப் போல நுட்பம் தெரியாதவர்கள் தான் பிடிபடுவார்கள். ராஜனே தான் "குறைந்தது ஒரு அனானிப் பயனராக" வந்ததை ஒப்புக்கொண்டும் கைப்பாவை அறிதல் முறை மூலம் இது கண்டுபிடிக்கப்படவில்லை பார்த்தீர்களா? ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார் "I would have thought they do retain the creation IP address, but I guess it's pretty much useless information, expecially when dealing with accomplished sockers". "இன்னொருவருடைய கூற்று. "In closing, ........, remember that the checkusers are pretty much just regular people with an average amount of common sense, and an above-average involvement in wiki-politics". கைப்பாவை அறிதல் மூலம் அதிகம் எதிர்பார்க்காதீர்கள். இதை வைத்துக்கொண்டு தீர்மானம் எடுப்பது ஒரு "unfair" வழிமுறை. நுட்பம் தெரியாதவர்கள் மாட்டிக்கொண்டு தண்டனை பெறக் கெட்டிக்காரர்கள் "பரமசிவன் கழுத்தில் இருந்து கொண்டு கருடா சௌக்கியமா?" என்பார்கள்.---மயூரநாதன் (பேச்சு) 07:37, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
அது மட்டுமில்லாமல், ஒருவர் கைப்பாவை அறிதலுக்கு அகப்படாமல் தப்பிப்பது எப்படி என்று விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரை எழுதினாராம். அதை யாரோ நீக்கிவிட்டார்கள் என்று ஆதங்கப்பட்டு (I wrote a guide to socking, but it was deleted from Wikipedia) வேறு இடத்தில் வெளியிட்டு இருக்கிறார். அவர் பின்வருமாறு சொல்கிறார். "So you want to sock and not get caught? Well, it's not exactly easy, but there are definitely some things that can make it easier".---மயூரநாதன் (பேச்சு) 10:10, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

உங்கள் ஏரணம் பொருத்தமானதுதான். ஊகத்தின் அடிப்படையில் பார்த்தால், எல்லோரையும் சந்தேகிக்க வேண்டும். பொருத்தமில்லாமல் அருண் கைப்பாவை இயக்கியதும் உண்மையா என்றும், அல்லது வேறு யாரோ இயக்கி அவர் மாட்டிக் கொண்டாரா எனவும் சந்தேகிக்க வேண்டியுள்ளது. காலையில் இரவி பகிர்ந்து கொண்ட மின்னஞ்சல் பார்த்த பிறகும், சந்தேகிப்பதென்றால் சந்தேகம் மட்டுமே இங்கு மிஞ்சும். --Anton·٠•●♥Talk♥●•٠· 12:55, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

அன்ரன், நான் யாரையும் சந்தேகிக்கவில்லை. இரவி அந்தக் கணக்கை இயக்குவதாக நான் நினைக்கவில்லை என்றுதான் எனது கோரிக்கையைத் தொடங்கியுள்ளேன். அதைக் காணவும். நிற்க.
கைப்பாவை அறிதலைப் பற்றி நானும் கொஞ்சம் அறிவேன். கைப்பாவை என உறுதியாகத் தெரியும் இடங்கள் சில, மற்றபடி எதுவும் உறுதியாகக் கூறவியலாத நிலையில் சான்றில்லை என்றுதான் அறிக்கை வரும். கைப்பாவை அறிதலில் தென்படாதவாறு கணக்குகளை இயக்குவது மிக மிக எளிது. ஏற்கனவே ஒரு Tor ஐ.பி. முகவரியில் இருந்து தமிழ் விக்கியிலேயே பங்களிப்பு வந்துள்ளது. அதைவிட மிகவும் எளிதாக வேறொருவரை வைத்துக் கணக்கை இயக்கினால் எழுத்து நடையை வைத்து மட்டும்தான் ஊகிக்க முடியும். கைப்பாவை அறிதல் முறையில் அவற்றைச் சான்றில்லை என்றுதான் குறிப்பார்கள். ஆங்கில உரையாடல் என்றால் சில முறைகள் உண்டு.
என்னுடைய கேள்வி இரவி சிலருக்கு மட்டுமே தெரிவித்த தகவல் இராசனுக்கு 24 மணி நேரத்துக்குள் எப்படித் தெரிந்துள்ளது என்பதே. அதற்கு வெவ்வேறு வாய்ப்புகள் இருந்திருக்கலாம். இருந்தாலும் இரவிக்குத் தெரிந்தவரா என்றுதான் விளக்கம் கேட்டேன். கீழே இரவி தெரிவித்துள்ளபடி இவ்விளக்கத்துக்கான பதிலை அவர் ஏற்கனவே எனக்குத் தனிமடலில் அனுப்பியிருந்தார். ஆனால், பொதுவில் இருப்பதுதான் சரி, ஆங்காங்கே தனிமடல்களில் இழைகள் ஓடிக் கொண்டிருப்பது பல சிக்கல்களுக்குக் காரணமாகும் என்பதாலேயே மீண்டும் அதே கேள்வியை அவரிடம் பொதுவில் கேட்டேன். -- சுந்தர் \பேச்சு 15:47, 17 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
இப்போதுதான் நீங்கள் கையாள் பற்றிக் கேட்டிருப்பேன் என்று கூறியிருப்பதைப் பார்க்கிறேன், அன்ரன். ஆம், நான் குறிப்பிட்டபடி அந்தக் கணக்கை நேரடியாக வேறு விக்கிப்பீடியர் இயக்குவதாகக் கருதவில்லை. யாருடைய உள்ளீட்டையாவது கொண்டு இயங்கும் கணக்காக இருக்கலாம் என்ற வாய்ப்பையே முன்வைத்தேன். -- சுந்தர் \பேச்சு 17:24, 17 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
சுந்தர், கைப்பாவை அறிதல் மற்றும் பற்றி proxy சில கருத்துக்கள் எனக்கு உள்ளது. பின்பு இது பற்றி உங்களுடன் உரையாடுவேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 04:26, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
சரி அன்ரன். -- சுந்தர் \பேச்சு 07:24, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

வாக்குமூலம்[தொகு]

சுந்தர் இதே கேள்வியை இன்னும் சில விக்கிப்பீடியர்களுக்குப் படி இட்டு என்னிடம் மின்மடல் மூலமாக அக்டோபர் 31, 2013 அன்று கேட்டிருந்தார். வெளிப்படைத்தன்மையைப் பேணும் பொருட்டு இக்கேள்விகளை விக்கிப்பீடியாவில் முறையாக கேட்டால் பதில் தருகிறேன் என்று நானே தான் அவரை இங்கு கேட்கச் சொன்னேன். அதே வேளை, ஒரு உடன் பணியாற்றும் விக்கிப்பீடியராக அவருக்குத் தனிமடலில் விளக்கம் தெரிவித்து இருந்தேன். கீழே வருவது இரண்டு வாரங்களுக்கு முன்பே அக்டோபர் 31, 2013 இந்திய நேரம் 4:56 PM அன்று சுந்தருக்கு அனுப்பிய மடலின் படி. இதனையே என்னுடைய வாக்குமூலமாக இங்கு பதிவு செய்கிறேன். தமிழ்விக்கி10 தொடர்பான ஏற்பாடுகள், அலைச்சல்கள், உளைச்சல் என்று கடந்த 75 நாட்களாக என்னுடைய குடும்ப வாழ்க்கையும் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இயன்ற அளவு அமைதியாகவும் தொடர் விக்கி விடுப்பிலும் இருக்க விரும்புகிறேன். அனைவருக்கும் வேண்டிய விளக்கங்களை என் பேச்சுப் பக்கத்திலும் உரிய விக்கிப்பீடியா பக்கங்களிலும் இடுங்கள். இயன்ற போது முறையாக பதில் தருவேன். நன்றி.

சுந்தர்,

மற்ற விக்கிப்பீடியர்களுக்குப் படி இட்டு நீங்கள் அனுப்பிய மடலில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தினேன். ஏனென்றால், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்றால் முழுக்க வெளிப்படையாகச் செயல்படுவது தான் ஒரே வழி.

ஆனால், ஒரு நண்பராக உங்கள் கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியும். இது உங்கள் பார்வைக்கு மட்டுமே.

இராசன் யாரென எனக்குத் தெரியாது. மற்றவர்களைப் போல் எனக்கும் அவராக இருக்குமோ இவராக இருக்குமோ என்ற ஊகங்கள் தான் உள்ளன.

நான் வீட்டில் தனியாக இருந்து வேலை செய்கிறேன். எதையேனும் சொல்லிப் புலம்ப உடன் பணியாற்றும் நண்பர்கள் இல்லை. பள்ளி, கல்லூரி நண்பர்களுக்கு விக்கிப் பிரச்சினையைப் புரிந்து கொள்ள முடியாது. சொல்லிப் புலம்பி என் உளைச்சலைக் குறைக்க இருக்கும் ஒரே இடம் முகநூல் தான். ஒரு வகையில் அப்படி உளைச்சல் குறைந்ததால் தான் விட்டுக் கொடுக்கும் மனநிலைக்கு வர முடிகிறது. Jab we met / கண்டேன் காதலை படம் பார்த்திருந்தால் உங்களுக்குப் புரியும் :)

உங்களைப் போலவே பலரும் முகநூல் அரட்டையில் அது நானா, இராசனைத் தெரியுமா என்று தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். அது எல்லாவற்றுக்கும் பதில் தான் நான் போடும் நிலைத்தகவல்கள்.

நான் மடலில் ஒரு கருத்து, விக்கியில் ஒரு கருத்து, முகநூலில் ஒரு கருத்து என்று இடவில்லை. மடியில் கனம் இல்லை. அதனால் வழியில் பயம் இல்லை. ஆனால், உங்களையும் சேர்த்த மற்ற விக்கிப்பீடியர்களால் நீங்கள் மடலில் இடும் கருத்துகளை விக்கியிலும் இட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இட முடியாது என்றால் ஏன் என்று யோசித்துப் பாருங்கள். நிச்சயமாக அதற்கு விக்கியின் நலன் மட்டும் காரணமாக இருக்க முடியாது. தேனியைப் பற்றி பலரும் தனிப்பட பல கருத்துகளை ஒப்புக் கொள்கிறீர்கள். ஆனால், வெளிப்படையாகத் தெரிவிக்க முடியவில்லை. இது ஏன்?

இராசனுக்கு ஆதரவாக விக்கியிலேயே சூரியா, குறும்பன் ஆகியோர் கருத்திட்டிருக்கின்றனர். முகநூலில் நிறைய பேர் விருப்பம் போடுகிறார்கள். கைப்பாவையாகச் செயல்படக்கூடிய ஒருவர் என்று அறிந்தும் நெடுநாள் பயனர்கள் பலரும் விருப்பு போடுகிறார்கள் என்றால் ஏன் என்று சிந்தித்துப் பாருங்கள்.

//இந்த உறுத்தலை உள்ளே வைத்துக் கொண்டு என்னால் மற்ற நியாயங்களைச் செயல்படுத்த முடியவில்லை. //

என்று நீங்கள் கூறிய கருத்து வருத்தமாக இருந்ததால் தான் உங்களுக்குப் பதில் தருகிறேன்.

நன்னெறிகள் யாவும் அவற்றை முறையாக பின்பற்ற முனைவர்களுக்குத் தான் கூடுதல் அயர்ச்சியைத் தரும் என்றிருந்தீர்கள்.

ஆதலால், உங்கள் தடுமாற்றம் புரிகிறது.. ஆனால், உங்களால் இன்னும் சிறப்பாக நடுநிலையாக பணியாற்ற முடியும் என்பது தான் என் எதிர்பார்ப்பு. வேண்டுகோள்.

நான் மின்மடலில் போட்ட கடிதம் எப்படி இராசனுக்குத் தெரியும், 22 பேரில் யாரை ஐயப்படுவது என்று கேட்டிருந்தீர்கள்.

அக்கடிதம் பிப்ரவரி 11, 2013 இன்னும் பல பேருக்குப் படியிட்டே அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஆக, நேற்றைய மடலுக்கு முன்பே பல மாதங்களாக இந்த விசயம் வெளியே தெரியும். இராசனின் கேள்விகளைக் கண்டீர்களானால் அவர் நெடுநாட்களாக தேனியின் நடவடிக்கைகளைக் கவனித்தே கருத்திடுகிறார். தேனி சுப்பிரமணி பற்றி பேச்சுவாக்கில் நான் புருனோவிடம் பகிர்ந்து கொண்ட செய்தியை இன்று காலை புருனோ கூடல் கருத்துகள் பக்கத்தில் இட்டிருந்தார். உங்களுக்கு வேண்டப்பட்டவர் அரசுக்கு கடிதம் எழுதினால் கேட்க மாட்டீர்களா என்று. இதில் இருந்து இராசன் அது யார் என்று புரிந்து கொள்வது பெரிய விசயம் இல்லை..

சுந்தர், ஒரு நண்பராக எப்போது வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் நீங்கள் என்னிடம் விளக்கம் கேட்கலாம். கண்டிப்பாக பதில் சொல்வேன். ஆனால், மற்ற விக்கிப்பீடியர்களுக்குப் படி இட வேண்டாம். அதை வெளிப்படையாகச் செய்வோம்.

மற்றவற்றை உரிய இடத்தில் பேசுவோம் சுந்தர்..

முகிலைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

தீபாவளி வாழ்த்துகள்..

இரவி


--இரவி (பேச்சு) 08:01, 16 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

// நான் மடலில் ஒரு கருத்து, விக்கியில் ஒரு கருத்து, முகநூலில் ஒரு கருத்து என்று இடவில்லை. மடியில் கனம் இல்லை. அதனால் வழியில் பயம் இல்லை. ஆனால், உங்களையும் சேர்த்த மற்ற விக்கிப்பீடியர்களால் நீங்கள் மடலில் இடும் கருத்துகளை விக்கியிலும் இட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இட முடியாது என்றால் ஏன் என்று யோசித்துப் பாருங்கள். நிச்சயமாக அதற்கு விக்கியின் நலன் மட்டும் காரணமாக இருக்க முடியாது. தேனியைப் பற்றி பலரும் தனிப்பட பல கருத்துகளை ஒப்புக் கொள்கிறீர்கள். ஆனால், வெளிப்படையாகத் தெரிவிக்க முடியவில்லை. இது ஏன்? //

நான் தனிமடலிலோ வேறு எங்குமோ தெரிவித்த கருத்துக்களை என்னால் எவ்விதத் தயக்கமும் இன்றி விக்கியிலும் இட முடியும். அழுத்தமான சான்றில்லாமல் ஆனால் காரணத்துடன் கூடிய ஊகம் மட்டுமே இருக்கும்போது மட்டும் அதை நான் விக்கியில் இடுவதில்லை. தனிமடலிலும் உரையாடல்களிலும்கூட அவற்றை ஊகம் என்று இயன்றவரை குறிப்பிட்டு விடுவேன். விக்கி நலன் பொருட்டும் நல்லிணக்கம் பொருட்டும் வேண்டுமானால் என்னுடைய கருத்துக்களைச் சில நேரம் சிறிது மட்டுப்படுத்தியிருக்கிறேன் (கருத்தை மாற்றியதில்லை, சிலவற்றை அழுத்திச் சொல்லாமல் விட்டிருக்கிறேன்). எடுத்துக்காட்டாக, கூடல் தொடர்பாக நான் பலவற்றையும் குறிப்பிட எண்ணியிருந்தேன். ஆனால், நிலவும் சூழலில் அதைத் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்பிருந்ததால் சிலவற்றை விட்டிருந்தேன். காட்டாக, நடந்த நிகழ்வில் நீங்கள் உங்களை முன்னிறுத்தியதாகக் கருத இடம் இருந்தது. ஆனால், அது உண்மையல்ல என்று அறிவதற்கு நிறைய தகவல்களும் அதைவிட நிறைய நல்லெண்ணமும் இருந்திருக்க வேண்டும் என்றும் கூற நினைத்தேன். (அதனால் அவ்வாறு கருதியவர்களை அவர்களது நோக்கம் எவ்வாறிருப்பினும் அவதூறாக நினைக்காமல் நல்லெண்ணக் குறைவாகவே கொள்ள வேண்டும் என்று நான் கருதினேன்.) நீங்கள் இருந்த களைப்பிலும் உளைச்சலிலும் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்களோ என்று நான் எண்ணிப் பார்த்து மட்டுப்படுத்தினேன். (அந்த இடத்தில் முழு கருத்தையும் உள்ளபடியே போட்டு தவறான புரிதலினால் அது செல்ல வேண்டியவர்களிடத்தில் முற்றிலும் எடுபடாமல் போவதற்குப் பதிலாக ஒரு சிறு பகுதியை பிற்பாடு உரையாடுவதற்கு ஒத்தி வைக்கலாம் என்றே கருதினேன்.) அதே போல, அதை வேறு யாராவது தவறாகப் புரிந்து கொண்டு திசை திருப்பிவிடவும் வாய்ப்பிருந்தது. அதனால் அதைத் தவிர்த்தேன். தேனி சுப்பிரமணி தொடர்பாக நான் எதையும் மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. ஒரேயொரு கருத்து நானும் நீங்களும் ஒருமுறை அவருடன் நேரில் உரையாடியபோது அவர் சொல்லியிருந்தார். அதைச் சான்றாகக் காட்ட முடியாது என்பதால் நான் விக்கியில் சில நாட்கள் முன்புவரை அழத்தமாகப் போடவில்லை. -- சுந்தர் \பேச்சு 16:19, 17 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

// இரவி: மாட்டாமல் திருடுவாரே திருடர் மற்றெல்லாம்
தரும அடி வாங்குவார் - டுபாக்குறள் 1. //

இரவி, உங்கள் விளக்கத்தில் இருந்து இராசன் யார் என்பது உங்களுக்குத் தெரியாது என அறிகிறேன். ஆனால், உங்கள் மேலே குறிப்பிட்டுள்ள நிலைத்தகவல் ஒருவாறு 'கைப்பாவையாக இருந்தாலும் மாட்டிக் கொள்ளாமல் செய்வது (அல்லது செய்தது)' சரியென்று நீங்கள் கருதுவதாகக் காட்டுகிறது. அதைவிட, பல நல்லெண்ணக் குறைபாடுகளுக்கு ஒரு விதத்தில் காரணமான அந்த விசயத்தில் உண்மை அறிவதற்காக (குறிப்பாக அவர் உங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்திருந்ததால் உங்கள் தரப்பு நியாயத்தைச் சற்று குறைவாக யாரும் எடுத்துவிடக்கூடாது என்ற அக்கறையிலும்) நான் மேற்கொண்ட முயற்சியை ஒரு வகையில் ஏளனம் செய்வது போலவும் பட்டது. அதை முன்னிட்டு எனது வருத்தத்தைப் பதிவு செய்து கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 05:47, 18 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

சிக்கல்[தொகு]

இரவி அவர்களே இங்கேயும் இங்கேயும் பாருங்கள். இப்படி ஆகிவிட்டது நான் என்ன செய்வது அப்படியானல் நானும் ஏனையோர் தொகுத்ததை நீக்கிவிட்டு புதிதாகச் சேர்த்து என்கணக்கிற்குக் கொண்டுவரலாமா?-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:13, 3 திசம்பர் 2013 (UTC)-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:45, 3 திசம்பர் 2013 (UTC)-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 14:19, 4 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

uthavi thEvai[தொகு]

katturai pottiyil niraya vithikalai meeri eluthapatulana. Naan erkanave sari paartha murayil etho pilai ullathal neengal katuraikal anaithayum oru murai meel paarvai itumaaru vendukiren. naan ninaitha maathiri ithu elithaka intha murai illai.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:13, 4 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஆலமரத்தடி மேற்பகுதி[தொகு]

தவறுதலாக உருவாகிவிட்டது என எண்ணி வார்ப்புரு:ஆலமரத்தடி மேற்பகுதி/தொகுப்பு94 என்ற பக்கத்தை விக்கிப்பீடியா வெளிக்கு மாற்றிவிட்டேன். சரியெனில் வார்ப்புரு வெளியை நீக்கிக் கொள்ளாலாம் -நீச்சல்காரன் (பேச்சு) 01:42, 8 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

நீச்சல்காரன், கவனித்துத் திருத்தியதற்கு நன்றி.--இரவி (பேச்சு) 16:43, 13 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப்போட்டி[தொகு]

கட்டுரைப்போட்டிக்காக கட்டுரைகளை விரிவாக்கியுள்ளேன். எந்த கட்டுரையிலாவது விதிகள் மீறி இருப்பின் கூறவும். மாற்றிவிடுகிறேன்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:48, 31 சனவரி 2014 (UTC)[பதிலளி]

கட்டுரைப்போட்டிக்காக கட்டுரைகளை விரிவாக்கியுள்ளேன். எந்த கட்டுரையிலாவது விதிகள் மீறி இருப்பின் கூறவும். மாற்றிவிடுகிறேன்.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:52, 31 சனவரி 2014 (UTC)[பதிலளி]

நந்தினி, யாழ்ஸ்ரீ - தொடர்ந்து கட்டுரைப் போட்டியில் உற்சாகமாக பங்கேற்பதற்கு நன்றியும் வாழ்த்துகளும். பணியழுத்தம் காரணமாக விக்கியில் கூடுதல் நேரம் செலவிட முடியவில்லை. தற்போது கட்டுரைப் போட்டியைக் கவனித்து வரும் அன்டன், தென்காசியாரின் வழிகாட்டுதலை ஏற்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:03, 2 பெப்ரவரி 2014 (UTC)

வழிகாட்டல் தேவை[தொகு]

எனது கட்டுரை ஒன்று சப்பையான காரணங்களுக்காக தடை செய்யப்பட்டிருப்பதாக உணர்கிறேன். புதுக்கோட்டையின் தொல் பழங்கால பாறை ஓவியங்களை குறித்தது. சித்தன்னாவாசல் ஓவியங்களை குறித்து, நேர்மையான கரணங்கள் என்றால் பணிவுடன் ஏற்கிறேன். தமிழகத்தின் பழமை குறித்த ஓவியங்கள் அவை. அல்லது நீங்கள் உருவாக்குங்கள் ஹிந்து செய்தியின் இணைப்பு http://tamil.thehindu.com/general/art/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article5640726.ece

உங்கள் பேச்சுப் பக்கத்தில் பதிப்புரிமை மீறல் பற்றிய வழிகாட்டல் தரப்பட்டுள்ளது. அதற்கேற்ப கட்டுரையினை நீங்கள் தொகுக்கலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 04:44, 2 பெப்ரவரி 2014 (UTC)

தேனி சுப்பிரமணியின் நிருவாகி அணுக்கம் தொடர்பில்[தொகு]

இரவி, தேனி சுப்பிரமணியின் நிருவாக அணுக்கத்தை நீக்குவது தொடர்பான வாக்கெடுப்பில் வாக்கிட்டுவிட்டேன். நீங்கள் பெரிதாக உழைத்து சொந்தவாழ்வில் சிக்கல்களை எதிர்கொண்டு நடத்திய விழாவைத் தரங்கெட்டத்தமாக ஒருவர் விமர்சிக்கவும் அதைப் பயன்படுத்திக்கொண்டு குளிர்காய்ந்த இன்னொரு பங்களிப்பாளரின் கூற்றையும் எடுத்துக்கொண்டு எவ்வளவு வெகுண்டீர்கள்? அவரைச் சரியாகக் கண்டிக்கவில்லை, ஓரிருவர் மட்டுமே எதிர்த்தார்கள் என்ற ஆதங்கத்தில் எத்தனைபேர் உங்கள் உழைப்பைப்பாராட்டியிருந்தோம், எந்த நிகழ்வானாலும் குறைகள் இருக்கத்தான் செய்யும் என சிற்சில குறைகளையும் ஏற்றுக் கொண்டோம் என்பதையும் நினைவில் கொள்ளவில்லை. மூட்டைப்பூச்சிக்காக வீட்டைக்கொளுத்தவும் துணிந்துவிட்டீர்கள். இறுதியில் பழிதீர்த்துக்கொண்டு நீங்கள் ஒருவராவது மகிழ்ச்சியாய் இருந்தால் சரி. அந்த இழையில் அங்கும் பல இடங்களிலும் நீங்கள் பதிந்தவை உங்கள் விக்கிப்பணிக்கும், உங்கள்மீது நானும் மற்றவர்களும் வைத்திருந்த எதிர்பார்ப்பிற்கும் துளிகூட பொருத்தமற்றவை. இதில் நான் அடைந்த காயம் பத்தாண்டுகளில் ஆங்கில விக்கியில் நேரெதிராக நடந்த போராட்டங்களைக் காட்டிலும் மிகுதி. ஒருசில கணங்கள் பழைய பயனர் சீனிவாசனின் ஒரு தனி வாக்கிற்குத் தேவைக்கு அதிகமாக மதிப்பளித்து நடந்துகொண்ட நீங்கள், இப்போது இரண்டாம் முறையாக அவரது வாக்கின் அடிப்படையை மெய்ப்பித்து மதிப்பளிக்கிறீர்களோ என நினைக்கவைத்துவிட்டீர்கள். நீங்கள் அங்கே கேட்டிருந்த கேள்விகளையும் சாடல்களையும் மறுக்கும் எண்ணமும் தெம்பும் இப்போது இல்லை, ஆனால் பின்னால்வரும் ஒரு சாடலைப்பற்றி மட்டும் என் கருத்தைப் பதிந்து முடிக்கிறேன்.

// சுந்தர், எடுத்த செயலை இறுதி வரை நின்று முடிக்கும் துணிவும் நேர்மையும் இல்லாவிட்டால் எதற்குப் பிணக்குத் தீர்வு, சமூக முறையீட்டுக் கூடம், ஐவர் குழு என்று சுற்றியடித்துப் பயனர்களின் நேரத்தை வீணாக்குகிறீர்கள்? //

எடுத்த செயலை முடிக்கும் துணிவும் நேர்மையும் இல்லாமலா இரவி நான் விலகிநின்றேன்? என் மகன் தெங்கு காய்ச்சலில் அல்லுற்றிருந்தபோதும் நான் இட்ட கருத்து உங்களைப்பற்றித் தவறான புரிதலை ஏற்படுத்திவிடக்கூடாது என்றும் வேறுசிலரின் பிழையான கருத்தை உடனடியாக மறுக்கவேண்டும் என எனது செல்பேசி வழியாகக்கூட அவசர அவசரமாகப் பதிந்தேன். இறுதியில் இப்படிச் சொல்லியிருக்கிறீர்கள். இது என் தனிவாழ்வுச்சிக்கல் என விட்டுவிடுவோம். ஆனால் எடுத்த காரியத்தை முடிப்பது உட்பட எந்தவொரு பொறுப்பும் விக்கிப்பீடியர் எவருக்கும் இல்லை என்ற அடிப்படைப்புரிதல் பலரிடம் இல்லாமல் இருக்கலாம். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பங்களித்துவரும் உங்களுக்கு இல்லை என்பது கவலைக்குறியது. -- சுந்தர் \பேச்சு 11:17, 7 மார்ச் 2014 (UTC)

சுந்தர், தனிப்பட்ட குடும்ப, பணியிட சிக்கல்களுக்கு இடையிலும் இந்தப் பிரச்சினை தொடர்பாக இயன்றளவு தீர்வு கொண்டு வர முயன்றீர்கள். அதற்கு முதற்கண் நன்றி. உங்களைத் தவிர வேறு யாரும் இரு பக்கங்களிலும் உள்ள போதாமைகளைச் சுட்டிக் காட்ட முனையவில்லை. இயன்ற வரை நடுநிலையாக இருக்க முனைந்தற்கு மீண்டும் நன்றி.

"பிணக்குத் தீர்வு, சமூக முறையீட்டுக் கூடம், ஐவர் குழு" என்று ஒட்டுமொத்தமாகவும் வரிசையாகவும் கூறியிருப்பதைக் கவனியுங்கள். ஐவர் குழு அமைத்ததற்கும் உங்களுக்கும் தொடர்பு இல்லை. எனவே, நீங்களே கூறியது போல் //அந்த உரையாடலுக்கு இந்தத் தேதியில் பங்களித்த நீங்கள் இந்தத் தேதியில் இதைப்பற்றி கட்டுரை எழுதமுடிந்த சுந்தர் ஏன் இன்னும் இவரைப்பற்றிய கொள்கை முடிவில் கருத்திடவில்லை என்று யாரும் கேட்டுவிடுவார்களோ என்ற அஞ்சும் நிலை உள்ளது.// என்ற ஒட்டுமொத்த விக்கிசமூகத்தின் நிலை குறித்த ஆற்றாமையிலேயே அவ்வாறு கூறினேன். தனிப்பட உங்களைக் குறித்து மட்டுமன்று. சுந்தர் வந்து தீர்வு தரட்டும் என்று ஒரு உரையாடலில் கனக சிறீதரன் சுட்டிய போது, இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய விக்கிச் சமூகத்தின் கடமை என்றும் நானே சுட்டி இருந்தேன். விக்கிப்பீடியா திட்டத்தில் உள்ள பொறுப்புகள் வேறு. தார்மீகப் பொறுப்பு என்பது வேறு. சமுதாய முறையீட்டுக் கூடத்துக்கான முன்மொழிவு உங்களுடையது என்கிற போது அதன் வழியாக நீதி கிடைக்கும் என்று முறையிடுகிறவர்களுக்கு உங்களிடம் சில எதிர்பார்ப்புகள் இருக்கத் தான் செய்யும்.

//ஆனால் எடுத்த காரியத்தை முடிப்பது உட்பட எந்தவொரு பொறுப்பும் விக்கிப்பீடியர் எவருக்கும் இல்லை என்ற அடிப்படைப்புரிதல் பலரிடம் இல்லாமல் இருக்கலாம்.//

அப்படிப் பட்ட புரிதலோடு இயங்கியிருந்தால் தனியொரு ஆளாக முட்டி மோதி பத்தாண்டு நிகழ்வை எதற்கு நடத்த வேண்டும், சுந்தர்? :) மன்னிக்கவும், வேறு யாராவது நடத்துங்கள் என்று நட்டாற்றில் நிகழ்வை விட்டுப் போக எனக்குத் தெரியாதா? தன்னார்வலத் திட்டங்களின் அமைப்பு கோரும் பொறுப்பு வேறு. தார்மீகப் பொறுப்பு வேறு.

இப்போது பழி தீர்க்கிறேன் என்கிறீர்கள். தொலைப்பேசியில் ஒரு முறை பேசும் போது, நீங்கள் இந்தப் பிணக்குத் தீர்வுக்கு ஒத்துழையுங்கள், தியாகி பட்டம் தருகிறேன் என்று கூடத் தான் சொல்லி இருந்தீர்கள் :) இன்னும் நிறைய சொல்லி இருக்கிறீர்கள், விக்கியிலேயே. எனக்கும் உங்களிடம் கேள்விகள் உள்ளன, சுந்தர். வாக்கெடுப்பு / பிணக்குத் தீர்ப்பாய முடிவு வரட்டும். பொறுமையாகப்பேசுவோம். பிணக்கு தீர்க்க வந்த உங்களுக்கே இவ்வளவு காயங்களா?, நேரடியாக பாதிக்கப்பட்டவருகளுக்கு எவ்வளவு காயங்கள் இருக்கும் என்று எண்ணிப் பார்க்கலாம் :) நன்றி.--இரவி (பேச்சு) 11:50, 7 மார்ச் 2014 (UTC)

தார்மீகப்பொறுப்பு பற்றிய உங்கள் கருத்திலிருந்து பெரிதும் வேறுபடுகிறேன், இரவி. விக்கிப்பணி மற்ற பணி போலவே அல்ல. அத்தகைய எதிர்பார்ப்பிருந்தால் இந்த அளவுக்கு விக்கி (தமிழ் விக்கியை மட்டும் சொல்லவில்லை) வளர்ந்திருக்காது. அப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இல்லாத விடுபாட்டு நிலையிலும் உங்களைப்போலப் பலரும் பல வகைகளில் விக்கியிலும் வெளியிலும் பொறுப்பெடுத்துச் செய்திருக்கிறார்கள். அது பாராட்டத்தக்கது. ஆனாலும் அந்தப் பொறுப்பு இருப்பதாகச் சொல்லமுடியாது. அந்த எண்ணம் இருந்திருந்தால் நிகழ்வின் பொறுப்பை விட்டு விலகியிருக்க முடியாதா என்ற உங்கள் கேள்விக்குப் பதில் விலகியிருக்கலாம் என்பதே. இது விக்கிக்கு வெளியிலான செயற்பாடுகளைக் குறைந்த அளவு மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு நாம் பெறும் பாடம். நீங்கள் பின்னால் கேட்கவிரும்பும் உங்கள் கேள்விகளுக்கு நான் பதிலளிக்கிறேன். தொலைபேசி உரையாடல் போன்றவற்றைச் சுட்டும்போது இப்படி முழுச்சூழல் இல்லாமல் மேற்கோள் காட்ட வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். விக்கியில் நான் பதிந்த கருத்துக்களையாவது இணைப்புவழிசென்று பார்த்து சூழலை அறிந்துகொள்ள முடியும். -- சுந்தர் \பேச்சு 12:06, 7 மார்ச் 2014 (UTC)

//தொலைபேசி உரையாடல் போன்றவற்றைச் சுட்டும்போது இப்படி முழுச்சூழல் இல்லாமல் மேற்கோள் காட்ட வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். விக்கியில் நான் பதிந்த கருத்துக்களையாவது இணைப்புவழிசென்று பார்த்து சூழலை அறிந்துகொள்ள முடியும். //

அட அட அட, நாம் வளர்த்த மரத்தை நானே வெட்டுவேனா என்று நான் தொலைப்பேசியில் சொன்னதை, முழுச்சூழலைச் சுட்டி என்னுடைய அனுமதியைக் கோரித்தான் விக்கியில் எழுதினீர்கள் சுந்தர்? நமக்குள்ளான மின்மடல் உரையாடலில் செல்வாவிடம் என்ன சூழலில் மன்னிப்பு கோரினேன் என்பதன் முழுச் சூழலைச் சுட்டித் தான் என்னுடைய அனுமதி கோரித்தான் விக்கியில் எழுதினீர்களா சுந்தர்?

information asymmetry என்ற கருத்தே நீங்கள் சொல்லித் தான் தெரியும். ஆனால், மேற்கண்ட பிழையைத் தொடங்கி வைத்ததே நீங்கள் தான்.

முகநூலில் சாக்கலேட்டு விளம்பரம் போடுவதற்கு எல்லாம் விக்கியில் விளக்கம் கேட்கும் வழக்கத்தைத் தொடங்கி வைத்ததும் நீங்கள் தான்.

பின்வரும் பொன்மொழி உங்களுக்குப் பிடிக்காது, ஆனால், இந்த இடத்துக்குப் பொருந்தும்:

நீங்க அடிச்சா தக்காளி சட்டினி, நான் அடிச்சா இரத்தமா :)

பொறுப்பை ஏற்க இயலாமல் போவது வேறு. பொறுப்பைத் தட்டிக் கழிப்பது வேறு. ஐவர் குழு பரிந்துரை என்ற ஒற்றை உருவாக்கி விட்டு அதனைச் செயற்படுத்தாமல் விக்கிச்சமூகம் தட்டிக் கழித்ததா இல்லையா? நீங்கள் பொறுப்பேற்க இயலாவிட்டால் பரவாயில்லை. இன்னொருவர் பொறுப்பேற்காவிட்டால் பரவாயில்லை. ஆனால், யாருமே பொறுப்பேற்க மாட்டோம், நீங்கள் முறையிட்டுக் கொண்டே இருங்கள் என்று வேடிக்கை பார்த்தால் வருவதற்குப் பெயர் அறச்சீற்றம். பழி வாங்கல் அன்று.

தமிழ் விக்கிக்காக இவ்வளவு உழைத்திருக்கக்கூடாது என்ற பாடத்தை இப்போது தான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். அறிவுரைக்கு நன்றி, சுந்தர். இதில் நான் உங்களுடன் உடன்படுகிறேன் :)--இரவி (பேச்சு) 12:14, 7 மார்ச் 2014 (UTC)

இரவி, மேலேயுள்ள உங்கள் உரையைப் படிப்பதற்குமுன் நினைவுக்கு வந்து எழுதியது: "தனிப்பட்ட முறையில் உங்களை நான் தொலைபேசியில் சமாதானப்படுத்தி ஒத்துழைப்பு கோரியதால் வரும் தார்மீகப் பொறுப்பை ஏற்கிறேன்." பிறவற்றைப்பற்றி பிறகு எழுதுகிறேன். -- சுந்தர் \பேச்சு 12:18, 7 மார்ச் 2014 (UTC)

சுந்தர்,

பிணக்குத் தீர்வு தொடர்பான தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. உங்களுக்கும் மற்ற பலருக்கும் என் மீது எதிர்பார்ப்புகள் இருப்பதைப் போலவே எனக்கும் மற்ற பலர் மீதும் எதிர்பார்ப்பு இருந்தது, சுந்தர்.

நானும் நினைவில் இருந்து சிலவற்றைச் சொல்கிறேன். கிட்டத்தட்ட அக்டோபர் மூன்றாம் வாரம் வரை நான் நேரடியாக விக்கிப்பீடியாவில் உரையாடவில்லை. நானும் பிணக்கில் இறங்கி, நிலைமையைச் சிக்கலாக்க வேண்டாம் என்று மின்மடல் மூலமாகவே உங்களையும் உள்ளிட்ட மூத்த பயனர்களைத் தொடர்பு கொண்டிருந்தேன். (அப்படி எண்ணிச் செயல்படுபவனுக்கு கையாளோ கைப்பாவையோ பயன்படுத்தத் தேவையில்லை என்பது சொல்லித் தெரியவேண்டாம். ஆனால், இன்னும் அந்தப் பழிச் சொல் இருப்பது ஆறாவடு).

ஆனால், இப்படித் திரைமறைவாகச் செயற்படவேண்டாமே என்ற உங்கள் சொல்லாடலை அடுத்துத் தான், நான் நேரடியாக உரையாடத் தொடங்கினால் ஏற்படும் பின்விளைவுகளுப் பொறுப்பில்லை என்று கூறித்தான் விக்கியில் உரையாடத் தொடங்கினேன்.

நீங்கள் ஒருவர் நடுநிலையாகச் செயற்படுவீர்கள் என்ற ஒரே நம்பிக்கை தான் நீங்கள் வகுத்த பிணக்குத் தீர்வு முறையை அமைதியாக பின்பற்றச் செய்தது.

இன்னா செய்தாரை ஒறுத்தர் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்று முகநூலில் நீங்கள் சுட்டிக் காட்டியதை ஏற்றுத் தான் பல முறையீடுகளை நான் பின்வாங்கினேன். ஆனால்,

////இரவி நன்னயம் கருதித் தனது பல குற்றச்சாட்டுக்களைப் பின்னெடுத்தார். ஆனால், ஏற்கனவே இருந்த எரிச்சலில் அதை நாம் வரவேற்று மற்ற சிக்கல்களைத் தீர்க்க முனையவில்லை.//

என்று நீங்கள் சொன்னது தான் எனக்குக் கிடைத்த பரிசு.

விட்டுக் கொடுக்கும் போது எரிச்சலுடன் கவனியுங்கள்.

விடாமல் நியாயம் கேட்டால் பழி தீர்ப்பதாகச் சொல்லுங்கள் :)

நன்றி--இரவி (பேச்சு) 12:27, 7 மார்ச் 2014 (UTC)

இரவி, நீங்கள் நன்னயம் கருதி பல குற்றச்சாட்டுகளைப் பின்னெடுத்ததாகத்தானே கூறியிருக்கிறேன்? ஏற்கனவே இருந்த எரிச்சல் என்பது உங்களைக் குறித்ததாக எப்படி ஆனது? அந்த நேரம் விக்கியில் நிலவிய சூழலை எண்ணிப்பாருங்கள். நீங்கள் கைப்பாவை பயன்படுத்தியதாக நான் எண்ணவேயில்லை என்று உங்களிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஒரேயொருமுறை அவர் யாரென உங்களுக்குத் தெரியுமா என்றுதான் கேட்டேன். அதுவும் நேரடியாக உங்களிடம் தனிமடலில். நீங்கள் பொதுவில் கேட்கச்சொன்னதால்தான் கேட்டேன். // இப்படித் திரைமறைவாகச் செயற்படவேண்டாமே என்ற உங்கள் சொல்லாடலை // நீங்கள் முதலில் இருந்தே எனது சொற்களை வேறுவிதமாகப் புரிந்துகொண்டுள்ளதை உணர்கிறேன். திரைமறைவாக என்பது நீங்கள் விரும்பி ஏற்ற செயற்பாடாக நான் சொல்லவில்லை. உங்கள் நோக்கம் எவ்வாறாய் இருப்பினும் effectively அது தகவல் இணையற்றதன்மைக்கு வழிவகுக்கும் என்றே சொன்னேன். மன்னிப்புக்கேட்டதை நான் இங்கு வெளியிட்டதையும் உங்கள் சார்பாகத்தான் உங்களுக்கு ஆதரவான செய்தியாகத்தான் வெளியிட்டேன். முன் அனுமதி பெறாததற்கு வருந்துகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்.
முகநூல் நிலைத்தகவல் தொடர்பில் நீங்கள் கொள்கை முன்மொழியும்போது விளக்கலாம் என எண்ணியிருந்தேன். இருந்தாலும் இப்போதைக்கு ஒரு சுருக்கம். விக்கிக்கு வெளியேயான பயனர் இடுகைகளை இட்டுக்கட்டிப் பார்த்து விளக்கம் கேட்பதை நான் சரியெனச் சொல்லவில்லை. அதில் மூக்கை நுழைப்பதில் ஒருசிறிதும் ஆர்வமில்லை. முதலில் அதை உங்களிடம் தனிமடலில் கேட்பதற்கே தயங்கினேன். ஆனால், விக்கிக்கு வெளியே பொதுவில் (நோக்கம் அவ்வாறு இல்லாவிட்டாலும்) சீண்டிவிடும் வகையில் தொடர்ந்து புள்ளி இராசா பற்றியும், விக்கி நல்லெண்ண நம்பிக்கை விளக்கெண்ணை நம்பிக்கை என்றும், மேலும் பலவாறும் தாக்கும் வகையில் எழுதி, கைப்பாவை அறிதல் விண்ணப்பத்தில் தெரியாதபோது மாட்டிக்கொள்ளாமல் திருடுவதே சிறப்பு என்ற வகையில் 'டுபாக்குறள்' ஒன்றைப் பதிவது முதலியவை விக்கிப்பீடியர்கள் பலரது பார்வைக்கு அது வருகிறது. அது அவர்களுக்கு ஏற்படுத்தும் அழுத்தத்தையடுத்து அவர்கள் அதைப்பற்றி விக்கியிலும் பேசமுடியாவிட்டால் என்ன தீர்வு? உடனே உங்களை முகநூல் நட்பிலிருந்து நீக்குவது நெடுநாள் உறவைக் கைவிடுவதாகாதா? அப்படியே மறைத்தாலும் மற்றவர்கள் கருத்திடும்போது அது ஓடையில் வருமல்லவா? தவிர உங்கள் ஓடைக்கு ஓரளவு பெரிய வாசகர் வட்டமும் இருக்கிறதல்லவா? வலைப்பதிவில் எழுதுவதும் முகநூலில் இவ்வாறு எழுதுவதிலும் பெரிய வேறுபாடு இருக்கவில்லை. இதுதொடர்பில் ஆங்கில விக்கி வழிகாட்டல் பக்கமொன்றில் ஒருசிறிது நெறிமுறை இருந்தது. இணைப்பு கிடைத்ததும் தருகிறேன். இவ்வளவுக்குப்பிறகுதான் தனிமடலில் நமது விக்கி நட்புவட்டத்தினருக்கு மட்டும் படியிணைத்து (அவர்கள்தாம் உங்கள் நிலைத்தகவல்களை அதிகமாகப் பார்த்திருக்கக் கூடும் என்பதால்) மடலனுப்பினேன். ஒரேயொரு பதில் அதற்கும் விக்கிக்கும் தொடர்பில்லை என்று நீங்கள் சொல்லியிருந்தால் அதற்கு மேல் என்னால் கேட்டிருக்கவும் முடியாது. இதுதொடர்பில் கொள்கை முன்மொழியும்போது இதுபோன்ற சூழலில் என்ன செய்வது என்ற வழிகாட்டலையும் வகுக்க வேண்டும்.
மற்றபடி இந்த விசயத்தில் உங்கள் நடவடிக்கை முழுவதும் ஏற்புடையதுதான் என நீங்கள் கருதினால் நான் மறுப்பதற்கில்லை. என்னுடைய செயற்பாடுகளில் உங்களுக்கு இருக்கும் கேள்விகளை நீங்கள் விரும்பும்போது கேளுங்கள். என்னால் இயன்றவரை விளக்குகிறேன். ஏதும் தவறிருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன். மேல்நடவடிக்கை வேண்டுமளவுக்கு எதுவும் இருந்தால் எடுங்கள். குளம் நஞ்சானபின் வேறென்னசெய்வது? -- சுந்தர் \பேச்சு 16:17, 7 மார்ச் 2014 (UTC)

மன்னிப்பு எல்லாம் கோர வேண்டாம், சுந்தர். நடவடிக்கை கோரும் அளவுக்கும் ஒன்றும் இல்லை. சில விசயங்களைச் சுட்டிக் காட்ட வேண்டும். சில விசயங்களுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும். சில விசயங்கள் குறித்த கொள்கை முன்மொழிவுகளுக்கு நகர வேண்டும். வாக்கெடுப்பு / பிணக்குத் தீர்ப்பாய முடிவு வந்த பிறகு பேசுவோம். முன்பும் இப்போதும் இதனைப் பேசுவதால் பிரச்சினை திசை மாறுவதை நான் விரும்பவில்லை. நன்றி.--இரவி (பேச்சு) 07:23, 8 மார்ச் 2014 (UTC)

அது நொந்துபோய் வரும் மன்னிப்புகோரல், இரவி. எது வேண்டுமோ வைத்துக்கொள்ளுங்கள். மன்னிப்புக்கோர வேண்டாம் என்ற அக்கறைக்கு நன்றி. இயன்றால், உங்கள் காலக்கோட்டுக்கும் விதிமுறைகளுக்கும் ஒத்துவருமானால் இம்மாத இறுதிவரை என் பயனர் பெயருக்கு இணைப்பு தந்து மறுமொழி எதிர்பார்க்க வேண்டாம். குறிப்பிடும்போது மடல் வருவதை நிறுத்தி வைக்கவுள்ளேன். அதன்பின் வந்து உங்கள் கேள்விகள் ஏதாவது இருந்தால் பதிலளிக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 08:36, 8 மார்ச் 2014 (UTC)

சரி, சுந்தர். ஒன்றும் அவசரம் இல்லை. பயனர் பக்க இணைப்பு தந்தால் மடல்வரும் என்று இப்போது தான் தெரியும். பயன்படுத்திக்கொள்கிறேன். --இரவி (பேச்சு) 08:40, 8 மார்ச் 2014 (UTC)

Thank you for your comments at The Centre for Internet and Society[தொகு]

You posted comments at meta:Grants:APG/Proposals/2013-2014 round2/The Centre for Internet and Society/Proposal form. Thank you for asking the questions which needed to be asked. Blue Rasberry (talk) 13:49, 21 ஏப்ரல் 2014 (UTC)

கவணிக்கவும்[தொகு]

இதைப் பார்க்கவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:34, 8 சூன் 2014 (UTC)[பதிலளி]

செயல்நலம் மிக்கவர்[தொகு]

செயல்நயம் மிக்கவர் பதக்கம்
இரவி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காக பரப்புரை மேற்கொள்வதற்கும் விக்கிக்கான உங்களின் உழைப்பையும் பாராட்டி செயல் நலம் மிக்கவர் என்ற இப்பதக்கத்தை அகம் மகிழ்ந்து வழங்குகிறேன். ஆர்.பாலா (பேச்சு) 23:58, 10 சூன் 2014 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம் வாழ்த்துக்கள் இரவி அவர்களே!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:26, 11 சூன் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:28, 11 சூன் 2014 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் இரவி --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:52, 11 சூன் 2014 (UTC)[பதிலளி]
நன்றி ஆர்.பாலா, ஸ்ரீகர்சன், தினேஷ்குமார் பொன்னுசாமி, ஆதவன்.--இரவி (பேச்சு) 13:49, 14 சூன் 2014 (UTC)[பதிலளி]

மு.ப. கட்டுரை[தொகு]

முதற்பக்கக் கட்டுரையை இற்றைப்படுத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன். கட்டுரை இங்கு உள்ளது.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:00, 16 சூன் 2014 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று, ஸ்ரீகர்சன்--இரவி (பேச்சு) 13:04, 16 சூன் 2014 (UTC)[பதிலளி]

பதக்க வடிவமைப்பு[தொகு]

இரவி, தாங்கள் கேட்டதற்கிணங்க பதக்கத்தை வடிவமைத்து, என் பேச்சுப்பக்கத்தில் இணைத்துள்ளேன். அங்கு பதக்க வடிவமைப்பைக் காண்க. நன்றி. --தாரிக் அஸீஸ்  உரையாடுக  08:08, 1 சூலை 2014 (UTC)[பதிலளி]

பார்க்க[தொகு]

மின்மடலைப் பார்க்க--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:11, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

An important message about renaming users[தொகு]

Dear Ravidreams, My aplogies for writing in English. Please translate or have this translated for you if it will help. I am cross-posting this message to many places to make sure everyone who is a Wikimedia Foundation project bureaucrat receives a copy. If you are a bureaucrat on more than one wiki, you will receive this message on each wiki where you are a bureaucrat.

As you may have seen, work to perform the Wikimedia cluster-wide single-user login finalisation (SUL finalisation) is taking place. This may potentially effect your work as a local bureaucrat, so please read this message carefully.

Why is this happening? As currently stated at the global rename policy, a global account is a name linked to a single user across all Wikimedia wikis, with local accounts unified into a global collection. Previously, the only way to rename a unified user was to individually rename every local account. This was an extremely difficult and time-consuming task, both for stewards and for the users who had to initiate discussions with local bureaucrats (who perform local renames to date) on every wiki with available bureaucrats. The process took a very long time, since it's difficult to coordinate crosswiki renames among the projects and bureaucrats involved in individual projects.

The SUL finalisation will be taking place in stages, and one of the first stages will be to turn off Special:RenameUser locally. This needs to be done as soon as possible, on advice and input from Stewards and engineers for the project, so that no more accounts that are unified globally are broken by a local rename to usurp the global account name. Once this is done, the process of global name unification can begin. The date that has been chosen to turn off local renaming and shift over to entirely global renaming is 15 September 2014, or three weeks time from now. In place of local renames is a new tool, hosted on Meta, that allows for global renames on all wikis where the name is not registered will be deployed.

Your help is greatly needed during this process and going forward in the future if, as a bureaucrat, renaming users is something that you do or have an interest in participating in. The Wikimedia Stewards have set up, and are in charge of, a new community usergroup on Meta in order to share knowledge and work together on renaming accounts globally, called Global renamers. Stewards are in the process of creating documentation to help global renamers to get used to and learn more about global accounts and tools and Meta in general as well as the application format. As transparency is a valuable thing in our movement, the Stewards would like to have at least a brief public application period. If you are an experienced renamer as a local bureaucrat, the process of becoming a part of this group could take as little as 24 hours to complete. You, as a bureaucrat, should be able to apply for the global renamer right on Meta by the requests for global permissions page on 1 September, a week from now.

In the meantime please update your local page where users request renames to reflect this move to global renaming, and if there is a rename request and the user has edited more than one wiki with the name, please send them to the request page for a global rename.

Stewards greatly appreciate the trust local communities have in you and want to make this transition as easy as possible so that the two groups can start working together to ensure everyone has a unique login identity across Wikimedia projects. Completing this project will allow for long-desired universal tools like a global watchlist, global notifications and many, many more features to make work easier.

If you have any questions, comments or concerns about the SUL finalisation, read over the Help:Unified login page on Meta and leave a note on the talk page there, or on the talk page for global renamers. You can also contact me on my talk page on meta if you would like. I'm working as a bridge between Wikimedia Foundation Engineering and Product Development, Wikimedia Stewards, and you to assure that SUL finalisation goes as smoothly as possible; this is a community-driven process and I encourage you to work with the Stewards for our communities.

Thank you for your time. -- Keegan (WMF) talk 18:24, 25 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

--This message was sent using MassMessage. Was there an error? Report it!

பதக்கம்[தொகு]

மெய்வாழ்வுப் பதக்கம்
இரவி, தமிழ்விக்கியில் நீங்கள் செலவிடும் நேரம் மற்றும் உழைப்பிற்காக அகம் மகிழ்ந்து இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன். இரா.பாலா (பேச்சு) 11:15, 5 செப்டம்பர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம் தங்கள் விக்கிப்பணி தொடர என் வாழ்த்துக்கள்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:25, 5 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 04:47, 6 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்-- பல்வேறு அம்சங்களிலும் தமிழ் விக்கி தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருப்பதற்கு இரவியின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. உண்மையில் என்னைப்போன்ற பயனர்களின் பங்களிப்புக்கள் அவருடைய பங்களிப்பு இல்லாமல் உரிய பயனைப் பெறுவது கடினம். அவருக்கு எனது வாழ்த்துக்கள். இந்தப் பதக்கத்தை அவருக்கு வழங்கிய பயனர் இரா.பாலாவுக்கு எனது நன்றிகள். --- மயூரநாதன் (பேச்சு) 05:21, 6 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம் உங்கள் தன்னலமற்ற விக்கிப்பணிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள் இரவி! --நந்தகுமார் (பேச்சு) 06:29, 6 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:54, 6 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:30, 8 செப்டம்பர் 2014 (UTC)

இரா.பாலா, நான் பெற்ற, பெறப்போகிற பதக்கங்களிலேயே இதனையே சிறப்பாக பதக்கமாக கருதுகிறேன். மிக்க நன்றி. விருப்பம் தெரிவித்த, வாழ்த்திய யாழ்ஸ்ரீ, ஸ்ரீகர்சன், நந்தகுமார், மா. செல்வசிவகுருநாதன், தினேஷ்குமார் பொன்னுசாமி ஆகிய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, மயூரநாதனின் வாழ்த்து பல காயங்களுக்கு மருந்தாக உள்ளது. இனி வரும் காலத்தில் இயன்ற அளவு பங்களிப்பதுடன், கூடுதல் பொறுமையுடனும் பொறுப்புடனும் செயற்பட முனைகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 19:25, 9 செப்டம்பர் 2014 (UTC)

👍 விருப்பம்! தமிழ் விக்கிப்பீடியாவுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்துவிட்டவர்களுக்கு, இங்கு ஏற்படும் எவ்வகையான காயமும் ஆறிவிடும்!! தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்!!! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:18, 10 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 01:21, 3 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

சிறந்த வழிகாட்டுனர் பதக்கம்
இரவிசங்கர் தாங்கள் எனக்கு பல உதவிகள் செய்துள்ளீர்கள் உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன் உங்கள் பணி மென்மேலும் தொடர்வதற்கு வேண்டிய எல்லா நலங்களும் உங்களுக்குக் கிடைக்க எனது வாழ்த்துக்கள். -- mohamed ijazz(பேச்சு) 07:42, 2 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:23, 2 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--இரா.பாலா (பேச்சு) 08:27, 2 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:12, 2 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:17, 2 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள் இரவி அவர்களே!!!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:09, 2 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 01:22, 3 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

Scholarship page[தொகு]

Namaskar,
I can not write Tamil, ooops! Could you give me the scholarship page link at Tamil Wikipedia and let me know after starting WMIN page? --Titodutta (பேச்சு) 22:02, 6 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

உதவும்[தொகு]

ஹாய், நீங்கள் எனக்கு உதவ முடியும்? எப்படி மீது புதிய படத்தை பதிவேற்ற

User - Divyamani Kandiyar

பெண்ணியம் வலைவாசல்[தொகு]

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி--Commons sibi (பேச்சு) 18:28, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

தங்கள் பார்வைக்கு . மேம்படுத்த உதவவும் --Commons sibi (பேச்சு) 18:01, 28 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

மீளமைக்கப்படுதல்[தொகு]

[இந்த http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF&oldid=1753055] கட்டுரை மீளமைக்கப்படுகிறது, இது கூகிள் மொழிபெயர்ப்பு இல்லை கவனிக்கவும்