பயனர்:TNSE rajakumari thn/மணல்தொட்டி/6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ்(கி.பி.1813-கி.பி1823), வெல்லெஸ்லி பிரபுவைத் தொடர்ந்து ஹேஸ்டிங்ஸ் பிரபு என்றழைக்கப்பட்ட மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ் வங்களத்தின் தலைமை ஆளூநராகப் பொறுப்பேற்றார்.வெல்லெஸ்லியின் பணியினை இவர் நிறைவு செய்தார். இவர் காலத்தில் நேபாளத்தைச் சார்ந்த கூர்க்கர் இனத்தவர்,பிண்டாரி இனத்தவர்கள் மற்றும் மராத்திய தலைவர்கள் ஆங்கிலப் பேரரசை அகற்ற எண்ணினார்கள்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் அனைத்து சவால்களையும் ஹேஸ்டிங்ஸ் திறமையுடன் சமாளித்து ஆங்கில அரசாட்சியை இந்தியாவில் நிலைபெறச் செய்தார். இவருடைய ஆட்சிக் காலத்தில் 1813 ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம் ஆங்கில அரசால் நிறைவேற்றப்பட்டது. பட்டயச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் வியபார உரிமம் 20 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது.இந்தியாவுடனான வாணிப உறவு ஆங்கிலேய வியாபாரிகளுக்குத் திறந்து விடப்பட்டது.கிழக்கிந்திய நிறுவனத்தின் வானிகத் தனி உரிமை இரத்தானது.இந்தியர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஆண்டு தோறும் ரூபாய் ஒரு லட்சம் ஒதுக்கப்பட்டது.இந்தியாவில் வாழும் ஐரோப்பியர் சமய நலன் காக்க கிறித்துவப் பேராயர்கள் நியமிக்கப்பட்டனர்.ஆங்கில நாட்டு வியாபாரிகளும்,மதப் போதகர்களும் கட்டுப்பட்டு வாரியத்தின் அனுமதியோடு இந்தியாவில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர்.இறுதியாக, ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் வியாபாரத் தனி உரிமை முடிவுக்கு வந்தது.கிறித்துவச் சமயப் போதகர்கள்,தங்கள் சமயத்தைப் பரப்புவதற்கு அனுமதி பெற்றனர். கூர்க்கர்களுடன் போர்(கி.பி.1814-கி.பி.1816)நேபாளத்தைச் சார்ந்த கூர்க்கர் இனத்தவர்கள் ஆங்கிலேயர்களுக்குப் பெரும் சவாலாக விளங்கினார்கள்.இவர்கள் 1814 இல் ஷெரோஜ் மற்றும் பத்வால் பகுதிகளைக் கைப்பற்றினர்.ஆங்கிலேயர் இதனைச் சவாலாக எற்றுக்கொண்டு கூர்க்கர் இனத்தலைவர் அமர்சிங்கைத் தோற்கடித்தனர்.கி.பி.1816 ஆம் ஆன்டு கூர்க்கர்கள் ஆங்கிலேயர்களோடு சகௌலி அமைதி உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். பிண்டாரிகளுடன் போர்(கி.பி.1816-கி.பி.1818)பிண்டாரிகள் மத்திய இந்தியாவில் வாழ்ந்த கொள்கைக் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் ஆவார்கள்.அமிர்கான், வாசில் முகமது, கரிம்கான் மற்றும் சேட்டு போன்றவர்கள் பிண்டாரிகளின் தலைவர்கள் ஆவார்கள்.தலைமை ஆளூநர் ஹேஸ்டிங்ஸ் ஒரு பெரும் ஆங்கிலப் படையைப் பிண்டாரிகளுக்கு எதிராக அனுப்பி அவர்களைத் தோற்கடித்தார்.இவ்வாறு ஹேஸ்டிங்ஸ் பிண்டாரிகளின் கொடுஞ் செயலை அழித்து மத்திய இந்தியாவில் வாழும் மக்களைக் காப்பற்றினார். நான்காம் ஆங்கிலேய-மராத்தியப் போர்(கி.பி.1817-கி.பி.1818)ஆங்கிலேயர்களின் அதிகார வளர்ச்சி மராத்தியர்களுக்குப் பொறாமையாக அமைந்தது.எனவே பீஷ்வா தளபதிகளை ஒன்றிணைத்து ஓர் அரசியல் கூட்டமைப்பை ஆங்கிலேயர்களுக்கு எதிராக அமைத்தார்.பீஷ்வா இரண்டாம் பாஜிராவ் கி.பி.1817 ஆம் ஆண்டின் இறுதியில் பூனாவிலிருந்த ஆங்கிலப் பிரதிநிதியைக் கொலை செய்தார்.இது நான்காவது ஆங்கிலேய மராத்திய போருக்கு வழி வகுத்தது.இறுதியில் ஆங்கிலேயர்கள் முழூ வெற்றியைப் பெற்றனர்.இப்போருக்குபின் பீஷ்வா பதவி முடிவுக்கு வந்தது.இரண்டாம் பாஜிராவிற்கு ஆண்டிற்கு ரூபாய் 8 லட்சம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது.மராத்திய நிலப் பகுதியில் சதாரா என்ற் சிற்றரசை உருவாக்கி சத்ரபதி சிவாஜியின் வாரிசான பிரதாப் சிங்கை அரசராக ஆங்கில அரசு பிரகடனப் படுத்தியது.வலிமை மிகுந்த மராத்தியப் பேரரசு தனது அதிகாரத்தை இழந்தது.ஆங்கில அரசு இந்தியவில் தனது வலிமை மிகுந்த பேரரசினை உருவாக்கியது.

மேற்கோள்கள்[தொகு]

[1]

  1. சமூகறிவியல்-எட்டாம் வகுப்பு-தொகுதி 2-165,166