பயனர்:TNSE THEEKUTCHI PDK/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜோயிதா மண்டல்என்பவர் இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளத்தைச் சார்ந்த திருநங்கை ஆவார். இவர் இந்திய நாட்டிலேயே முதல் திருநங்கை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.[1]

பெயர் ஜோயிதா மண்டல்
பிறப்பிடம் கொல்கத்தா
பாலினம் திருநங்கை
பதவி நீதிபதி லோத் அதாலத், இஸ்லாம்பூர் மாவட்ட மக்கள் நீதிமன்றம்

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஜோயிதா மண்டல் மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரில் பிறந்தவர்.பின்னர் இஸ்லாம்பூரில் வாழ்ந்து வந்தார். அங்கு திருநங்கைகளை ஒன்று திரட்டி சங்கம் ஒன்றை உருவாக்கினார்.

தினாஜ்பூர் புதிய விளக்கு[தொகு]

இவர் ஒன்று திரட்டிய சங்கத்திற்கு தினாஜ்பூர் புதிய விளக்கு என பெயரிட்டார். சங்கத்தின் மூலம் பல்வேறு சமூக பணிகளைச் செய்தார். பலரிடம் உதவி பெற்று திருநங்கைகளுக்கு பல்வேறு வித உதவிகளைச் செய்து வந்தார்.

நீதிபதி[தொகு]

பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டமைக்காகவும், திருநங்கைகளுக்கு உதவி செய்தமைக்காகவும் இவருக்கு நீதிபதி பதவி வழங்கப்பட்டுள்ளது.இவர் இஸ்லாம்பூர் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.[2] திருநங்கை நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. timesofindia.indiatimes.com/india/joyitas-journey-from-begging-to-national-lok-adalat-bench/articleshow/59519954.cms
  2. http://www.newindianexpress.com/nation/2017/jul/22/indias-first-transgender-judge-joyita-mondal-wants-jobs-for-her-community-1632169.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_THEEKUTCHI_PDK/மணல்தொட்டி&oldid=2386763" இலிருந்து மீள்விக்கப்பட்டது