பயனர்:TNSE CHITIRAIMATHI TVM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

’’’இலக்கணக் கொத்து’’’ இலக்கணக் கொத்து ஒரு தமிழ் இலக்கண நூலாகும். இதன் ஆசிரியர் சுவாமி்னாத தேசிகர் ஆவார். இவரது காலம் கி.பி 17 ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர்.

அமைப்பு[தொகு]

இந்த நூல் சொல் மற்றும் ஓரளவு எழுத்திற்கு இலக்கணம் கூறுவதாய் அமைந்துள்ளது.

இயல் பகுப்பு[தொகு]

மூன்று இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை 1. வேற்றுமையியல் 2. வினையியல் 3. ஒழிபியல் ஆகும். 131 நூற்பாக்களைக் கொண்டுள்ளது.

உரை[தொகு]

நூலாசிரியரே இதற்கு உரை எழுதியுள்ளார்.

பதிப்பு[தொகு]

ஆறுமுகனாவலர் இதைப் பதிப்பித்துள்ளார்.

சிறப்பு[தொகு]

  1. இது ஒரு இலக்கணத் திறனாய்வு நூல்.
  2. தெரிவினை இரண்டு என்கிறது.( சொல்லால் தெரிவினை, பொருளால் தெரிவினை )
  3. மறை மூவகை.
  4. விகாரம் நான்கு. ( தோன்றல், திரிதல், கெடுதல், நிலைமாறுதல் )

உசாத்துணை நூல்கள்[தொகு]

  • அழகப்பன், ஆறு., இலக்கணக்கருவூலம் ,அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பதிப்பு 1985.
  • இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2009.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]