முன்னேசுவரம்இலங்கையில் உள்ள சிவன்கோவில்களில் காலத்தால் மிகவும் முற்பட்டது ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன முறையாய் அமைந்த இத்திருத்தலம் அழகேசுவரம் எனவும் வழங்கப்படுகின்றது. இக்கோவில் இலங்கையில் உள்ள பஞ்ச ஈசுவரங்களில் முதன்மையானது. இக்கோயிலில் இன, சமய, மொழி வேறுபாடின்றி பல இனத்தவரும் வழிபட்டு வருகின்றனர். இலங்கையின் வடமேற்கே புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை இராமர், வியாசர் முதலியோர் வழிபட்டதாக தட்சணகைலாசபுராணம் குறிப்பிடுகின்றது. குளக்கோட்ட மன்னன் இவ்வாலயத்தைப் புனர்நிர்மாணம் செய்ததுடன், அதற்கு 64 கிராமங்களை வழங்கியதாகவும் முன்னேஸ்வர மான்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டை அரசன் ஆறாம் பராக்கிரமபாகு இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்ததுடன் பல கிராமங்களையும் மானியமாக அளித்துள்ளான். போர்த்துக்கேயர் 1578 இல் முன்னேசுவர ஆலயத்தை அழித்துச் சூறையாடி, இத்தலத்துக்கு உரித்துடையதான வளம் மிகுந்த நிலங்களையும் அபகரித்தனர். மேலும்...
சுந்தர சண்முகனார் (1922-1977) புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர், கவிஞர், எழுத்தாளர். தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்டவர். நூல் தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. 70 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய படைப்புகள் அனைத்தும் 2010 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளன. சண்முகனார் திருவையாறு அரசர் கல்லூரியில் படித்து வித்துவான் பட்டம் பெற்றார். 1952 இல் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் தேர்ந்தார். ஞானியார் அடிகளின் பரிந்துரையைப் பெற்று மயிலம் சிவஞானபாலைய அடிகள் தமிழ்க் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் பணியேற்றார். 1947-இல் புதுச்சேரியில் பைந்தமிழ் பதிப்பகம் என்னும் நூல் வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பின்னர் புதுவை அரசினர் ஆசிரியர் பயிற்சி நடுவத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.மேலும்...
நாலுகெட்டு வீடு (படம்) என்பது கேரளத்தில் தாய்வழிச் சமூகத்தில் பல தலைமுறைகளாகக் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்களின் மரபுவழி வீடுகளாகும். நான்குபுறமும் சதுர வடிவில் கட்டப்பட்டு நடுவில் வானவெளியான முற்றம் கொண்டு நான்கு அறைகள் கொண்ட செவ்வக வடிவ வீடாகும். நடுமுற்றத்தில் வேலைப்பாடுகள் கொண்ட நான்கு மரத் தூண்களால் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
நழுவு சட்டம் என்னும் ஒப்புமைக் கணிப்பொறி பெருக்கல், வகுத்தல் செயல்களுக்கும் N-ஆம் மூலங்கள், மடக்கைகள், முக்கோணவியல் சார்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
மோர்மொன் நூல் என்ற புனித நூல் பின்னாளைய புனிதர்களால் விவிலியத்துடன் இணைந்து கடவுளின் வாக்காக நம்பப்படுவதாகும்.
உறங்குநிலையில் திடுக்கம் என்பது பலருக்கும் உறங்கச் செல்லும்போது அரைத்தூக்கத்தில் அவ்வப்போது நிகழும் ஒரு விளைவாகும். ஆழ்நிலைத்தூக்கத்திற்குச் செல்லும் முன்னர் உடற் தசைகள் தளர்வதால் ஏற்படும் இழுப்பினால் சுண்டித் திடுக்கிடுகிறது.
தமிழீழம் எனப்படுவது இலங்கைத் தமிழர்களால் தங்களது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களை உட்பட்ட நிலப்பகுதியைக் குறிப்பதாகும். தமிழர்களாலும், தமிழ் அரசியல் நிறுவனங்களாலும் தமிழீழம் தங்களது தேசியமாக முன்வைக்கப்படுகிறது. இத்தேசிய கோரிக்கை, இலங்கையின் எண்ணிக்கைப் பெரும்பான்மை இனமான சிங்களவரை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பெருந்தேசியவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உணர்வாக உருவானது. தமிழீழக் கோரிக்கை 1977ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, வாக்களிப்பில் அறுதிப்பெரும்பான்மை ஆதரவினை பெற்று தமிழ் தேசிய இனத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது.
எலும்புண்ணிக் கழுகு (gypaetus barbatus) உயர்மலைப் பகுதிகளில் வாழும் பெரும் பிணந்தின்னி வகைக் கழுகுகளில் ஒன்று. இந்தியாவின் வடபகுதியிலும், திபெத்து, ஆப்கானித்தான், ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா ஆகிய இடங்களிலும் உள்ள மலைப்பகுதிகளில் வாழ்கின்றது. இது ஈரானியப் புராணங்களில் ஹோமா என்று அழைக்கப்படுகிறது. முதுகெலும்புள்ள இவ்விலங்குகள், அதன் உணவில் 70 முதல் 90 சதவீதத்தை எலும்புகளாக உண்ணுகின்றன. இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கருதப்படுகிறது. இவை 94 முதல் 125 செண்டிமீட்டர் நீளம் கொண்டவை, இறக்கைகள் 2.31 முதல் 2.83 மீட்டர் வரை இருக்கும். இந்த எலும்புண்ணிக் கழுகு சுவிட்சர்லாந்தின்ஆல்ப்சு மலைகளில் ஓர் உடலத்தின் எலும்புத் துண்டைச் சுமந்து செல்லும் பொழுது புகைப்படம் எடுக்கப்பட்டது. இங்கு 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உள்ளூரில் அழிந்துபோன இந்த இனம் 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
கே. முத்தையா (1918 - 2003) விடுதலைப் போராட்ட வீரர். பொதுவுடைமைப் போராளி, இதழாளர், எழுத்தாளர், இலக்கியப் பேச்சாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவராக இருந்தவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பல ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்தவர். தமிழ்நாடு, தஞ்சாவூர் முடப்புளிக்காட்டில் பிறந்தவர். 1932 இல் பெரியார்சோவியத்து நாட்டில் சுற்றுப்பயணம் முடித்து பட்டுக்கோட்டையில் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு சோசலிசத்தின் பால் ஈடுபாட்டை முத்தையாவிற்கு ஏற்படுத்தியது. தேசவிடுதலைத் தியாகி வீராச்சாமித் தேவர் தலைமையில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் முத்தையா தன் மாணவ நண்பர்களுடன் சென்று மறியல் செய்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 1939 முதல் 1942 வரை தலைமறைவாக இருந்து பணியாற்றினார். மோகன் குமாரமங்கலம் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், முத்தையா சென்னை மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படத் தொடங்கினர். மேலும்...
கசக்ஸ்தான்மத்திய ஆசியாவிலுள்ள ஒரு கண்டம் கடந்த தொடர்ச்சியான நாடாகும். இதன் ஒரு சிறுபகுதி கிழக்கு ஐரோப்பாவில் யூரல் ஆற்றுக்கு மேற்கே அமைந்துள்ளது. கசக்ஸ்தான் உலகின் மிகப்பெரிய நிலம்சூழ் நாடாகவும் உலகின் ஒன்பதாவது பெரிய நாடாகவும் உள்ளது. 2,727,300 கிமீ² பரப்பளவு கொண்ட இதன் பகுதி மேற்கு ஐரோப்பாவிலும் பெரியதாகும். இதன் எல்லைகளாக உருசியா, சீனா, கிர்கிஸ்தான், உசுபெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் கஸ்பியன் கடலின் பெரும்பகுதியும் காணப்படுகின்றன. கசக்ஸ்தானின் நிலவமைப்பு வெட்டவெளிகள், புல்வெளிகள், தைக்கா காடுகள், மலைப் பள்ளத்தாக்குகள், மலைகள், கழிமுகங்கள், பனிச்சிகரங்கள் மற்றும் பாலைவனங்களைக் கொண்டுள்ளது. இதன் மக்கள்தொகை 17 மில்லியனாகும். கசக்ஸ்தானின் பகுதிகளில் வரலாற்றுக்காலம் முதல் நாடோடிக் குழுக்கள் குடியேறியுள்ளனர். 13ம் நூற்றாண்டில் செங்கிஸ் கான் நாட்டைக் கைப்பற்றிய பின் இது மாற்றமுற்றது. எனினும் அவனது குடும்பத்தினரின் அதிகாரப் போட்டி காரணமாக கசக்ஸ்தானின் ஆட்சி நாடோடிக் குழுக்களிடம் கைமாறியது. மேலும்...
நாலுகெட்டு வீடு (படம்) என்பது கேரளத்தில் தாய்வழிச் சமூகத்தில் பல தலைமுறைகளாகக் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்களின் மரபுவழி வீடுகளாகும். நான்குபுறமும் சதுர வடிவில் கட்டப்பட்டு நடுவில் வானவெளியான முற்றம் கொண்டு நான்கு அறைகள் கொண்ட செவ்வக வடிவ வீடாகும். நடுமுற்றத்தில் வேலைப்பாடுகள் கொண்ட நான்கு மரத் தூண்களால் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
நழுவு சட்டம் என்னும் ஒப்புமைக் கணிப்பொறி பெருக்கல், வகுத்தல் செயல்களுக்கும் N-ஆம் மூலங்கள், மடக்கைகள், முக்கோணவியல் சார்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
மோர்மொன் நூல் என்ற புனித நூல் பின்னாளைய புனிதர்களால் விவிலியத்துடன் இணைந்து கடவுளின் வாக்காக நம்பப்படுவதாகும்.
உறங்குநிலையில் திடுக்கம் என்பது பலருக்கும் உறங்கச் செல்லும்போது அரைத்தூக்கத்தில் அவ்வப்போது நிகழும் ஒரு விளைவாகும். ஆழ்நிலைத்தூக்கத்திற்குச் செல்லும் முன்னர் உடற் தசைகள் தளர்வதால் ஏற்படும் இழுப்பினால் சுண்டித் திடுக்கிடுகிறது.
எலும்புண்ணிக் கழுகு (gypaetus barbatus) உயர்மலைப் பகுதிகளில் வாழும் பெரும் பிணந்தின்னி வகைக் கழுகுகளில் ஒன்று. இந்தியாவின் வடபகுதியிலும், திபெத்து, ஆப்கானித்தான், ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா ஆகிய இடங்களிலும் உள்ள மலைப்பகுதிகளில் வாழ்கின்றது. இது ஈரானியப் புராணங்களில் ஹோமா என்று அழைக்கப்படுகிறது. முதுகெலும்புள்ள இவ்விலங்குகள், அதன் உணவில் 70 முதல் 90 சதவீதத்தை எலும்புகளாக உண்ணுகின்றன. இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கருதப்படுகிறது. இவை 94 முதல் 125 செண்டிமீட்டர் நீளம் கொண்டவை, இறக்கைகள் 2.31 முதல் 2.83 மீட்டர் வரை இருக்கும். இந்த எலும்புண்ணிக் கழுகு சுவிட்சர்லாந்தின்ஆல்ப்சு மலைகளில் ஓர் உடலத்தின் எலும்புத் துண்டைச் சுமந்து செல்லும் பொழுது புகைப்படம் எடுக்கப்பட்டது. இங்கு 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உள்ளூரில் அழிந்துபோன இந்த இனம் 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.