பயனர்:RATHINAPANDI/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாள்வாங்கி விருதுநகர் மாவட்டம்[தொகு]

அமைவிடம்[தொகு]

வாள்வாங்கி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டத்தில் செட்டிகுறிச்சி செட்டிக்குறிச்சிக்கு உட்கடை கிராமமாக அமைந்துள்ளது.மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை '45 பி'யில் அருப்புக்கோட்டை பந்தல்குடிக்கு இடையில் அருப்புக்கோட்டைக்குத் தெற்கில் 8வது கிலோ மீட்டரில் அட்சரேகை தீர்க்கரேகையில் அமைந்துள்ளது

தோற்றம்[தொகு]

இவ்வூர் இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் கீழ் கட்டுப்பட்ட ஊர் ஆகும். பிள்ளைமுத்து என்ற சமஸ்தான பணியாளரால் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வூர் உருவாக்கப்பட்டது. எனவே ஆரம்பத்தில் பிள்ளைமுத்துபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் வாள்வாங்கி என்று அழைக்கப்படுகிறது.

பெயர்க்காரணம்[தொகு]

இவ்வூருக்கு தாய்கிராமமான செட்டிக்குறிச்சி மற்றும் அருகாமை கிராமங்கள் கம்பளத்து நாயக்க வமிச ஜமின்தார்களால் ஆளப்பட்டு வந்தது. அங்கு இடிந்த நிலையில் உள்ள அரண்மனை எச்சங்கள் உள்ளன. அவ்வமிசத்தின் இளைய ஜமின்தார் சாரங்குராசன் மீது காம இச்சை கொண்ட தன் சித்தியின் சதியால் தன் தந்தையாலே கொல்லப்பட்டார்1.அவர் கொலை செய்யப் பயன் படுத்தப்பட்ட வாள் இறை சக்தியால் மறைக்கப்பட்டதாக இப்பகுதியில் நம்மப்படுகிறது. அவர் கொல்லப்பட்ட இடம் வாள்வாங்கி காட்டுப் பகுதியாகும். எனவே இவ்வூர் வாள்வாங்கி என்று பெயர் பெற்றதாக இப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இன்றும் சராசரியாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புரவித்திருவிழா நடைபெறுகிறது. இப்புரவி மீது எந்தவிதமான இறைச்சின்னங்கள் வைக்கப்படுவது இல்லை. வெள்ளை வேட்டிகள் மட்டுமே குதிரையின் முதுகின் மீது குறுக்கே இடப்படுகின்றது. இக்குதிரை அரண்மனையில் இருந்து சாரங்குராசன் கொலை செய்யப்பட்ட இடம் வரை செல்கின்றது.

மக்கள்தொகை[தொகு]

  • ஆண்கள் 670
  • பெண்கள் 720
  • குழந்தைகள் 260

பள்ளி[தொகு]

ரெங்கநாதா தொடக்கப்பள்ளி, அருகாமை மேல்நிலப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, செட்டிக்குறிச்சி, அரசுக்கலை அறிவியல் கல்லூரி

படிமம்:வாள்வாங்கி விருதுநகர் மாவட்டம்
வாள்வாங்கி விருதுநகர் மாவட்டம்

மேற்கோள்[தொகு]

  1. இது செவிவழிச்செய்தியாக அறியப்படுகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:RATHINAPANDI/மணல்தொட்டி&oldid=3617724" இலிருந்து மீள்விக்கப்பட்டது