பயனர்:Manikandan.ts

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருஞானசம்பந்தம் சிங்காரவேலு மணிகண்டன் பொதுவாக தி. சி. மணிகண்டன் என்று அறியப்படுவார். இவர் வீரநத்தம் சிங்காரவேலு, அழகியநத்தம் மல்லிகா தம்பதியினருக்கு தலைமகனாக புதுவையில் பிறந்தவர். தற்போது பெங்களூருவில் தனியார் நிருவனத்தில் பணியாற்றி வருகிறார். தொழில்நுட்ப வல்லுனரான இவர் தனது ஆறு வருட பணி அனுபவத்தில், பத்து கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். தமிழ் மொழியிலும், தமிழர் வரலாற்றிலும், பழந்தமிழர் பண்பாட்டிலும், அறிவியலிலும், மனோதத்துவத்திலும், இயற்கை வேளாண்மையிலும் மிகுந்த ஆர்வமுடையவர். புத்தகங்கள் படிப்பது, நீள் ஓட்டங்களில் பங்கேற்பது, ஓகம் பயில்வது, அறிவியல் ஆய்வுகளில் பங்கேற்பது இவரது பொழுதுபோக்குகளாகும். இணையற்ற தமிழை இணையத்தில் சிறக்கச் செய்வதை தற்போதைய தலையாயக் கடமையாக ஏற்றுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Manikandan.ts&oldid=1916030" இலிருந்து மீள்விக்கப்பட்டது