பயனர்:ஆ.சரத்குமார்
ஆலாத்தூர் கிராமம் (Villupuram in Alathur)
ஆலாத்தூர் கிராமம் விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் வட்டத்தில் கோலியனூர் ஒன்றியத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த கிராமம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும். இந்த ஊரின் மக்கள் தொகை 2011ஆம் ஆண்டின் கணக்கின்படி 938 ஆகும் இதில் ஆண்கள் 459 பேரும் பெண்கள் 479 பேரும் உள்ளனர். இவ்வூரில் 232 வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தின் மொத்த பரப்பளவு 190.37 ஹெக்டேர் ஆகும்.
இந்த கிராமத்தில் நான்கு கிளைகளை கொண்ட அதிசய பனைமரம் உள்ளது மேலும் ஊரின் அருகே பம்பை எனும் பெண்ணையாற்றின் கிளை நதி ஓடுவது அதன் சிறப்பாகும். இந்த ஊரில் இருந்து பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையம் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளன.
மேலும் தகவலுக்கு [1]