பந்தலூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பந்தலூர் வட்டம் , தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பந்தலூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 2 உள்வட்டங்களும், 8 வருவாய் கிராமங்களும் உள்ளன. இவ்வட்டத்தில் நெல்லியாளம் நகராட்சி உள்ளது.

2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பந்தலூர் வட்டம் 61,538 ஆண்களையும் 64,339 பெண்களையும் சேர்த்து 125,877 மக்கள் குடித்தொகையைக் கொண்டிருந்தது.

பந்தலூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்[தொகு]

  1. சேரங்கோடு I
  2. சேரங்கோடு II
  3. எருமாடு I
  4. எருமாடு II
  5. மூணாடு I
  6. மூணாடு II
  7. நெல்லியாளம் I
  8. நெல்லியாளம் II

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தலூர்_வட்டம்&oldid=3311292" இலிருந்து மீள்விக்கப்பட்டது