பத்மநாபன் நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாமண்டலம் பத்மநாபன் நாயர்
பிறப்பு7 அக்டோபர் 1928
வெள்ளிநெழி, மலபார் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு3 ஏப்ரல் 2007(2007-04-03) (அகவை 78)
ஷொர்ணூர், பாலக்காடு மாவட்டம், கேரளம், இந்தியா
வாழ்க்கைத்
துணை
கலாமண்டலம் சத்யபாமா

கலாமண்டலம் பத்மநாபன் நாயர் (1928-2007) ஒரு சிறந்த கதகளி நிபுணராக இருந்தார். தென்னிந்திய மாநிலமான கேரளாவிலிருந்து பாரம்பரிய நடனம்-நாடகம் குறித்த ஒரு ஆசிரியராகவும், கோட்பாட்டாளராகவும், ஒரு சில உண்மை நூல்களை எழுதியவராகவும் இவரது திறன்களுக்காக அறியப்பட்டார்.[1] கதகளியின் குரு பட்டிக்கம்தோடி இராவுன்னி மேனனின் மகனான பத்மநாபன் நாயர் கேரள கலாமண்டலத்தின் ஆரம்பகால மாணவர்களில் ஒருவராக இருந்தார். பின்னர் இவர் அதன் ஆசிரியராக சேர்ந்து 1990இல் அதன் முதல்வராக ஓய்வு பெற்றார். இவர் 2007 ஏப்ரல் 3 அன்று, ஷொரனூரில் உள்ள தனது வீட்டில் காலமானார். அங்கு இவர் தனது மனைவியும் மோகினியாட்டத்தின் நிபுணரும், குருவுமான கலாமண்டலம் சத்தியபாமாவுடன் தங்கியிருந்தார். [2]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

பத்மநாபன் நாயர் 1928 அக்டோபர் 7 ஆம் தேதி அப்போதைய பிரித்தானிய இந்தியாவின் வள்ளுவநாட்டில் (இப்போதைய பாலக்காடு மாவட்டம்) வெள்ளிநெழி என்ற கதகளி கிராமத்திற்கு அருகிலுள்ள குருவட்டூரில் பிறந்தார். தனது ஆரம்ப பள்ளிப்படிப்புக்குப் பிறகு, இவர் தனது பத்து வயதில் கலாமண்டலத்தில் சேர்ந்தார். இவரது தந்தையே இவருக்கு குருவாக இருந்தர். அவரிடம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கலை வடிவத்தை கற்றுக்கொண்டார். [3] பாரம்பரிய கதைக்களமான கிருட்டிணனின் "சுபத்ராதிருமணம்" என்ற நிகழ்ச்சி இவரது அறிமுக மேடையாக இருந்தது. இவர் 1951இல் கலாமண்டலத்தில் சேருவதற்கு முன்பு கோட்டக்கல்லுள்ள பி.எஸ்.வி நாட்டியச்சங்கத்தில் கதகளியைக் கற்றுக் கொண்டார்.

வெளியீடுகள்[தொகு]

பத்மநாபன் நாயர் தனது தந்தை குரு பட்டிக்கம்தோடி பற்றிய புத்தகத்தை இணைந்து எழுதியுள்ளார். ஆனால் அவரது அதிக மதிப்புமிக்க படைப்புகள் 'கதகளி வேஷம்' (1980) மற்றும் 'சோலியாட்டம்' (2000). வட-மத்திய கேரளாவின் கதகளியின் மிகவும் வளர்ந்த கல்லுவாழி பள்ளியில் பாரம்பரிய கதைக்களங்களின் இலக்கணம் மற்றும் அழகியலைக் கையாளும் இரண்டு தொகுதிகளாகும். இவரது மற்றொரு புத்தகம் "ஆட்டக்கதை சாரம்", அதில் பதினேழு ஆட்டக்கதைகளின் சாரம் உள்ளது. பேராசிரியர் நயாத் பாலன் என்பவருடன் இணைந்து எழுதிய "நாட்டியச்சரியந்தே ஜீவதமுத்திரகள்" மலையாள இலக்கியத்திற்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருதினையும் (1994), கேரள அரசின் கதகளி புரஸ்காரம் கௌரவத்தையும் (2006), மலையாள இலக்கியத்திற்கான "ஓடக்குழல் விருது" (2004) ஆகியவற்றை வென்றவர். கலையின் தொழில்நுட்ப மற்றும் அழகியல் கூறுகளின் ஆழ்ந்த அறிவு மற்றும் தேர்ச்சிக்கான கதகளி இலக்கணத்தின் கடைசி வார்த்தையாக இவர் அடிக்கடி விவரிக்கப்பட்டார். கதகளியில் மிகவும் நேர்த்தியான கதாபாத்திரங்களின் "சோலியாட்டம்", குறிப்பாக இவர் நிகழ்த்திய கோட்டயத்து தம்புரான் மற்றும் கொட்டாரக்கரா தம்புரான் ஆகியோரின் உன்னதமான நாடகங்களில் இருந்தது. இது1985 இல் மறைந்த டேவிட் போலண்ட் (இலண்டன்) என்பவரால் படமாக்கப்பட்டது. கேரளாவில் கலாமண்டலம் அதன் உடல் மொழியின் அடிப்படைகளை அறிய கதகளியின் ஆராய்ச்சியாளர்களாலும் சொற்பொழிவாளர்களால் மிகவும் மதிப்புமிக்க ஆவணமாக கருதப்படுகிறது [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Hindu : Kerala News : Greatest teacher of Kerala's own art form". Archived from the original on 2011-09-22. பார்க்கப்பட்ட நாள் 2021-02-21.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-04-26. பார்க்கப்பட்ட நாள் 2021-02-21.
  3. Kathakali Encyclopedia (Vijnanakosam), page 379
  4. "The Hindu : Magazine / Tribute : A Kathakali immortal". Archived from the original on 2009-09-10. பார்க்கப்பட்ட நாள் 2021-02-21.

Website: www.kalapadmanabhatrust.co.in

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மநாபன்_நாயர்&oldid=3689758" இலிருந்து மீள்விக்கப்பட்டது