பத்மசாலியர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு | |
மொழி(கள்) | |
தெலுங்கு | |
சமயங்கள் | |
இந்து | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
சாலியர் |
பத்மசாலியர் (Padmasaliyar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற தெலுங்கு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தனர்.
இச்சமூகத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர்.[1]
இவர்கள் தங்களை பத்மபிராமின் என்று அழைத்து கொள்கின்றனர். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[2]
தொழில்[தொகு]
இவர்கள் பெரும்பான்மையாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.[3]
வாழும் பகுதிகள்[தொகு]
இவர்கள் தமிழகத்தில், குறிப்பாக தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், வேலூர், தர்மபுரி, திருநெல்வேலி மற்றும் கள்ளக்குறிச்சி, சென்னை - பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய மாவட்ட பகுதிகளில், அதிக அளவில் வசிக்கின்றனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Eveline Kumar Suresh Singh, தொகுப்பாசிரியர் (2004). People of India - Volume 40, Part 2. Anthropological Survey of India. பக். 1125. https://books.google.co.in/books?id=CBIwAQAAIAAJ. "The mother-tongue of the Padmasaliyar is Telugu, but they speak Tamil with others"
- ↑ "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
- ↑ ச வே.சுப்பிரமணியன், தொகுப்பாசிரியர் (1999). நெல்லை மாவட்டத் தமிழாளர். உலகத் தமிழ்க் கல்வி இயக்கம். பக். 217. https://books.google.co.in/books?id=s4lkAAAAMAAJ&q=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81. "இப் பத்மசாலியர் பட்டு நூல் நெசவு போன்ற தொழில்களைச் செய்து வரும் தமிழ் மக்களாவர் . இவர்கள் தெலுங்கு நாட்டிலிருந்து குடி பெயர்ந்துள்ளனர்"