பத்தாங்காலி படுகொலைகள்
Jump to navigation
Jump to search
பத்தாங்காலி படுகொலைகள் Batang Kali Massacre | |
---|---|
இடம் | பத்தாங்காலி, சிலாங்கூர், மலேசியா |
நாள் | டிசம்பர் 12, 1948 |
தாக்குதலுக்கு உள்ளானோர் | சுங்கை ரீமோ ரப்பர் தோட்டம், பத்தாங்காலி |
தாக்குதல் வகை | படுகொலை |
இறப்பு(கள்) | 24 |
தாக்கியோர் | பிரித்தானியா இராணுவத்தின் 7-ஆம் பிரிவு, G கம்பனி இரண்டாம் ஸ்காட்ஸ் படையினர் (2nd Scots Guards) |
பத்தாங்காலி படுகொலைகள் (Batang Kali Massacre) என்பது மலேசியா, சிலாங்கூர், பத்தாங்காலியில், டிசம்பர் 12, 1948 ஆம் ஆண்டு பிரித்தானிய இராணுவத்தின் 7-ஆம் பிரிவு படையினரால் 24 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். கொல்லப் பட்டவர்களில் அனைவரும் ஆண்களாவர். ஒரே ஒருவர் மட்டும் தப்பித்துக் கொண்டார். வியட்நாமில் ஒரு மை லாய் படுகொலை என்றால், மலேசியாவிலும் அது ஒரு மை லாய் படுகொலை என்று சொல்லப்படுகிறது.[1]