பதினாறு பேறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழர்களின் சைவத் திருமணச் சடங்குகளில் "ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தப்படுகின்றது. இங்கு குறிப்பிடப்படும் பதினாறு பெரும் பேறுகளாவன:

  1. அன்பான துணை
  2. கபடற்ற நட்பு
  3. கலையாத கல்வி
  4. குறையாத வயது
  5. குன்றாத வளமை
  6. கோணாத செயல்
  7. சலியாத மனம்
  8. பரவசமான பக்தி
  9. பிணியற்ற உடல்
  10. போகாத இளமை
  11. மாறாத வார்த்தை
  12. தடையற்ற கொடை
  13. தவறாத சந்தானம்
  14. தாழாத கீர்த்தி
  15. துன்பமில்லா வாழ்வு
  16. தொலையாத நிதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதினாறு_பேறு&oldid=3406773" இலிருந்து மீள்விக்கப்பட்டது