பண்ணந்தூர் சென்னகேசவ பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு சென்னகேசவ பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:பண்ணந்தூர், போச்சம்பள்ளி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கிருஷ்ணகிரி
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:சென்னகேசவ பெருமாள்
சிறப்புத் திருவிழாக்கள்:3 ம் சனி

பண்ணந்தூர் சென்னகேசவ பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் போசளர் காலத்தைச் சேர்ந்தது.[2]

கோயில் அமைப்பு[தொகு]

கோயிலின் முன்புறத்தில் மேற்கு பார்த்து கருடாழ்வார் உள்ளார். அவரருகில் கருட விளக்குக் கம்பம் உள்ளது. கோயிலின் மேற்புரத்தில் ஆஞ்சநேயர், பிரம்மன், பலராமன், கிருஷ்ணன், கல்கி அவதாரச் சிலைகள் காணப்படுகின்றன. கோயிலின் முன்புறம் திருக்குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் இருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் 3 ம் சனி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 133-137. 
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)