உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டிட் கே. சந்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Pandit K. Santanam
பண்டிட் கே. சந்தானத்தின் நினைவாக 2011-இல் இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட அஞ்சல் தலை
பிறப்பு(1885-08-25)25 ஆகத்து 1885
கும்பகோணம்,
மதராசு தலைமாகாணம்,
பிரித்தானிய இந்தியா
(தற்போது தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு30 ஆகத்து 1949(1949-08-30) (அகவை 64)
புது தில்லி,
தே.த.ப. தில்லி,
இந்திய மேலாட்சி (தற்போது இந்தியா)
பணிவழக்கறிஞர், தொழிலதிபர், அரசியலர், இந்திய விடுதலைப் போராளி
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்
வாழ்க்கைத்
துணை
கிருஷ்ணா ஆத்மாராம் வேதி
பிள்ளைகள்4 மகள்கள்

பண்டிட் கே. சந்தானம் (25 ஆகத்து 1885 - 30 ஆகத்து 1949) தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரிஸ்டர், அரசியலர், தொழிலதிபர் மற்றும் இந்திய விடுதலைப் போராளி ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் நகரில் வாழ்ந்த ஒரு ஐயங்கார் குடும்பத்தில் 25 ஆகத்து 1885 அன்று பிறந்தவர்.

லாலா லஜபதி ராயின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர். இலட்சுமி இன்சூரன்ஸ் நிறுவனத்தை இணைந்து நிறுவினார், அது பின்னர் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமாக மாறியது.

ஜாலியன் வாலாபாக் படுகொலையை அம்பலப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார். பிரித்தானிய இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஹண்டர் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்தவர். இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் செயலர். இலாகூர் நகரத்தின் முன்னாள் நகர ஆணையராக விளங்கியவர்.

ஆரிய சமாஜ தலைவர் பண்டிட் ஆட்டம்ராம் வீயின் மகள் கிருஷ்ணாவை மணந்தவர்.[1]

மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு பெற்றவர்.

தன் 64-ஆம் பிறந்தநாளுக்கு ஐந்து நாட்களுக்குப் பின் 30 ஆகத்து 1949 அன்று தில்லியில் காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Tribune, Chandigarh, India - Main News". www.tribuneindia.com. Retrieved 2021-11-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டிட்_கே._சந்தானம்&oldid=4364987" இலிருந்து மீள்விக்கப்பட்டது