படுகளாநத்தம் மாரியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு மாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:படுகளாநத்தம், விருத்தாசலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விருத்தாசலம்
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
தாயார்:மாரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரை திருவிழா, மகாசிவராத்திரி, கார்த்திகை சோமவார பூஜைகள்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]
அமைத்தவர்:படுகளாநத்தம் பண்ணையம்

படுகளாநத்தம் மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், படுகளாநத்தம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

மிகவும் பழமையான கிராமக்கோயில் ஆகும்.இந்த கோயில் திருவிழா சுற்று வட்டாரப்பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த கோயில் திருவிழாவில் நடத்தப்படும் பாரத கதைகளும்,காளி விரட்டும் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த கோயிலை பல தலைமுறைகளாக படுகளாநத்தம் பண்ணையத்தை சேர்ந்த குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.

கோயில் அமைப்பு[தொகு]

படுகளாநத்தம் கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாரியம்மன் கோயிலில் சதாசிவ லிங்கம் என பெயர்கொண்ட பழமையான சிவலிஙகமும், நவகிரக சன்னிதியும் உள்ளது.

இந்த கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு 2022ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த கோயில் படுகளாநத்தம் பண்ணையத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட கிராமப் பொது கோயில் ஆகும்.

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் சித்திரை திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

சித்திரை 1ம் நாள் தமிழ் வருடபிறப்பு பூஜை ஆடி மாதம் - பால்குடம்

ஆவணி மாதம் - வினாயகர் சதுர்த்தி விழா

கார்த்திகை மாதம் அனைத்து திங்கள் கிழமைகளும் சோமவார பூஜை

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)