பஞ்சாபி பல்கலைக்கழகம்
Jump to navigation
Jump to search
பஞ்சாபி பல்கலைக்கழகம் | |
குறிக்கோளுரை | கல்வியை கொடையளி |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | கல்வி அதிகாரமளிக்கிகின்றன |
வகை | பொதுப் பல்கலைக் கழகம் |
உருவாக்கம் | 1962 ஏப்ரல் 30 |
வேந்தர் | இந்திய பஞ்சாப் ஆளுநர்கள் |
துணை வேந்தர் | ஜஸ்பால் சிங் |
மாணவர்கள் | 20000-க்கும் மேற்பட்டோர் |
அமைவிடம் | பட்டியாலா, பஞ்சாப் (இந்தியா), ![]() 30°22′N 76°27′E / 30.36°N 76.45°Eஆள்கூறுகள்: 30°22′N 76°27′E / 30.36°N 76.45°E |
வளாகம் | நகர பகுதிகள் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) (யுஜிசி) |
இணையதளம் | www.punjabiuniversity.ac.in www.ucoe.ac.in |
பஞ்சாபி பல்கலைக்கழகம் (Punjabi University) என்பது, வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள பட்டியாலா நகரில் அமைந்துள்ள ஒரு உயர் கல்வி நிறுவனமாகும். பஞ்சாபி பல்கலைக்கழகம், கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக அறிவியல் ஆய்வுகள், மனிதநேயம், மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் கற்பிக்கும் பன்முகம் கொண்ட பெரும் பாடசாலையாக இருக்கிறது. [1]
துவக்கம்[தொகு]
1962-ம் ஆண்டு ஏப்ரல் 30-ல் நிறுவப்பட்ட இப்பஞ்சாபி பல்கலைக்கழகம், எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் போன்றே ஒருமொழி (பஞ்சாபி) பெயரைக் கொண்டு செயல்படுகிறது. மேலும், இக்கல்வி நிறுவனம், உலகின் ஒரே இரண்டாவது பல்கலைக்கழகமாகவும் அறியப்படுகிறது.[2]