பசுபதிநாதன் (சுவரெழுத்து கலைஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பசுபதிநாதன் என்பவர் சேலத்தைச் சேர்ந்த சுவரெழுத்து கலைஞர். இவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா விளம்பரங்கள் எழுதிக்கொண்டிருக்கிறார். இவர் கடந்த 19 ஆண்டுகளாக சுவர்களில் பொன்மொழிகளை எழுதி வருகிறார். இவர் பொன்மொழிகளை எம் எம் எம் கார்னர் என்ற தலைப்பில் சுவரில் எழுதி வருகிறார்.

இவரைப் பற்றி[தொகு]

இவர் சேலம் மாநகரில் மட்டும் 30 இடங்களில் பொன்மொழிகள் எழுதி வருகிறார். இவர் ஓவ்வொரு வாரமும் புதிதாக சுவரில் எழுதுவார். இவர் செவ்வாயன்று சுவரை அழித்துவிட்டு புதனன்று புதிய பொன்மொழிகளை எழுதிவிடுகிறார். அவை வியாழன் முதல் அடுத்த வாரம் செவ்வாய் இரவு வரை அப்படியே இருக்கும். இவர் இதனைத் தனது சொந்தச் செலவில் செய்து வருகிறார். "Inspiration through Ideation" என்ற தலைப்பில் டெட் நிகழ்ச்சி ஒன்றில் சேலம் மாநகரில் ஜூன் 9ஆம் தேதி 2012ல் உரையாற்றியுள்ளார்.[1]

இவரைப்பற்றிய ஒளிப்படக்காட்சி[தொகு]

விருதுகள்[தொகு]

சேலம் கன்சுயுமர் வாய்ஸ் என்ற அமைப்பு இவரது சேவையைப் பாராட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மார்ச் 23, 2012ல் விருது வழங்கியுள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.youtube.com/watch?v=bS2dj7kypzs#t=61