பக்ஷாலி ஓலைச்சுவடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பக்ஷாலி ஓலைச்சுவடி இந்திய கணித மரபின் புராதன பனுவல்களில் ஒன்றாக விளங்குகின்றது. பெஷாவரிலிருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பக்ஷாலி எனும் சிறிய கிராமத்தில் 1881இல் கண்டறியப்பட்டது.

Hoernle, G.R.Kye ஆகிய இரண்டு ஆய்வாளர்கள் இச் சுவடி பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இச் சுவடி காஷ்மீரத்தை அண்டிய பகுதிகளிலிருந்த சாரதா எனும் எழுத்து வகையில் எழுதப்பட்டுள்ளது என்கின்றார் Hoernle.[1]

தற்போது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் போட்லியன் நுால் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இச் சுவடியில் பல்வேறு கணித விதிகளும், அவற்றுக்கான உதாரணங்களும், செய்கை முறைகளும் காணப்படுகின்றன.

References[தொகு]

  1. ச. முகுந்தன் (2011), இந்துக் கணித வானியல் மரபு, குருஷேத்திரா வெளியீடு, யாழ்ப்பாணம், இலங்கை ISBN 978-955-5341-0-1 பிழையான ISBN
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்ஷாலி_ஓலைச்சுவடி&oldid=2710734" இலிருந்து மீள்விக்கப்பட்டது