பக்டீரியா இலைவெளிறல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பக்டீரியா இலைவெளிறல்(Bacteria leafblight) எனப்படுவது நெல்லில் தாக்கும் ஒரு நோய் ஆகும். நோய்காரணி சாந்தோமோனசு ஒறைசே (Xanthomonus orizae) எனும் பக்டீரியா. இந்நோய் பெரும்பாலும் நாற்று நட்டு 3-4 வாரங்களிலிருந்து தோன்றும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறிப் பின் வெளிறியது போர் மாறும்.

நோய்த்தாக்கம்[தொகு]

  • ஆரம்ப நிலையில் இலேசான பச்சைநிற நீர்க்கசிவு அல்லது மஞ்சள் நிறக் கசிவு இலையின் நுனி மற்றும் விளிம்புகளில் தோன்றும்.
  • நுனிப்பகுதியிலிருந்து தாக்கம் இலையுறை வரைப் பரவும். இலைப்பரப்பு கருகிய திட்டுக்களாக மாறும்.இலைப்பரப்பு விரலால் தடவும் போது கரடுமுரடாகக் காணப்பபடும்.

நோய் பரவும் முறை[தொகு]

  • முதல் போகத்தில் எஞ்சிய தாவரப் பாகங்களில் நோய்க்காரணியின் வித்திகள் காணப்படும்.
  • காற்று நீர் மூலமும் பரவும்.
  • நாற்றின் சேதமடைந்த வேரிலிருந்துதம் வித்திகள் பரவும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்டீரியா_இலைவெளிறல்&oldid=2743872" இலிருந்து மீள்விக்கப்பட்டது