பகாசூரன்
பாகாசூரன் என்பவர் மகாபாரதக் கதைகளில் வருகின்ற அரக்கனாவார். [1] |பாண்டவர்களின் அஞ்ஞாத வாசத்தின் போது, பீமன் இவரைக் கொன்றான். இவரையும், இவர் மனைவியையும் நாட்டார் தெய்வமாக வழிபடுகின்றனர். திரௌபதியம்மன் கோயில்களில் தனித்திருக்கும் பகாசூரன் சிலைகள் உள்ளன.[2] இவருக்கு அசைவ உணவுகள் படைக்கப்படுகின்றன.
கதை[தொகு]
இவர் ஏக சக்கரம் எனும் ஊருக்கு அருகே வசித்துவந்தார். அங்குள்ள மக்கள் எண்ணற்ற பொருள்களை அசுரனுக்கு உணவாக அனுப்பி வந்தார்கள், உடன் உணவினைக் கொண்டு வருவோர்களையும் அந்த அரக்கன் சாப்பிட்டுவந்தான்.
பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் எனும் மறைந்திருந்து வாழ்ந்தலின் போது அக்கிராமத்தில் ஒரு வீட்டில் தங்கினார்கள். அந்த முறை பகாசுரனுக்கு அந்த வீட்டிலிருந்து ஒரு நபர் உணவினைக் கொண்டு செல்ல வேண்டும். அதனை அறிந்த குந்தி தேவி, தன்னுடைய மகன் பீமனை அனுப்பினார். பாகாசுரனின் உணவோடு அவனிடம் சென்ற பீமன், அந்த உணவினை அனைத்தும் தானே உண்டார். அதனால் கோபம் கொண்ட பகாசுரனுடன் பீமன் போர் புரிந்தார். அதில் பகாசுரனை பீமன் கொன்றார்.
பகாசூரன் வதம்[தொகு]
பகாசூரன் வதம் என்பது இந்து சமயக் கோயில்கள் சிலவற்றில் நடத்தப்படும் விழாவாகும். பெரும்பாலும் திரௌபதியம்மன், வனபத்திரகாளியம்மன் போன்ற கோயில்களில் இந்த விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் பீமன் பகாசூரனை கொல்லுதல் நடைபெறும். [3]
கோயில்கள்[தொகு]
- லாஸ்பேட்டை திரவுபதி அம்மன்கோயில், புதுச்சேர் - பராசூரன் சிலை உள்ளது. [4]
- தேக்கம்பட்டி நெல்லீசுவரர் கோயில், நெல்லித்துறை, கோவை மாவட்டம் - பராசூரன் சிலை உள்ளது [5]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ தீபம் இதழ் மே 05 2016 பக்கம் 46
- ↑ http://www.maalaimalar.com/Devotional/Worship/2016/07/11083256/1024844/throwpathi-amman-temple-festival.vpf
- ↑ http://www.dinamalar.com/district_detail.asp?id=1262656
- ↑ http://www.dailythanthi.com/News/Puducherry/2016/07/11013857/In-ammankovil-pakacuranFloating-Festival-karikkola.vpf
- ↑ http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=23069[தொடர்பிழந்த இணைப்பு]