பகவத்ஜ்ஜூகம்
பகவத்ஜ்ஜுகம் என்பது கி.பி 7ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஒரு சமசுகிருத கேலிக்கூத்து நாடகம் ஆகும். இதனைப் போதாயனர் எழுதியாதாகக் கூறப்படுகிறது.[1] இருப்பினும், கல்வெட்டு உள்ளிட்ட பிற சான்றுகள் இந்த நாடகத்தை பல்லவ மன்னர் முதலாம் மகேந்திரவர்மன் எழுதியதாகக் குறிப்பிடுகின்றன. இவரே மத்தவிலாச பிரஹாசனா என்றும் அழைக்கப்படும் மற்றூமொரு முக்கிய கேலிக்கூத்து நாடகத்தையும் எழுதியுள்ளார்.[2][3][4] இது சமசுகிருத இலக்கியத்தில் நையாண்டி நாடகத்தின் பத்து வகையான நாடகங்களுல் ஒன்று.[5]
உள்ளடக்கம்
[தொகு]- நகைச்சுவையான உரையாடல்கள்
- ஆன்மாக்களின் மறுபிறப்பு
- இந்து தர்மத்தில் சந்நியாசம் பற்றிய விவாதம்
ஆகியவற்றைக் கொண்ட இந்த நகைச்சுவை நாடகம், மதக் கோட்பாடுகளை நையாண்டி செய்வதை நோக்கமாகக் கொண்டது
கதாபாத்திரங்கள்
[தொகு]பரிவ்ராஜகர் - துறவி அல்லது குரு சாண்டில்யர் - சீடர் வசந்த்சேனர் - விலைமகள் ராமிலேகர் - விலைமகளின் காதலன் விதுஷகர் - நகைச்சுவையாளர் ஒரு போலி மருத்துவர் யமதூதர் - மரணத்தின் அதிபதியான யமராஜாவின் தூதர்
கதைச் சுருக்கம்
[தொகு]தோட்டத்தில் இருக்கும் ஒரு பெண்ணை நோக்கி கவனம் செலுத்தும் ஒரு குருவுக்கும் ஒரு சீடனுக்கும் இடையிலான சன்யாச இந்து தர்மம் குறித்த விவாதத்துடன் தொடங்குகிறது. விவாதம் தொடரும்போது, அந்தப் பெண் ஒரு பாம்பினால் கடித்து இறந்து விடுகிறாள். இது சீடனை ஆழமாகப் பாதிக்கிறது. தனது யோக சக்தியை வெளிப்படுத்தி குரு சீடனின் ஆன்மாவை பெண்ணின் உடலுக்குள் மாற்றுகிறார். பின்னர் அவர் எழுந்து தத்துவ விவாதத்தைத் தொடர்கிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bodhāyanakavi (1925). Bhagavadajjukiyam: a Prahasana of Bodhayana Kavi with commentary (in சமஸ்கிருதம்). Pāliyagranthaśālā.
- ↑ Lockwood, Michael. Metatheater and Sanskrit Drama: Part II.
- ↑ Saxena, Saurabh (11 November 2010). "Puratattva" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-05-01.
- ↑ "Cave Temples Mamandur". Million Gods (in ஆங்கிலம்). Retrieved 2023-05-01.
- ↑ www.wisdomlib.org (2017-05-07). "Ten Kinds of Play (daśarūpa) [Chapter XX]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2023-05-01.