பகத்சிங் கோசியாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகத்சிங் கோசியாரி
भगत सिंह कोश्यारी
கலந்துரையாடலில் பகத்சிங் கோசியார்
22வது மகாராட்டிர ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
05 செப்டம்பர் 2019
முன்னையவர்சி. வித்தியாசாகர் ராவ்
இரண்டாவது முதலமைச்சர், உத்தரகண்ட்
பதவியில்
30 அக்டோபர் 2001 – 1 மார்ச் 2002
முன்னையவர்நித்தியானந்த சுவாமி
பின்னவர்என். டி. திவாரி
மக்களவை உறுப்பினர்
நைனிடால்-உதம்சிங் நகர் மக்களவைத் தொகுதி
பதவியில்
16 மே 2014 – 23 மே 2019
முன்னையவர்கரண் சந்த் சிங் பாபா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 சூன் 1942
பாலனதுரா சேத்தப்கர், பாகேஸ்வர் மாவட்டம், உத்தராகண்ட் இந்தியாஇந்தியா
இறப்பு17 சூன் 1942
இளைப்பாறுமிடம்17 சூன் 1942
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்திருமணமாதவர்
பிள்ளைகள்none
பெற்றோர்
  • 17 சூன் 1942
முன்னாள் கல்லூரிஆக்ரா பல்கலைக்கழகம்
வேலைஆசிரியர்

பகத்சிங் கோசியாரி (Bhagat Singh Koshyari) (இந்தி: भगत सिंह कोश्यारी) (பிறப்பு: 17 சூன் 1942) இந்திய அரசியல்வாதியும், உத்தராகண்ட் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும், உத்தராகண்ட் மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சரும் ஆவார். இராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினரான பகத் சிங் கோசியாரி, பாரதிய ஜனதா கட்சியி தேசியத் துணைத் தலைவராகவும், உத்தராகண்ட் மாநில பாரதிய ஜனதா கட்சியின் முதல் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியவர்.

மேலும் உத்தராகண்ட் மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக 2001 முதல் 2002 முடியவும், பின்னர் 2002 முதல் 2007 முடியவும் பதவியில் இருந்தவர். 2008 முதல் 2014 முடிய இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 16 மே 2014-இல் பதினாறாவது மக்களவைக்கு, நைனிடால்-உதம்சிங் நகர் மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பிறப்பும் இளமையும்[தொகு]

கோபால் சிங் கோசியாரி – மோதிமா தேவி இணையருக்கு 17 சூன் 1942-இல் பாலனதுரா சேத்தப்கர், பாகேஸ்வர் மாவட்டம், உத்தராகண்ட் மாநிலத்தில் பிறந்தவர் பகத் சிங் கோசியாரி.[1]

அல்மோரா கல்லூரியில் ஆங்கில மொழி முதுநிலை பட்டம் பெற்ற பகத் சிங் கோசியாரி, கல்லூரி ஆசிரியராகவும், ஊடகவியல் துறையிலும் பணியாற்றியவர்.

அரசியல்[தொகு]

இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலை காலத்தில், மிசா சட்டத்தில் பகத் சிங் கோசியாரி கைது செய்யப்பட்டு அல்மோரா மற்றும் பதேகர் சிறைகளில் சூலை 1975 முதல் மார்ச் 1977 முடிய சிறையில் இருந்தவர்.[1]

மே 1977-இல் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2000-இல் புதிதாக நிறுவப்பட்ட உத்தராஞ்சல் மாநிலத்தின் எரிசக்தி, நீர்பாசானம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

நித்தியானந்த சுவாமிக்குப் பின்னர், 30 நவம்பர் 2001 முதல் 1 மார்ச் 2002 முடிய உத்தராகண்ட் மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக 30 நவம்பர் 2001 முதல் 1 மார்ச் 2002 முடிய பணியாற்றியவர்.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Shri Bhagat Singh Koshyari - Members of Parliament (Rajya Sabha)". National Portal of India. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.
  2. "Former Chief Ministers". Official Website Of the Chief Minister Of Uttarakhand, India. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகத்சிங்_கோசியாரி&oldid=3219190" இலிருந்து மீள்விக்கப்பட்டது