ந. மகேசுவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ந. மகேசுவரி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் மாங்கனி, மோகினி, பாரதி ஆகிய பெயர்களில் எழுதிவருகின்றார், இவர் ஒரு ஆசிரியர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1958 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல், கவிதைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "புதிய வாரிசு" (நாவல்);
  • "தாய்மைக்கு ஒரு தவம்" (சிறுகதைகள்)
  • "பிறந்த நாள் பரிசு" (மாணவர் கதைகள்)
  • ந.மகேசுவரியின் கதைகள் (2003)

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார்.

  • சிறந்த எழுத்தாளர் விருது - தமிழ் நேசன் இதழ் (1963)
  • டான் ஸ்ரீ ஆதி நாகப்பன் விருது (1989)
  • "சிறுகதைச் செல்வி" விருது - தமிழ் இலக்கியக் கழகம் (1990)
  • தங்கப் பதக்கம் - மலேசியத் தமிழ் எழுத்தாளார் சங்கம் (2005).

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._மகேசுவரி&oldid=3217732" இலிருந்து மீள்விக்கப்பட்டது