நோமிடா சாண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோமிடா சாண்டி
Nomita Chandy
பிறப்புபெங்களூர், கருநாடகம், இந்தியா
பணிசமூகப் பணியாளர்
விருதுகள்பத்மசிறீ
வலைத்தளம்
Official web site

நோமிடா சாண்டி (Nomita Chandy) இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஓர் இந்திய சமூக சேவகர் ஆவார். ஆதரவற்ற குழந்தைகளின் மறுவாழ்வுக்கான சேவைகளுக்காக நன்கு அறியப்படுகிறார்.

சாண்டி பெங்களூரிலுள்ள அரசு சார்பற்ற நிறுவனமான ஆசிரயாவின் செயலாளராக இருந்தார்.[1] ஆதரவற்ற குழந்தைகளின் மறுவாழ்வுக்காக முக்கியமாக பணியாற்றினார்.[2] இந்த அமைப்பின் கீழ் சாண்டியும் அவரது சகாக்களும் நாட்டிற்குள் 2000 குழந்தைகளையும், அயலகக் குழந்தைகள் 1000 பேரையும் சட்டப்பூர்வமாக தத்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதில் வெற்றி பெற்றனர்.[3] ஆசிரயா அமைப்பு நீல்பாக் என்ற ஒரு பள்ளியையும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான பாதுகாப்பான மழலையர் காப்பகம் ஒன்றையும் நடத்துகிறது. இக்குழந்தைகள் பராமரிப்பு மையம் பார்வை குறைபாடுள்ள எட்டு குழந்தைகளையும் கவனித்துக்கொள்கிறது.[4] இந்திய அரசு 2011 ஆம் ஆண்டு நோமிதா சாண்டிக்கு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான் பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.[5]

நோமிடா சாண்டி 2015 ஆம் ஆண்டு மே மாதம் பெங்களுர் நகரில் காலமானார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ashraya Home". Ashraya. 2014. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
  2. "Ashraya about". Ashraya. 2014. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
  3. "TOI". TOI. 14 December 2011. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
  4. "The Hindu". The Hindu. 19 March 2011. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
  5. "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  6. Menon, Parvathi (6 June 2015). "Champion for the abandoned". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 30 May 2018.

புற இணைப்புகள்[தொகு]

  • "Nomita Chandy". Video. YouTube. 14 April 2013. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோமிடா_சாண்டி&oldid=3561308" இலிருந்து மீள்விக்கப்பட்டது