நேபாளதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேபாளதேசம் பாஞ்சாலதேசத்திற்கு வடமேற்கிலும், கோசலதேசத்திற்கு வடக்கிலும், ஆரட்டதேசத்திற்கு மேற்கிலும் இமயமலையின் தெற்கிலும், அகன்று விசாலமாக பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்[தொகு]

இந்த தேசத்தில் பூமி முழுவதும் எப்பொழுதும் இடைவிடாத பனி, மழை, குளிர் இவைகள் அதிகமாக இருக்கும். இந்த தேசத்திற்கு கிழக்கு பாகத்திலே ஆயவர்கம் என்ற ஓர் உபதேசமுண்டு.[2]

மலை, காடு, விலங்குகள்[தொகு]

இந்த தேசத்திற்கு நடுவில் தவளகிரி என்ற பெரிய மலையும், குன்றுகளும், அடர்ந்த காடுகளாலும், பெரியமலைகளினாலும், சூழப்பட்டுள்ளதால், இதை மலை நாடு என்றே அழைப்பதுண்டு. இத்தேசத்தின் காடுகளில் வெள்ளைக் குதிரைகளும், வெண்மை ஆடுகளும் கொடிய காட்டு விலங்குகளும் அதிகம் உண்டு.

நதிகள்[தொகு]

இந்த நேபாளதேசத்தின் கிழக்கிலும், ஆரட்டதேசத்திற்கு மேற்கிலும், இமயமலையிலிருந்து உருவாகி தெற்கு நோக்கி ஓடுகிற நதி கௌசிகீ இந்த தேசத்தை செழிக்க வைக்கின்றது.

கருவி நூல்[தொகு]

சான்றடைவு[தொகு]

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 198 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாளதேசம்&oldid=2437159" இலிருந்து மீள்விக்கப்பட்டது