நெய்க்காரபட்டி-வருவாய் கிராமம்

ஆள்கூறுகள்: 10°26′43″N 77°27′46″E / 10.445189°N 77.462690°E / 10.445189; 77.462690
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெய்க்காரபட்டி
—  வருவாய் கிராமம்  —
நெய்க்காரபட்டி
இருப்பிடம்: நெய்க்காரபட்டி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°26′43″N 77°27′46″E / 10.445189°N 77.462690°E / 10.445189; 77.462690
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

நெய்க்காரபட்டி (en:Neikarapatti) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்).[4], [5] பழனி வருவாய் வட்டத்தின் நாற்பத்திநான்காவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்: 44) ஆகும்.[6] இக்கிராமம் பழனி வட்டங்களிலுள்ள பேரூராட்சிகளில் ஒன்றாகும், நெய்க்காரபட்டி குறு(உள்)வட்டத்தின் (FIRKA) தலைமையிடமாகவும் உள்ளது.

அமைவிடம்[தொகு]

பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை (வழி-கொழுமம்) செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பழனியிலிருந்து மேற்கே சுமார் 7 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 403 மீட்டர் உயரத்தில் உள்ளது. [7]

சிறப்பு[தொகு]

இந்தியாவில் பிரித்தானிய அரசு இருந்த காலத்தில் இக்கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு ஜமீன் அமைக்கப்பட்டு நெய்க்காரபட்டி ஜமீன் என்று அழைக்கப்பட்டது. 1956ல் ஜமீன் ஒழிப்பு சட்டத்தால் ஜமீன் கலைக்கப்பட்டு அரசின் வருவாய் கிராமமாக்கப்பட்டது. இதன் கடைசி ஜமீன்தாரர் நரேந்திர குள்ளம நாயக்கர் ஆவார். பல தமிழ் திரைப்படங்கள் இந்த ஜமீன் அரண்மனையில் படமாக்கப்பட்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,891 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[8] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நெய்க்காரப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நெய்க்காரப்பட்டி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

முக்கிய பயிர்[தொகு]

பாலாறு-பொருந்தலாறு அணையின் நீர்வள ஆதாரத்தின் ஒரு பகுதியினைக்கொண்டு நெல், கரும்பு, தென்னையும், புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.

நிருவாக அமைப்பு[தொகு]

கிராமத்தின் தகவல்கள்[தொகு]

  • வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 159 முடிய
  • வருவாய்கிராமத்தின் பரப்பு  : 524.72.00 ஹெக்டேர்- (1296.61 ஏக்கர்)
  • வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம்  :
  • குக்கிராமங்களின் எண்ணிக்கை  :

அடிக்குறிப்பு[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://dindigul.nic.in/administrator/rvillage.html
  5. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=13&blk_name=Palani பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் &dcodenew=22&drdblknew=10
  6. திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.
  7. http://wikimapia.org/#lang=ta&lat=10.452996 &lon=77.482796&z=1 6&m=w
  8. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)