நூலுக்குப் பெயரிடும் முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூலுக்குப் பெயரிடும் முறை என்று நன்னூல் சில வழிமுறைகளை விளக்கியுள்ளது.

பெயரிடும் முறைகள்[தொகு]

ஒரு நூலுக்குப் பெயரிடும்போது பின்பற்றக்கூடிய வழிமுறைகளாக நன்னூல் காட்டுவது:

  1. நூலுக்குரிய முதல் நூலின் பெயர் - இராமாயணம், பாரதம்
  2. நூலை இயற்றிய கருத்தாவின் பெயர் - அகத்தியம், தொல்காப்பியம்
  3. நூலின் அளவை முன்னிறுத்தும் பெயர் - நாலடியார், புறநானூறு
  4. நூலில் காணப்படும் பெரும்பான்மைப் பொருளின் பெயர் - களவியல்
  5. நூலில் அமைந்திருக்கும் பொதுப் பொருளின் பெயர் - அகப்பொருள்
  6. நூலைச் செய்வித்தவனை முன்னிறுத்தும் பெயர் - வீரசோழியம்
  7. நூலின் இயல்பை முன்னிறுத்தும் பெயர் - சிந்தாமணி, நன்னூல்
  8. நூலில் கூறப்படும் பொருளில் சிறப்புடையதின் பெயர் - வெற்றிவேற்கை, ஆத்திச்சூடி
  9. நூலின் காரணத்தை முன்னிறுத்தும் பெயர் - நிகண்டு

முதலான காரணங்களின் அடிப்படையில் ஒரு நூலுக்குரிய பெயர் அமையும்.[1]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. முதனூல் கருத்தன் அளவு மிகுதி
    பொருள்செய் வித்தோன் தன்மைமுதல் நிமித்தினும்
    இடுகுறி யானும் நூற்கெய்தும் பெயரே. - நன்னூல் 49

வெளி இணைப்புகள்[தொகு]