நுண்ணறி மின்வலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுண்ணறி மின்வலை (Smart Grid) என்பது எண்ணிமதொழில்நுட்ப படிவத்தை மின்சார வலைப்பின்னலுக்குப் பயன்படுத்தி எரிசக்தி சேமிக்க, குறைப்பதற்கான மற்றும் நம்பகத்தன்மை அதிகரிக்கும் ஒரு வழியாகும்.அறிவார்ந்த கண்காணிப்பு, கட்டுப்பாடு[தொடர்பிழந்த இணைப்பு], தொடர்பு, மற்றும் சுய சிகிச்சைமுறை தொழில்நுட்பங்கள் சேர்ந்து புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நுண்ணறி மின்வலை பயன்படுத்துகிறது.

1960களில் வளர்ந்த நாடுகளின் மின்சார தொகுதிகள், பெரிய சுமை மையங்களுக்கு, அதிக திறன் மின் இணைப்புகள் வழியாக, சக்தி வழங்கும் ஆயிரக்கணக்கான 'மத்திய' ஆற்றல் உற்பத்தி நிலையங்கள், ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதாகவும், மிக பெரியதாகவும் மாறிவிட்டது. இது பின்னர் கிளைத்து, முழு விநியோக பகுதிகளுக்கும், சிறிய தொழில்துறை மற்றும் உள்நாட்டு பயனர்களுக்கும் சக்தி வழங்குகின்றது.

மின் உற்பத்தி நிலையங்கள் புதைபடிவ எரிபொருள் இருப்புக்களின்  (புதைபடிவ சுரங்கங்கள் அல்லது கிணறுகள், அல்லது இரயில், சாலை அல்லது துறைமுக சப்ளை) அருகில் இருக்குமாறு அமைந்துள்ளன. மலை பகுதிகளில் இயல்பாக அமைக்கப்படும் நீர்மின் அணைகளும், மின்சார தொகுதிகளின் அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தின. அணு உலைகள் குளிர்ந்த நீர் கிடைக்கும் பகுதிகளில் அமைக்கப்படுவதும் , மின் தொகுதிகளின் கட்டமைப்பை நிர்ணயிக்கும் ஒரு காரணி ஆகும். இறுதியாக, படிம எரிப்பு மின் நிலையங்கள் மிகவும் சுற்றுசூழல் மாசுபடுத்தும் காரணத்தால், மின்சார விநியோக அமைப்பு பொருளாதார ரீதியாக அனுமதிக்கும் எல்லையில் மக்கள் இருப்பிடங்களில் இருந்து தொலைவாக இருந்தது. அதனால்  1960 களின் இறுதியில், மின்சார கிரிட் புறநகர் பிராந்திய பகுதிகளைத் தவிர, வளர்ந்த நாடுகளின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் அடைந்தது. புறநகர் பிராந்திய பகுதியினர் மட்டும் 'மின் தொகுதி சாராதவராயினர்'.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ணறி_மின்வலை&oldid=3370407" இலிருந்து மீள்விக்கப்பட்டது