நீலகிரி துர்கம்
நீலகிரி துர்கம், நீலகிரி, நீல துர்கம் ( Nilgiri, Neel Droog) என்பது இந்தியா, தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் கெலமங்கலத்திற்கு அருகே உள்ள ஒரு மலைக் கோட்டை ஆகும். இந்த மலையும், இதன் இருகே உள்ள ஊரும் நீல்கிரி என்றே அழைக்கபடுகின்றன.
அமைவிடம்[தொகு]
இந்த மலையும் ஊரும் அஞ்செட்டி துர்கத்தில் இருந்து மூன்று மைல் தொலைவிலும், மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து ஒரு 36 கிலோமீட்டர் தொலைவிலும், கெலமங்கலத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 299 கிலோமீடர் தொலைவிலும் அமைந்துள்ளது.[1]
வரலாறு[தொகு]
18ஆம் நூற்றாண்டில் இக்கோட்டை ஐதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் கீழ் இருந்தது.[சான்று தேவை] இக்கோட்டையை பிரித்தானியர்கள் 1792இல் கைப்பற்றினர்.[2] இந்த மலையில் கோட்டை மதிலின் மிச்ச சொங்களே தற்போது எஞ்சியுள்ளன. மலையின் மீது ஒரு அனுமன் கோயில் உள்ளது. அண்மையில் மலையின் பின்புறத்திலிருந்து அனுமார் கோயிலுக்கு செல்ல மலைப் பாதை அமைக்கபட்டுள்ளது.
படத்தொகுப்பு[தொகு]
-
கோட்டை மதிலின் எச்சங்கள்
-
நீல்கிரி ஊரில் இருந்து மலையின் தோற்றம்
-
மலையின் அனுமார் கோயிலை ஒட்டிய மதிலின் சிதைவுகள்
-
கெலமங்கலம், இராயக்கோட்டை சாலையில் வரகாணப்பள்ளி ஊரில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து நீலகிரி துர்கத்தின் தோற்றம்
-
நீலகிரி துர்கம் மலை உச்சியில் உள்ள அனுமார் கோயில்