நீறணிதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீறணிதல் அல்லது விபூதிதாரணம் என்பது சைவர்கள் திருநீறு அணிந்துகொள்ளும் முறையாகும். இவ்வாறு நீறணிதலில் திரிபுண்டரம், உத்தூளனம் என்ற இருவகைகள் உள்ளன. அத்துடன் திருநீறு தரித்தலுக்கான வழிமுறைகள் தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின் சைவ வினாவிடை விபூதி இயலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரிபுண்டரம்[தொகு]

திரிபுண்டரம் என்பது சைவர்களின் விபூதிதாரண முறைகளுள் ஒன்றாகும். இம்முறையில் திருநீறு, நீர் குழைத்துப் பூசப்படுவதோடு முவ்வரிக் கோடாகவும் இட்டுக்கொள்ளப்படுகிறது. [1]

சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள், புயங்கள், முழங்கைகள், மணிக்கட்டுகள், விலாப் புறம், முதுகு, கழுத்து என பதினாறு இடங்களில் திரிபுண்டரம் தரிக்கலாம். சிலர் விலாப்புறங்களை நீக்கிக் காதுகளை கொள்வர்.

வரிசை எண் இட எண்ணிக்கை இடங்கள்
1 32 தலை, நெற்றி, காதுகள், கண்கள், மூக்கு, வாய், கழுத்து, தோள்கள், முழங்கைகள், மணிகட்டை, மார்பின் ஒவ்வொரு பக்கத்திலும், தொப்புள், பிட்டத்தின் இருபுறம், விதைப்பையில், தொடைகள், முழங்கால்கள், கணுக்கால், காலில், இடுப்பு, விலா.
2 16 தலை, நெற்றி, காதுகள், கழுத்து, தோள்கள், முழங்கைகள், மணிகட்டை, மார்பு பக்கங்கள், விலா.
3 8 தலை, நெற்றி, காதுகள், தோள்கள், மார்பு, வயிறு.
4 5 நெற்றியில், தோள்கள், மார்பு, வயிறு.

சொல்லிலக்கணம்[தொகு]

திரிபுண்டரம் எனும் வடமொழி சொல்லிற்கு திருநீறால் சைவர்கள் நெற்றியில் இடும் மூவரி கோடு என்று பொருளாகும்.

திரிபுண்டரத்தினை தன் நெற்றியில் தரித்துள்ள சைவ சாது.
நெற்றியில் நீறு தரித்திருக்கும் பெண்

உத்தூளனம்[தொகு]

உத்தூளனம் என்பது சைவர்களின் விபூதிதாரண முறைகளுள் ஒன்றாகும். இம்முறையில் திருநீறு கையில் எடுக்கப்பெற்று பரவலாகப் பூசப்படுகிறது. நீர் குழைத்துப் பூசப்படுவதில்லை. [2]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின் சைவ வினாவிடை 3. விபூதி இயல் 14. விபூதி தாரணம் எத்தனை வகைப்படும்?
  2. http://www.sivankovil.ch/?pn=siva_vina_vidai
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீறணிதல்&oldid=3412085" இலிருந்து மீள்விக்கப்பட்டது