நீரிணை குடியேற்றங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீரிணைக் குடியேற்றங்கள்
Straits Settlements
கொடி of Straits Settlements
Flag
(1925–1946)
சின்னம் of Straits Settlements
சின்னம்
நாட்டுப்பண்: "God Save the King"
(1826–1837; 1901–1942; 1945–1946)
"God Save the Queen" (1837–1901)
Malaya in 1922:
  Unfederated Malay States
  Federated Malay States
  Straits Settlements
நிலைகாலனி
தலைநகரம்ஜார்ஜ் டவுன்
(1826–1832)
சிங்கப்பூர்
(1832–1946)
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
பேசப்படும் மொழிகள்
அரசாங்கம்முடியாட்சி காலனி
வரலாற்று சகாப்தம்British Empire
நாணயம்
  • சிங்கப்பூர் டாலர்
    (1898–1939)
  • மலாயன் டாலர்
    (1939–1946)

நீரிணைக் குடியேற்றங்கள் அல்லது தொடுவாய்க் குடியேற்றப் பகுதிகள்; ஆங்கிலம்: Straits Settlements; மலாய்: Negeri-Negeri Selat) என்பது 1826-ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியாவில், மலாக்கா நீரிணையை ஒட்டி உருவாக்கப்பட்ட பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகள் ஆகும்.

அந்த நீரிணைக் குடியிருப்புகள் பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர் மாநிலங்களை உள்ளடக்கியவை. இந்த மாநிலங்கள் அனைத்தும் முன்பு பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்தன.

வரலாறு[தொகு]

1824-ஆம் ஆண்டு ஆங்கிலோ-டச்சு (Anglo-Dutch Treaty of 1824) ஒப்பந்தத்திற்குப் பிறகு, பினாங்கு மாநிலம், லெப்டினன்ட் கவர்னர் (Lieutenant Governor) என்பவரால் நிர்வகிக்கப் பட்டது. மலாக்கா; மற்றும் சிங்கப்பூர் மாநிலங்கள் ஆளுநர் (Resident) என்பவரால் நிர்வகிக்கப் பட்டன.

1826-ஆம் ஆண்டில், பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களும் ஒன்றிணைக்கப்பட்டன. சில ஆண்டுகள் கழித்து பேராக் மாநிலத்தில் இருந்த டிண்டிங் (Dinding) எனும் பகுதியும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.[1]

கொக்கோசு (கீலிங்) தீவுகள்[தொகு]

இந்த நான்கு பகுதிகளும் நீரிணைக் குடியிருப்புகள் (Straits Settlements) எனும் பெயரில் அழைக்கப்பட்டன. இந்த ஒருங்கிணைப்பு, நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதையும்; நிர்வாகத் தரதை மேம்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டது.

1886-ஆம் ஆண்டில் கிறிஸ்மஸ் தீவு (Christmas Island) மற்றும் கொக்கோசு தீவுகள் (Cocos Islands); நீரிணைக் குடியிருப்புகளில் சேர்க்கப்பட்டன.[2][3]

லபுவான் தீவு[தொகு]

1 சனவரி 1907 முதல் போர்னியோ கடற்கரைக்கு அப்பால் உள்ள லபுவான் தீவும் நீரிணைக் குடியேற்றக் காலனியில் இணைக்கப்பட்டது. இருப்பினும் 1912-ஆம் ஆண்டில் லபுவான் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. நீரிணைக் குடியேற்றப் பகுதியில் இருந்த பெரும்பாலான பிரதேசங்கள், தற்சமயம் மலேசியாவின் ஒரு பகுதியாக உள்ளன. 1965-இல் சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்து சென்றது.

1955-ஆம் ஆண்டில், கொக்கோசு தீவுகள் ஆஸ்திரேலியா நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் மாற்றப்பட்டன. அதன் பின்னர் எஞ்சி இருந்த கிறிஸ்மஸ் தீவு 1958-இல், அதே ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டிற்குள் மாற்றப்பட்டது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Straits Settlements was formed by the amalgamation of Penang, Malacca and Singapore in 1826 followed by Labuan, which joined in 1906. Christmas Island and the Cocos-Keeling Islands became part of the Straits Settlements after they were incorporated into the settlement of Singapore in 1900 and 1903 respectively". eresources.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 30 May 2022.
  2. The Straits Settlements, 1826–1867: Indian Presidency to Crown Colony. Athlone Press, London. 1972. பக். 3. https://archive.org/details/straitssettlemen0000turn. பார்த்த நாள்: 30 May 2022. 
  3. "Christmas Island, Cocos Islands, and Labuan island would later fall under the Straits Settlements administration". WW2DB. பார்க்கப்பட்ட நாள் 30 May 2022.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரிணை_குடியேற்றங்கள்&oldid=3924369" இலிருந்து மீள்விக்கப்பட்டது