நீரஜா மாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Woman is handed award by Indian President
நீரஜா மாதவ் நாரி சக்தி விருது பெற்றபோது

நீரஜா மாதவ் (Neerja Madhav) என்பவர் இந்தியாவின் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் இந்தி மொழியில் எழுதுபவர் ஆவார். மாதவ் 2021- ஆம் ஆண்டில் நாரி சக்தி விருது பெற்றார்.

தொழில்[தொகு]

உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் மாதவ் இந்தி மொழி எழுத்தாளர் ஆவார்.[1] யம்தீப் (2002), கெஷே ஜம்பா (2006) மற்றும் டைரி ஆஃப் 5-அவர்னா பெண் காவலர் (2010) ஆகியன இவரது புத்தகங்களில் முக்கியமானவையாகும்.[2]

யம்தீப் நாவல் மூன்றாம் பாலினத்தவர் பற்றியது. இதன் மூலம் மாதவ் மூன்றாம் பாலின உரிமைகளுக்காகப் பிரச்சாரம் செய்ய வழிவகுத்தது.[3] இதன் மூலம் இந்திய உச்ச நீதிமன்றம் மூன்றாம் பாலினத்தவரின் மனித உரிமைகளை 2014-ல் அங்கீகரித்தது.[4] கெஷே ஜம்பா இந்தியாவில் உள்ள திபெத்திய அகதிகளைப் பற்றியது. வாரணாசியில் உள்ள மத்திய உயர் திபெத்திய ஆய்வுக் கழகத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் மேற்கோள் நூலாக வைக்கப்பட்டுள்ளது.[3]

2022ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாளன்று இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந் 2021ஆம் ஆண்டுக்கான நாரி சக்தி விருதினை மாதவிற்கு வழங்கினார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரஜா_மாதவ்&oldid=3401571" இலிருந்து மீள்விக்கப்பட்டது