நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1894-1949) தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் ஆவார்[1].

இசை வாழ்க்கை[தொகு]

மீனாட்சி சுந்தரம் தவில் வாசிப்பினை நாகப்பட்டினம் வேணுகோபால் பிள்ளை என்பவரிடம் கற்றுக் கொண்டார்.[2] தனித் தவில் வாசிக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர் மீனாட்சி சுந்தரம்.[3]

இவரின் மாணவர்களில் ஒருவர் நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை. இராகவப்பிள்ளையின் திறமையால் கவரப்பட்ட மீனாட்சி சுந்தரம், தன் மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]