நிருபத்தேந்திரதேவி
நிருபத்தேந்திரதேவி Nrpendradevi of Sambhupura ន្ឫបតីន្ទ្រទេវីទី២ | |
---|---|
சம்புபுரர மகாராணியார் (8-ஆம் நூற்றாண்டு) | |
முன்னையவர் | இராணி இந்திராணி (Queen Indrani) |
பின்னையவர் | செயந்திரபா (Queen Jayendrabha) |
பிறப்பு | ஈசானபுரம் |
இறப்பு | C. 750 ஈசானபுரம் |
துணைவர் | இராசேந்திர வர்மன் (Rajendravarman of Chenla) |
மரபு | ஈசானபுரம் கவுந்தினியம் சென்லா |
அரசமரபு | சம்புபுரம் (Som Vong) |
தந்தை | புஷ்பகரசன் (Pushkaraksha) @ (Indraloka) |
தாய் | இராணி இந்திராணி (Queen Indrani) |
மதம் | இந்து சமயம் |
நிருபத்தேந்திரதேவி அல்லது நிர்பேந்திரதேவி (ஆங்கிலம்: Nrpendradevi அல்லது Nrpendradevi of Shambhupura; கெமர்: ន្ឫបតីន្ទ្រទេវីទី២; IAST: Nṛpatendradevī) என்பவர் கெமர் பேரரசை (Khmer Empire) சார்ந்த சென்லா இராச்சியத்தின் (Chenla Kingdom) ஒரு பகுதியான சம்புபுரத்தின் மகாராணி ஆவார். சென்லா இராச்சியம் தற்போது கம்போடியாவில் ஒரு பகுதியாக உள்ளது.[1]
ஈசானபுரம் எனும் நிலப்பகுதி சம்புபுரம் (Sambhupura) என்றும் அழைக்கப்பட்டது. சம்புபுரம் எனும் பெயர்தான் ஈசானபுரம் என மாற்றம் அடைந்தது. சம்புபுரம் எனும் சொல்லுக்குப் பதிலாக ஈசானபுரம் எனும் பெயரைப் பயன்படுத்துகிறார்கள்.
நிருபத்தேந்திரதேவியின் தந்தையார் பெயர் புஷ்கரசன் (King Pushkaraksha); இந்திரலோகன் (Indraloka) எனும் மற்றொரு பெயரும் அவருக்கு உள்ளது. தாயாரின் பெயர் இராணி இந்திராணி (Queen Indrani of Sambhupura).
பொது
[தொகு]இராணி இந்திராணிக்கு சம்புவர்மன் (Sambhuvarman) எனும் (உருத்திரவர்மன்) என்ற ஒரு மகனும், நிருபத்தேந்திரதேவி (Nipatendradevi) என்ற ஒரு மகளும் இருந்தனர். இந்திராணியின் மகன் உருத்திரவர்மன்; சென்லாவின் இளவரசியும், தன் தந்தையின் சகோதரியான முதலாம் நரேந்திரதேவியின் (Narendradevi I) மகளுமான இரண்டாம் நரேந்திரதேவியை (Narendradevi (II) மணந்தான்.[2]
நிருபத்தேந்திரதேவியின் தந்தை அநேகமாக இராணி செயதேவியின் (Queen Jayadevi) மகனாக இருக்கலாம்; மற்றும் திருமணத்திற்குப் பிறகு நிருபத்தேந்திரதேவியின் தாயார் இராணி இந்திராணியுடன் இணை ஆட்சியாளராக இருந்து இருக்கலாம் என்று அறியப்படுகிறது.
சென்லா இளவரசி நரேந்திரதேவி
[தொகு]இராணி நிருபத்தேந்திரதேவி தன் சகோதரன் இளவரசர் சம்புவர்மனுக்கு (உருத்திரவர்மன்) பதிலாகத் தன் தாயாரிடம் இருந்து அரியணையைப் பெற்றார்; உருத்திரவர்மன் தன் உறவினரான சென்லாவின் இளவரசி நரேந்திரதேவியை (Princess Narendradevi of Chenla) மணந்தார். உருத்திரவர்மன்; பூனான் இராச்சியத்தின் (Kingdom of Funan) கடைசி அரசரும் ஆவார்.
இராணி நிர்பேந்திரதேவி தன் உறவினரான சென்லாவின் இளவரசர் இராசேந்திர வர்மன் (Rajendravarman of Chenla) என்பவரை மணந்தார்; இவருக்குப் பின்னர், இவரின் மகள் இளவரசி செயந்திரபா (Queen Jayendrabha) ஈசானபுரத்தின் அரியணைக்கு வாரிசானார்.
சான்றுகள்
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Coedes, G. (1962). "The Making of South-east Asia." London: Cox & Wyman Ltd.
- Higham, Charles. The Civilization of Angkor (англ.). — University of California Press, 2004. — P. 192.
- Jacobsen, Trudy. Lost Goddesses: The Denial of Female Power in Cambodian History (англ.). — NIAS Press, 2008. — P. 358. — (Gendering Asia). — ISBN 978-87-7694-001-0.