நா. அனந்தபத்மநாபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நா.அனந்தபத்மநாபன் (பிறப்பு: மார்ச் 29, 1967) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். மதுரையில் பிறந்த இவர் தினமணி நாளிதழில் 10 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, பின்னர் ஜெயா தொலைக்காட்சியில் செய்திப் பிரிவில் மூத்த துணையாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் எழுதிய "மூன்றாவது கண்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் இதழியல், தகவல் தொடர்பு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._அனந்தபத்மநாபன்&oldid=2765758" இலிருந்து மீள்விக்கப்பட்டது