நாவற்குழி சித்திர வேலாயுதர் கோவில்

ஆள்கூறுகள்: 9°39′13″N 80°05′27″E / 9.65358°N 80.0909251°E / 9.65358; 80.0909251
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாவற்குழி சித்திர வேலாயுதர் கோவில்
நாவற்குழி சித்திர வேலாயுதர் கோவில் is located in இலங்கை
நாவற்குழி சித்திர வேலாயுதர் கோவில்
நாவற்குழி சித்திர வேலாயுதர் கோவில்
இலங்கையில் கோவிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:9°39′13″N 80°05′27″E / 9.65358°N 80.0909251°E / 9.65358; 80.0909251
பெயர்
பெயர்:நாவற்குழி சித்திர வேலாயுதர் கோவில்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வட மாகாணம்
மாவட்டம்:யாழ்ப்பாணம்
கோயில் தகவல்கள்
மூலவர்:முருகன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:Tamil architecture
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1818
அமைத்தவர்:சுப்பிரமணியமுதலி

சித்திர வேலாயுதர் கோவில் மணல் குன்றுகளிடையே பள்ளத்தில் நிற்கும் பனைகள் தாமீன்ற நுங்கு குலைகளின் பாரத்தை தாங்கி கொண்டே சாமரை வீசி எம்மை வரவேற்பது போல் காட்சி அளிக்கும். யாட்டாவளை என அழைக்கப்படும் வயல்வெளியில் சித்திர வேலாயுதர் கோயில் காணப்படுகிறது . ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவிலாக இது காணப்படுகிறது.[சான்று தேவை]

பூசை முறைகள்[தொகு]

1818 இல் சுப்பிரமணியமுதலி என்பவர் கற்கொண்டு கட்டடம் அமைத்து அந்தணர் நித்திய நைமித்திய பூசை செய்ய ஒழுங்குகள் செய்தார்.

கந்தசஷ்டி பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆறாவது நாள் சூரசங்காரமும் ஏழாவது நாள் திருக்கல்யாணம் நடந்தேறி அலங்கரிக்கப்பட்ட இணைந்த வள்ளங்களில் சித்திர வேலாயுதர் தெய்வானை வள்ளி சமேதராய் எழுந்தருளி ஆலய திருக்குளத்தில் உலாவரும்.

ஆறுமுகநாவலர் காலத்தில் ஆரம்பமான கந்தபுராணகலாச்சாரம் நாவற்குழியில் வாழ்ந்த சைவபெரியோரால் பேணி வளர்க்கப்பட்டது.

கந்தசஷ்டி நாட்களில் சித்திர வேலாயுதர் ஆலயத்தில் கந்த புராண படனம் நடைபெறும். காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னத்தம்பு, விசுவலிங்கம் சுப்பிரமணியம், சொக்கநாதர்கார்த்திகேயன், தாமோதரம் வேலுப்பிள்ளை ஆகியோர் இசையோடு பாடிபொருள் கூறினர்.