நாதன் மகால்
தோற்றம்
![]() | |
இடம் | நாதன் மகால் சாலை, இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா |
---|---|
வகை | கல்லறை |
கட்டுமானப் பொருள் | கல் |
துவங்கிய நாள் | 1790 |
முடிவுற்ற நாள் | 1800 |
அர்ப்பணிப்பு | சேக் இப்ராகிம் சிசுட்டி[1] |
நாதன் மகால் (Nadan Mahal) என்பது முகலாயப் பேரரசர் அக்பர் ஆட்சியின் போது [2] இருந்த ஒரு துறவியும் லக்னோவின் முதல் ஆளுநருமான சேக் இப்ராகிம் சிசுட்டியின் கல்லறையாகும். [3] வடஇந்தியாவில் உத்தரப்பிரதே மாநிலத்தின் தலைநகரமாக விளங்கும் லக்னோ நகரில் இக்கல்லறை அமைந்துள்ளது. லக்னோ 16 ஆம் நூற்றாண்டிலிருந்து முகலாயப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவாத்தின் முசுலீம் நவாப்கள் நகரத்தை தங்கள் தலைநகராக மாற்றியுள்ளனர்.
விடுதலையின் கல்லறை என்ற பெயராலும் இக்கல்லறை அடையாளப்படுத்தப்படுகிறது. [4] நாதன் மகாலும் அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட ஆலம்கீர் பள்ளிவாசலும் லக்னோ நகரிலுள்ள மிகப்பழமையான நினைவுச் சின்னங்களாக கருதப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The tomb of Shaikh Ibrahim Chishti (d. 1543) at the Nadan Mahal, Lucknow". British Library. Retrieved 16 October 2013.
- ↑ "Inscribed on the back in ink: 'Niran Mahl near Lucknow and Mosque built in the time of the Emperor Ackbar.'". British Library. Retrieved 16 October 2013.
- ↑ Karen Schreitmüller; Mohan Dhamotharan; Beate Szerelmy (2009). India (1st ed.). Ostfildern-Kemnat: Baedeker. p. 276. ISBN 9783829766227.
- ↑ "Sheikh's followers prayed for nidan (deliverance) at his tomb". Lucknow. Retrieved 16 October 2013.