நாடு கடந்த அரசாங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாடு கடந்த அரசாங்கம் (government in exile) என்பது ஒரு அரசியல் குழு ஆகும். இது ஒரு இறையாண்மை கொண்ட நாடாகவும், முறையான அரசாங்கம் கொண்டிருப்பினும் சட்ட அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. இத்தகைய நாடு தன் சொந்த நிலப்பரப்பில் அரசை நிர்வகிக்க இயலாது போனாலும், வேறு ஒரு நாட்டின் அனுமதியுடன் அந்நாட்டில் தனது அரசாங்கத்தை நிர்வகிக்கிறது.[1] இதற்கு எடுத்துகாட்டு இந்தியாவில் நாடு கடந்த திபெத்திய அரசாங்கம் ஆகும்.

போர்க்கால ஆக்கிரமிப்பின் போது அல்லது உள்நாட்டுப் போர், புரட்சி அல்லது சதித்திட்டம் ஆகியவற்றின் பின்னர் நாடு கடந்த அரசுகள் ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஜெர்மனி தனது விரிவாக்கத்திற்காக நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது, சில ஐரோப்பிய அரசாங்கங்கள் நாஜி ஜெர்மனி கைகளில் அழிவை எதிர்கொள்வதற்குப் பதிலாக, ஐக்கிய இராச்சியத்தில் தஞ்சம் புகுந்தன.

இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவுக்கு எதிராக சுபாஷ் சந்திர போசால் நாடு கடந்த இந்திய அரசு மலேசியாவில் நிறுவப்பட்டது. இதன் மூலம் பிரித்தானியர்களை ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதப்படுவதற்கும், நாட்டின் கட்டுப்பாட்டைப் பெற படையெடுக்கும் ஜப்பானியர்களின் ஆதரவைப் பெற காரணமாயிற்று. நாடுகடத்தப்பட்ட ஒரு அரசாங்கம், ஒரு ஆளும் அரசாங்கத்திற்கு எதிரான சட்டவிரோத அரசாங்கம் எனப்பரவலாக கருதப்படலாம். உதாரணமாக 2011-இல் சிரிய உள்நாட்டுப் போர் வெடித்ததன் காரணமாக, சிரிய புரட்சிகர மற்றும் எதிர்க்கட்சிகளுக்கான தேசிய கூட்டணிக் குழுக்கள் உருவாக்கிய பாத் கட்சியின் அரசாங்கம், சிரியா நாட்டின் ஒரு பகுதியில் நிறுவப்பட்டது.

நாடுகடத்தப்பட்ட ஒரு அரசாங்கத்தின் செயல்திறன், வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்தோ அல்லது அதன் சொந்த நாட்டின் மக்களிடமிருந்தோ பெறும் ஆதரவைப் பொறுத்தது. நாடுகடத்தப்பட்ட சில நாடு கடந்த அரசாங்கங்கள் ஒரு வல்லமைமிக்க சக்தியாக உருவாகும் போது, அது நாட்டின் தற்போதைய ஆட்சிக்கு கடுமையான சவாலாக இருக்கும்.

மன்னராட்சிக் காலத்தில் நாடுகடத்தப்பட்ட மன்னர்கள் அல்லது வம்சங்கள், சில சமயங்களில் நாடு கடந்த நாட்டில் நீதிமன்றங்களை அமைத்துக் கொண்டனர.[2]

பிரெஞ்சுப் புரட்சியின் போது மக்களால் தூக்கியெறியப்பட்ட பதினாறாம் லூயி மன்னரின் குடும்பத்தினருக்கு ஆதரவாகவும், நெப்போலியன் பொனபார்ட்டிற்கு எதிராகவும், 1803 முதல் 1815 முடிய ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரஷ்யா, ஆஸ்திரியா நாடுகள் போரிட்டது

அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சிகள் நாடு கடத்தப்படப் போது, அதன் பிரதம அமைச்சரும் சேர்ந்து நாடு கடத்தப்படுவது வழக்கம். இது போன்ற நிகழ்வு இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்வு, 10 மே 1940-இல் ஜெர்மனி, டச்சு நாட்டை ஆக்கிரமித்த போது, அதன் அரசி வில்ஹெல்மினாவும் மற்றும் பிரதம அமைச்சரும் இலண்டனில் நாடு கடந்த டச்சு அரசாங்கத்தை நிறுவினர்.

நாடு கடந்த அரசுகளின் செயல்பாடுகள்[தொகு]

சர்வதேச சட்டம் நாடுகடத்தப்பட்ட அரசாங்கங்கள் தங்கள் அன்றாட விவகாரங்களை நடத்துவதில் பல வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என்பதை அங்கீகரிக்கிறது. இந்த செயல்களில் பின்வருவன அடங்கும்:

  • இருதரப்பு அல்லது சர்வதேச ஒப்பந்தம் க்கு ஒரு கட்சியாக மாறுதல்
  • அதன் சொந்த அரசியலமைப்பை திருத்துதல்
  • இராணுவப் படைகளை பராமரித்தல்
  • நாட்டின் பிற மாநிலங்களை தக்கவைத்தல் அல்லது இராஜதந்திர அங்கீகாரம் மூலம் புதிதாகப் பெறுதல்
  • தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குதல்
  • புதிய அரசியல் கட்சிகள் உருவாக்க அனுமதிக்கிறது.
  • நாடு கடந்த அரசின் நாடாளுமன்றம் அல்லது நிர்வாக உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்தல்.

நாடு கடந்த அரசாங்கம் உள்ள நாட்டில் வாழும் நாடு கடந்த அரசின் மக்களை கட்டுப்படுத்தும் உரிமை, நாடு கடந்த அரசிற்கு உள்ளது. எடுத்துகாட்டாக மலேசியா தீபகற்பத்தில் வாழ்ந்த இந்தியர்களை, ஜப்பானிய இராணுவத்தின் ஆதரவுடன் நாடு கடந்த இந்திய அரசு கட்டுப்படுத்தியது.

நாடு கடந்த அரசின் நடவடிககைகள்[தொகு]

நாடு கடந்த அரசாங்கம், தனது அன்றாட நிர்வாகத்தை மேற்கொள்ள சில நடவடிக்கைகள் எடுக்கலாம் என சர்வதேச சட்டங்கள் ஆதரிக்கிறது.

  • இருதரப்பு அல்லது பன்னாட்டு ஒப்பந்தம் மூலம் ஒரு தரப்பு கட்சியாக செயல்படுவது.
  • நாடு கடந்த அரசின் அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்தல்
  • தங்களுக்கு என தனி இராணுவத்தை பராமரித்தல்
  • பிற நாடுகளிடமிருந்து பெற்ற அங்கீகாரத்தை தக்க வைத்தல் மற்றும் பிற நாடுகளிடமிருந்து அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுத்தல்.
  • தன் குடிமக்களுக்கு அடையாள ஆவணம் வழங்குதல்
  • புதிய அரசியல் கட்சிகளை செயல்பட அனுமதித்தல்
  • நாடு கடந்த அரசின் மைய நிர்வாகம் அல்லது நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்துதல்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Princeton University WordNet". Wordnetweb.princeton.edu. பார்க்கப்பட்ட நாள் 2012-09-20.
  2. Corp, Edward (2009). A Court in Exile: The Stuarts in France, 1689-1718. Cambridge University Press. பக். 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0521108373. 

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடு_கடந்த_அரசாங்கம்&oldid=3050747" இலிருந்து மீள்விக்கப்பட்டது