நாசீசு பிரதாப்கர்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாசீசு பிரதாப்கர்கி
பிறப்புமுகமது அகமது[1]
(1924-07-12)12 சூலை 1924
பிரதாப்கர், உத்தரப் பிரதேசம்
இறப்பு10 ஏப்ரல் 1984(1984-04-10) (அகவை 59)
லக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா[1]
தேசியம்இந்தியர்
பணிகவிஞர்

நாசீசு பிரதாப்கார்கி (பிறப்பு முகமது அகமது; 12 சூலை 1924 - 10 ஏப்ரல் 1984) [2] இந்தியாவைச் சேர்ந்த உருது கவிஞர் ஆவார். இவர் தனது எண்ணங்கள் மற்றும் உருது கவிதைகளை விரும்புபவர்களுக்கு இடையே தொடர்புகளை உருவாக்கும் திறனுக்காக அறியப்பட்டவர். 

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பிரதாப்கர்கி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரை சேர்ந்தவர்.

எழுத்துகள்[தொகு]

பிரதாப்கர்கி முக்கியமாக உருது கசல்களை எழுதியுள்ளார். இவர் சீமாப் அக்பரபாடியின் சீடர் ஆவார். நயா சாஸ் நயா அண்டாஸ் என்ற இவரது கசல் தொகுப்பு உத்தரப் பிரதேச உருது அகாதமியால் வெளியிடப்பட்டது.[3] 1983-ல், உருது இலக்கியத்திற்கான இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் காலிப் விருதைப் பெற்றார்.[4]

பிரதாப்கர்கி தனது வாழ்நாள் முழுவதும் நிதி சிக்கல்களை எதிர்கொண்டார். மேலும் இவர் திரைப்படத் துறையை அணுகியபோதும், இவர் தனது பாடல்களை விற்கவில்லை. இதனால் இவர் ஏழையாகவே வாழ்க்கையினை வாழ்ந்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Nazish Partap Gadhi - Profile & Biography". Rekhta. 1924-07-12. பார்க்கப்பட்ட நாள் 2020-08-22.
  2. "Urdu Authors: Date Lists. No.1448". Urdu Council.Nic.In. 2006-05-31. Archived from the original on 2012-03-01. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  3. "Poetic Literature". Up Urdu Akademi.Org. Archived from the original on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  4. "List of the Recepients of Ghalib Award – 1983". Ghalib Institute.com. Archived from the original on 2013-10-20. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  5. "Conversations". Mobi.IBN.In.Com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாசீசு_பிரதாப்கர்கி&oldid=3677718" இலிருந்து மீள்விக்கப்பட்டது