நாசீசு பிரதாப்கர்கி
நாசீசு பிரதாப்கர்கி | |
---|---|
பிறப்பு | முகமது அகமது[1] 12 சூலை 1924 பிரதாப்கர், உத்தரப் பிரதேசம் |
இறப்பு | 10 ஏப்ரல் 1984 லக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா[1] | (அகவை 59)
தேசியம் | இந்தியர் |
பணி | கவிஞர் |
நாசீசு பிரதாப்கார்கி (பிறப்பு முகமது அகமது; 12 சூலை 1924 - 10 ஏப்ரல் 1984) [2] இந்தியாவைச் சேர்ந்த உருது கவிஞர் ஆவார். இவர் தனது எண்ணங்கள் மற்றும் உருது கவிதைகளை விரும்புபவர்களுக்கு இடையே தொடர்புகளை உருவாக்கும் திறனுக்காக அறியப்பட்டவர்.
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
பிரதாப்கர்கி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரை சேர்ந்தவர்.
எழுத்துகள்[தொகு]
பிரதாப்கர்கி முக்கியமாக உருது கசல்களை எழுதியுள்ளார். இவர் சீமாப் அக்பரபாடியின் சீடர் ஆவார். நயா சாஸ் நயா அண்டாஸ் என்ற இவரது கசல் தொகுப்பு உத்தரப் பிரதேச உருது அகாதமியால் வெளியிடப்பட்டது.[3] 1983-ல், உருது இலக்கியத்திற்கான இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் காலிப் விருதைப் பெற்றார்.[4]
பிரதாப்கர்கி தனது வாழ்நாள் முழுவதும் நிதி சிக்கல்களை எதிர்கொண்டார். மேலும் இவர் திரைப்படத் துறையை அணுகியபோதும், இவர் தனது பாடல்களை விற்கவில்லை. இதனால் இவர் ஏழையாகவே வாழ்க்கையினை வாழ்ந்தார்.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Nazish Partap Gadhi - Profile & Biography". Rekhta. 1924-07-12. பார்க்கப்பட்ட நாள் 2020-08-22.
- ↑ "Urdu Authors: Date Lists. No.1448". Urdu Council.Nic.In. 2006-05-31. Archived from the original on 2012-03-01. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
- ↑ "Poetic Literature". Up Urdu Akademi.Org. Archived from the original on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
- ↑ "List of the Recepients of Ghalib Award – 1983". Ghalib Institute.com. Archived from the original on 2013-10-20. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
- ↑ "Conversations". Mobi.IBN.In.Com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.[தொடர்பிழந்த இணைப்பு]