நாகர்கோவில் கணேச ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகர்கோவில் S கணேச ஐயர்
பிறப்புநாகர்கோவில் ஸ்தாணு கணேச ஐயர்
1905 (1905)
நாகர்கோவில், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு1978 (அகவை 72–73)
பணிமிருதங்கம், வாய்ப்பாட்டு
பெற்றோர்ஶ்ரீமான் ஸ்தாணு பாகவதர், நாராயணி

நாகர்கோவில் எஸ் கணேச ஐயர் (NSG) (1905-1978) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்தார். இவர் ஒரு முக்கிய கருநாடக இசைக்கலைஞர் மற்றும் விரிவுரையாளர் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியரான ஸ்ரீமான் ஸ்தாணு பாகவதருக்கும் திருவிதாங்கூர் இசைக் குடும்பத்தில் நாராயணிக்கும் மகனாகப் பிறந்தார்.[1][2] 1930 களின் முற்பகுதியில் மிருதங்கம் வாசிப்பதில் மேதையாக விளங்கினார். இவர் இசைக் கலைஞர்களால் NSG என அழைக்கப்பட்டார்.[3][4][5][6] சங்கீத பரம்பரையில் பிறந்த இவர் அவரது தந்தை ஸ்தாணு பாகவதர் மற்றும் மூத்த சகோதரர் பத்மநாப ஐயர் ஆகியோரிடம் இசை கற்றார். குழந்தையாக இருக்கும்போது கதாகாலட்சேபத்தில் தாளத்துடன் ஒத்திசைந்து இவர் விளையாடியதைக் கண்ட திருவிதாங்கூர் மஹாராஜா இவரை மிருதங்கம் பயில ஊக்குவித்தார்.

இசைப்பயணம்[தொகு]

கோவில் திருவிழாக்கள், நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளின் போது பல கருநாடக இசை நிகழ்ச்சிகளில் இசைப்பதன் மூலம் NSG தனது இசை பயணத்தை மிக இளவயதில் தொடங்கினார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவையாக,

  • சௌடையா, முடிகொண்டான் வெங்கடராம ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர், டைகர் வரதாச்சாரி போன்ற முக்கிய பிரமுகர்களுக்கு கச்சேரியில் மிருதங்கம் வாசித்தார்.
  • சென்னை மியூசிக் அகடெமியின் ஆவணங்களின் படி இவர் அன்றைய முன்னணி பாடகர்களான ஸ்ரீ செம்மங்குடி சீனிவாச ஐயர், ஜிஎன்பி, முசிறி சுப்ரமணிய ஐயர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், நாகர்கோயில் ஹரிஹர ஐயர், முடிகொண்டான் வெங்கட்ராமையர், துவாரம் வெங்கடாந்தபுரம், மஹாராஜா ஆர். விஸ்வநாத ஐயர். முன்னணி இசைக்கலைஞர் சௌடையா, கும்பகோணம் சீதாராம ஐயர், திருவாலங்காடு சுந்தரேசியர், டி.கே. ஜெயராம ஐயர், ஸ்ரீ லால்குடி ஜெயராமன், ஆர்.கே.வெங்கடராம சாஸ்திரி, எம்.என்.சந்திரசேகர், வீணா பாலச்சந்தர், வி. தியாகராஜன் மற்றும் திருவிழிமழலை சுவாமிநாத பிள்ளை ஆகியோருக்கு கச்சேரிகளில் மிருதங்கம் வாசித்துள்ளார்.
  • தூர்தர்சன் மற்றும் அகில இந்திய வானொலி ஆகியவற்றின் மூத்த இசைக்கலைஞர் ஆவார்.
  • திருவிதாங்கார் அரச திருவிழா கொலுமண்டபத்தில் வாசித்துள்ளார்.
  • திருவிசநல்லூர் அய்யாவாள் உற்சவம், லாகுடி திருவாதிரை விழா, நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் திருவிழா மற்றும் டிசம்பர் மார்கழி திருவிழா ஆகியவை இவரது வழக்கமான கச்சேரிகள் ஆகும்.
  • மயிலை சாய்கான சபா, ஸ்ரீ தியாகபிரம்ம பக்தஜன சபா, சரஸ்வதி கான சபா, பெரம்பூர் சங்கீத சபா (PSS), RR சபா, தமிழ் இசை மன்றம் போன்ற பல சபைகளில் அவர் பாடியுள்ளார்.

விமரிசனம்[தொகு]

தினமணியில் கலையரங்கம் பகுதியில், ஸ்ரீ தியாகபிரம்ம பக்த ஜன சபையில் நாகர்கோவில் கணேச அய்யர்களின் வாசிப்புத் தெளிவு மற்றும் வேகத்தில் மிகச் சிறந்த வாசிப்பு என்று எழுத்தாளர் ஸ்ரீ கே.எம்.ரங்கசாமி கூறியிருக்கிறார். மிருதங்கத்தின் இரு பக்கங்களிலிருந்தும் மெல்லிசைப் பாய்ந்தது, முழு கச்சேரியிலும் பார்வையாளர்களால் ஒரு கடுமையான அடியைக் கூட கேட்க முடியவில்லை. நாகர்கோயில் ஹரிஹர அய்யருடன் சேர்ந்து அவரது மிருதங்கம் பாடுவது போல் இருந்தது என்றும் கூறியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Music academy".
  2. "Music Festival" (PDF).
  3. MusicResearchLibrary.Net Periodicals. N.Ramanathan. https://archive.org/stream/MusicRes-Periodicals/Shanmukha-1981-85/shanmukha-010-3-1984-jul_djvu.txt. 
  4. "AmbaNaadu-Thodi-Musiri-Chowdaiah-Nakarkoil". www.youtube.com.
  5. "Vaatapi=Hamsadwani". YouTube.
  6. "Ramanatham Bhajeham". YouTube.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகர்கோவில்_கணேச_ஐயர்&oldid=3621247" இலிருந்து மீள்விக்கப்பட்டது