நாகரதானே
நாகரதானே (Nagaradhane) என்பது பாம்பு வழிபாட்டின் ஒரு வடிவமாகும். இது பூட்டா கோலா என்ற நடன வடிவத்துடன் சேர்ந்து, தெற்கு கன்னட மாவட்டம், உடுப்பி மற்றும் காசர்கோடு காசர்கோடு என அழைக்கப்படும் துளு நாடு ஆகிய பகுதிகளில் நிலவும் தனித்துவமான பாரம்பரியங்களில் ஒன்றாகும். இது துளு மக்களால் பின்பற்றப்படுகிறது. பாம்புகள் தெய்வங்களாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. பல சமூக, மத மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக மதிக்கப்படுகிறது, திருப்திப்படுத்தப்படுகிறது, மேலும் பாதுகாக்கப்படுகிறது.
தோற்றம்[தொகு]
பாம்புகள் இந்தியாவில் சக்தி, பிரமிப்பு மற்றும் மரியாதையுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. இந்து புராணங்களின்படி, விஷ்ணு, ஆதிசேசன் என்ற மாபெரும் பாம்பின் நிழலில் ஓய்வெடுக்கிறார். சிவபெருமான் கழுத்தில் வாசுகி என்ற பாம்பை அணிந்துள்ளார்.
இதன் தோற்றத்தை கண்டுபிடிப்பது கடினம். துளு மக்களிடையே சில குலங்கள் நாகவன்சி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால், பாம்பு வழிபாடு அவர்களால் பிரபலப்படுத்தப்பட்டிருக்கலாம். பாம்பு வழிபாட்டின் பெரும்பாலான சடங்குகள் பிராமணர்களால் செய்யப்படுகின்றன என்றாலும், நாக வழிபாடு இல்லாத ஒரு துளுவ குடும்பம் கூட இல்லை. அங்கு இவர்களின் மத்தியில் அலியாசந்தன பரம்பரையின் படி நாக தேவதையை வணங்குகிறார்கள்.
துளு நாடு அல்லது தெற்கு கர்நாடகாவின் சில பகுதியில் விவசாயமும் பிரதானமாக உள்ளது . இந்த வயல்களில் பாம்புகள் கொறித்துண்ணிகளிடமிருந்து பயிரைக் காப்பாற்ற உதவுகின்றன. பாம்புகளை வணங்குவதற்கு இது ஒரு நம்பத்தகுந்த காரணமாக இருக்கலாம்.
மேலும் காண்க[தொகு]
குறிப்புகள்[தொகு]
- http://www.udupipages.com/art-culture/nagamandala.php
- http://www.gurjari.net/ico/Mystica/html/snake_worship.htm