நவ்தீப் குமார் சோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீதிபதி
நவ்தீப் குமார் சோதி
Nauvdip Kumar Sodhi
பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைமை அதிகாரி
பதவியில்
21 திசம்பர் 2005 – 28 நவம்பர் 2011
முன்னையவர்குமார் இராசரத்னம்
பின்னவர்இயே.பி. தேவதார்
தலைமை நீதிபதி, கேரள உயர் நீதிமன்றம்
பதவியில்
19 நவம்பர் 2004 – 29 நவம்பர் 2005
முன்னையவர்நாகேந்திர குமார் செயின்
பின்னவர்சிரியக் இயோசப்
தலைமை நீதிபதி, கர்நாடக உயர் நீதிமன்றம்
பதவியில்
05 ஏப்ரல் 2004 – 17 நவம்பர் 2004
முன்னையவர்சவகர் லால் குப்தா
பின்னவர்போ. சுபாசன் ரெட்டி
நீதிபதி பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்
பதவியில்
மார்ச்சு 1991 – சனவரி 2004
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1943-11-29)29 நவம்பர் 1943
இறப்பு28 திசம்பர் 2021(2021-12-28) (அகவை 78)
சண்டிகர்
காரணம் of deathகோவிட்-19
குடியுரிமைஇந்தியர்
தேசியம்இந்தியா இந்தியாn
துணைவர்நீலம் சோதி

நவ்தீப் குமார் சோதி (Nauvdip Kumar Sodhi) [1] ஓர் இந்திய நீதிபதியாவார். கேரளா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார் [2] . பத்திரங்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றினார் [3] .

தொழில்[தொகு]

சோதி 1965 ஆம் ஆண்டில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து பட்டம் பெற்றார். சண்டிகரில் உரிமையியல் , அரசியலமைப்பு, தொழிலாளர், வரி, போக்குவரத்து மற்றும் கூட்டாண்மைச் சட்டங்களில் வழக்கறிஞராகப் பயிற்சி செய்யத் தொடங்கினார். இந்திய சட்ட அறிக்கைகளின் (பஞ்சாப் மற்றும் அரியானா தொடர்கள்) ஆசிரியராகவும் பணியாற்றினார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர சட்ட ஆசிரியராக இருந்தார். 1991 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்த்தப்பட்டார். பின்னர் இவர் கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் செயல் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆனார். நீதிபதியாக சோதி அங்கிருந்து கர்நாடகாவிற்கு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். 29 நவம்பர் 2005 அன்று ஓய்வுபெறும் வயதை அடைந்தவுடன் தனது பதவியை விட்டு விலகினார். ஓய்வுக்குப் பிறகு மும்பையில் உள்ள பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைமை அதிகாரியாக ஆறு வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டார் [4] .

இறப்பு[தொகு]

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பிறகு, சோதி கடுமையான சுவாசக் கோளாறு நோய்க்குறியால் பாதிக்கப்பட்டார், சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு 28.12.2021 அன்று தனது 78 வயதில் கோவிட்-19 பாதிப்பால் மரணமடைந்தார்.[5] .

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gazette Archive". 16 Dec 2015. பார்க்கப்பட்ட நாள் 13 Jul 2022 – via archive.org.
  2. "Former Karnataka chief justice N K Sodhi passes away". 30 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 7 Jun 2022 – via deccanherald.com.
  3. "Securities Appellate Tribunal Official Website". பார்க்கப்பட்ட நாள் 8 Jun 2022 – via sat.gov.in.
  4. "Former CJ of Kerala and Karnataka HC, Justice NK Sodhi passes away". 29 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 7 Jun 2022 – via indianexpress.com.
  5. "Former chief justice NK Sodhi succumbs to Covid". 29 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 7 Jun 2022 – via hindustantimes.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ்தீப்_குமார்_சோதி&oldid=3460613" இலிருந்து மீள்விக்கப்பட்டது