நவரை (நெல் பருவம்)
Jump to navigation
Jump to search
குளிர் காலமான நவரைப் பருவம் (Navarai Season) வேளாண் வழக்கு நவரைப் பட்டம் என்பது; தென்னிந்திய மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலத்தையும், மற்றும் சாகுபடி கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். டிசம்பர் - சனவரி (தமிழ்: மார்கழி - தை) மாதங்களில் துவங்கும் இப்பருவம், ஏப்ரல் - மே (தமிழ்: சித்திரை - வைகாசி) மாதங்களில் முடிவடைகிறது.[1]
120 நாட்களைக் கொண்ட இந்த நவரைப் பருவம், குறுகியகால நெல் வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.
பருவ அட்டவணை[தொகு]
விதைக்கும் மாதம் | கால அளவு (நாட்கள்) | தகுந்த இரகங்கள் | பயிரிடும் இடங்கள் |
---|---|---|---|
அக்டோபர் - நவம்பர் | 120 | குறுகியகாலம் | திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கூடலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், மதுரை, தேனி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், தருமபுரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.[2] |
- நவரை பருவத்தில் தமிழகத்தின் மாவட்ட வாரியாக பயிரிடப்படும் நெல் இரகங்கள்.[3]