நள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவர்[1] மலைவளம் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர். இவனது மலை தோட்டி மலை என்பதாகும்.[2] நள்ளி, தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும், வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர்.நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நள்ளி&oldid=3851739" இலிருந்து மீள்விக்கப்பட்டது