உள்ளடக்கத்துக்குச் செல்

நல்ல தங்காள் (1955 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்ல தங்காள்
திரைப்பட பதாகை
இயக்கம்பி. வி. கிருஷ்ண ஐயர்
திரைக்கதைஏ. கே. வேலன்
இசைஜி. இராமநாதன்
நடிப்புஆர். எஸ். மனோகர்
ஜி. வரலட்சுமி
ஏ. பி. நாகராஜன்
ஜே. பி. சந்திரபாபு
ஒளிப்பதிவுவாசுதேவ ராவ், கர்நாடகி
படத்தொகுப்புபால் ஜி. யாதவ்
கலையகம்மதராஸ் மூவிடோன்
வெளியீடு29 டிசம்பர் 1955 (1955-12-29)(இந்தியா)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நல்ல தங்காள் (Nalla Thangal) 1955 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இத் திரைப்படத்தின் இயக்குநர் பி. வி. கிருஷ்ண ஐயர்.[2] ஆர். எஸ். மனோகர், ஜி. வரலட்சுமி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

கதைச் சுருக்கம்

[தொகு]

பெண்ணின் பெருமைக்கு உதாரணமான அன்புச் செல்வம் நல்லதங்காள். அவளை, பண்பையும் பாசத்தையும் கொட்டி வளர்த்தார் அவள் அண்ணன் நல்லண்ணன். வளர்ந்தாள்; அவள் வாழ்வில் பருவ மென்னும் வசந்தம் பூத்தது. தன்னையொத்த மன்னவனைத் தேடி தங்கையை மணமுடித்துக் கொடுத்தான்! சீரும் சிறப்பும், அதற்கு முன்னும் பின்னும் யாரும் செய்யாத அளவு செய்தான்! அதனால் அருவெறுப்பும் குரோதமும் கொண்டாள் அண்ணி அலங்காரி! அண்ணனுக்கும் தங்கைக்கும் மிடையே தன் சாகசத் திரையை விடுத்தாள். காசி வளநாட்டு அரசியாகச் சென்ற நல்லதங்கம் காலா காலத்தில் ஏழு மக்களுக்குத் தாயானாள். அவர்கள் அன்பின் சிகரத்தில் இன்ப விளக்காகப் பிரகாசித்தனர். இந்நிலையில் இயற்கை அவர்களை சோதித்தது. அனால் காசி வளநாடு பாலைவனமாயிற்று. பஞ்சத்தின் வஞ்சத்திலிருந்து தப்ப அண்ணன் உதவியைக் கோரி ஓலை விடுத்தனர். அது அண்ணன் கண்ணின் படாமலே மறைத்து விட்டாள் காதகி அலங்காரி. தங்கையை ஒரு முறை நேரில் காண பாசத்தால் உந்தப்பட்டு பறப்பட்ட அண்ணனையும் சூதாக நிறுத்தி விட்டாள் அலங்காரி. தங்கம் தானே தமையன் வீடு தேடிப் புறப்பட்டாள்! ஏழு மக்களும் தாயும் இன்னல்கள் பல கடந்து மதுரை வந்தனர். அப்போது அண்ணன் அவளைத் தேடிச் சென்றிருந்தான். அண்ணி கதவடைத்தாள். தங்கத்தோடு இளமை முதல் பழகிய பட்டத்து யானை தாழ் திறந்து வரவேற்றது. ஆவலோடு உள் நுழைந்த அருமை மருமக்களை ஆகாதடித்து விரட்டினாள். பரிவோடு உதவிய ஏழைகளைச் சித்திரவதை செய்தாள். தங்கம் அவமானத்தோடு வந்த வழியே திரும்பினாள். காசி செல்வதற்கு அவள் மனம் ஒப்பவில்லை. வறுமையை வெல்ல ஒரே வழி சாவதென்று கருதினாள். ஏழு மக்களோடு தானும் பாழுங் கிணற்றில் பலியானாள். இதற்கிடையில் காசி சென்று அந்தக் கோரக் காட்சியைப் பாரத்துப் பதைத்த அண்ணன் தங்கை தன்னைத் தேடிப் போயிருக்கிறாள் என்பதறிந்து ஊர் திரும்பி, அங்கே தங்கை தள்ளிக் கதவடைக்கப்பட்டாள் என்ற தகவலறிந்து தணலில் விழுந்த புழுவாகத் துடித்தான். அலங்காரியின் சாகசத் திரையைக் கிழித்தெறிந்து விட்டு, தங்கையைத் தேடி கானகம் வந்து, நொந்த மனத்தோடு தானும் அவர்களைத் தொடரந்தான். மனைவியும் மக்களும் மைத்துனரும் மாண்டார்கள் என்பதறிந்த காசி ராஜன் சிந்தை கலைந்தான். தெய்வத்தையே சீறினான். அதற்கு விடையும் முடிவும் மீதிக் கதை.[3]

நடிகர்கள், தயாரிப்புக் குழு

[தொகு]

பின்வரும் பட்டியல்களிலுள்ள விபரம் பிலிம் நியூஸ் ஆனந்தன் தரவுத் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.[1]

நடிகர், நடிகையர்

[தொகு]

தயாரிப்புக் குழு

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

நல்லதங்காள் என்ற பெயரில் 1935 ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளியானது. 1955 முற்பகுதியில் இதே கருத்துள்ள தலைப்புடன் நல்ல தங்கை என்ற திரைப்படம் வெளியானது.

பாடல்கள்

[தொகு]

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. இராமநாதன். மாயூரம் வேதநாயகம் பிள்ளை, அ. மருதகாசி ஆகியோர் பாடல்களை இயற்றியிருந்தனர். ஜே. பி. சந்திரபாபு ஒரு பாடல் பாடியிருக்கிறார். சீர்காழி கோவிந்தராஜன், ஜி. இராமநாதன், டி. பி. இராமச்சந்திரன், டி. எம். சௌந்தரராஜன், வி. டி. இராஜகோபாலன், பி. லீலா, என். எல். கானசரஸ்வதி, கே. ஜமுனாராணி, உடுதா சரோஜினி, நிர்மலா, ஏ. பி. கோமளா, டி. வி. இரத்தினம், ஏ. ஜி. இரத்னமாலா ஆகியோர் பின்னணி பாடியுள்ளனர்.[4]

எண். பாடல் பாடகர்/கள் பாடலாசிரியர் கால அளவு
1 கண்ணின் கருமணியே சீர்காழி கோவிந்தராஜன் & பி. லீலா 03:40
2 இவளே அவளே என். எல். கானசரஸ்வதி 04:40
3 வாடாத மரிக்கொழுந்தே டி. பி. இராமச்சந்திரன் & கே. ஜமுனாராணி 02.50
4 பச்சை படகு விரித்தது போல் கே. ஜமுனாராணி, உடுதா சரோஜினி & நிர்மலா 02:02
5 இத்தனை நாளா எங்கேடி போனே ஜி. இராமநாதன் & கே. ஜமுனாராணி 02:09
6 கோமள செழுந்தாமரை எழில் மேவிய பி. லீலா, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. இரத்னமாலா
டி. வி. இரத்தினம் & உடுதா சரோஜினி,
அ. மருதகாசி 02:37
7 பொன்னே புதுமலரே டி. எம். சௌந்தரராஜன் அ. மருதகாசி 03:30
8 கள்ளமில்லா வெள்ளை மனம் காட்டும் 01:32
9 உனைக் கண்டு மயங்காத ஜே. பி. சந்திரபாபு 01:18
10 திருவுள்ளம் இரங்காதா சீர்காழி கோவிந்தராஜன் அ. மருதகாசி 02:20
11 அடி சீனி சக்கரை கட்டி வி. டி. ராஜகோபாலன்
12 அன்னையும் தந்தையும் இல்லாத பி. லீலா அ. மருதகாசி 03:31
13 திங்களொடு கங்கையை 01:58
14 கோமள செழுந்தாமரை எழில் மேவிய
(சோகம்)
02:37

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 1.2 சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 30 March 2017.
  2. "Nalla Thangal (1955 - Tamil)". gomolo.com. Archived from the original on 16 மார்ச் 2012. Retrieved 30 மார்ச் 2017.
  3. "நல்லதங்காள்" (PDF). தமிழிணையம் - மின்னூலகம், தமிழ் இணைய நூலகம் , Tamil Digital Library (in ஆங்கிலம்). Retrieved 2025-04-30.
  4. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 94.

வெளியிணைப்புகள்

[தொகு]